கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் திமுக அரசைக் கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

09:59 PM (IST) Aug 26
ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது.
09:03 PM (IST) Aug 26
தமிழக விமான நிலையங்களில் இளநிலை உதவியாளர் வேலை அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
09:02 PM (IST) Aug 26
இலவசம் குறித்த வழக்கில் திமுக முன்வைத்த வாதங்கள் உச்சநீதிமன்றத்தால் ஏற்க்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு: மேலும் படிக்க
09:00 PM (IST) Aug 26
திருவள்ளுவர் திருக்குறளில் ஆதிபகவன் என கூறி தான் ஒரு ஆன்மீகவாதி என்பதை வெளிப்படுத்தியுள்ளார் என பேசி ஆளுநர் ஆர்.என் ரவி தனது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார் என பழ. நெடுமாறான் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: மேலும் படிக்க
09:00 PM (IST) Aug 26
லைக்கா நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க
08:59 PM (IST) Aug 26
அம்மா பல்கலைகழகத்தை மூடி மாணவர்களின் கல்வியில் மண்ணைப்போட்ட திமுக அரசு தற்போது கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தி மக்களின் மக்களை குடிநீருக்கு கையேந்த வைத்துள்ளது என திமுக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: மேலும் படிக்க
08:58 PM (IST) Aug 26
இது என் நண்பன் உதயநிதி படித்த கல்லூரி அதனால்தான் நான் இந்த கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போகுமிடமெல்லாம் உதயநிதி என் நண்பன், எங்களது நட்பு ஆழமானது அப்படி இப்படி என தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது .மேலும் படிக்க
08:57 PM (IST) Aug 26
அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என நடிகர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ்சை நேரில் சந்தித்து உரையாற்றிய பாக்கியராஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் படிக்க
08:57 PM (IST) Aug 26
அதிமுக என்னும் கட்சியை காப்பாற்ற ஒபிஎஸ் பின்னால் தொண்டர்கள் அணிவகுக்க வேண்டும் என மருது அழகுராஜ் வலியுறுத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:மேலும் படிக்க
08:56 PM (IST) Aug 26
திமுக ஆட்சியில் காவல்துறையினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ஒரே வரிகள் சொல்லிவிட்டார் கே. என் நேரு என்றும், வெள்ளந்தியாக பேசுவதாக எண்ணி திமுகவின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றியிருக்கிறார் அவர் என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
08:55 PM (IST) Aug 26
ஆந்திராவில் நடந்ததைப் போல மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சிக்கு வரப் போகும் சம்பவம் தமிழகத்தில் நடக்கப் போகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினையும் அவரது மருமகன் சபரீசனையும் கருத்திக் கொண்டே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
08:29 PM (IST) Aug 26
தந்தையே மது போதையில் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
07:54 PM (IST) Aug 26
பேய் விரட்டுவதாக கூறி 13 வயது சிறுமியையும், அவளது தம்பியையும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
07:21 PM (IST) Aug 26
நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் தான் கடும் போட்டிகளுக்கு நடுவே 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி சேவையை தனக்கு சொந்தமாக்கியுள்ளது.
06:30 PM (IST) Aug 26
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை, பாஜக விலைக்கு வாங்கச் செயல்பட்டுவருவதாகவும் ஆம் ஆத்மி மட்டத்தில் செய்திகள் வெளிவந்தன.
05:41 PM (IST) Aug 26
அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரை கடத்தி ஒன்றறை கோடி ரூபாய் பணம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
05:00 PM (IST) Aug 26
சென்னையில் 2வது விமான நிலையம் அமையவுள்ள பரந்தூரில் விவசாய நிலங்கள் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
04:29 PM (IST) Aug 26
மெக்சிகோவில் உள்ள சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் உள்ள சலினாஸ் டி ஹில்டால்கோ என்ற மருத்துவமனையில் தான், இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
03:11 PM (IST) Aug 26
‘மக்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைக்கலாம்' என்று கூறப்பட்டது.
02:56 PM (IST) Aug 26
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இதுவரை 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தொகுப்பாளர் ரக்ஷன், தொகுப்பாளினி டிடி, இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா, பாடகி ராஜ லட்சுமி, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார், சீரியல் நடிகைகள் ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை ஷில்பா மஞ்சுநாத் மற்றும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் படிக்க
02:27 PM (IST) Aug 26
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குரல் போல் மிமிக்ரி செய்து ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
01:43 PM (IST) Aug 26
தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா, தற்போது சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அவர் அஜீரணக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
01:24 PM (IST) Aug 26
குடிக்க பணம் தர மறுத்த மனைவியை எரித்துகொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
12:43 PM (IST) Aug 26
அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, எதிர்காலத்தை தொலைத்துவிட்ட ஓபிஎஸ், தன்னை நிலைநிறுத்தி கொள்ள மௌனயுத்தலிருந்து தற்போது தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
12:28 PM (IST) Aug 26
லைகர் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மாஸ் காட்டி உள்ளது. இப்படம் அதிகபட்சமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.14 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதேபோல் இதன் இந்தி பதிப்பும் முதல் நாளில் ரூ.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதர மொழிகளெல்லாம் சேர்த்து இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.20-ல் இருந்து ரூ.22 கோடி வரை வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
12:26 PM (IST) Aug 26
அதிமுக தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொண்டர்கள் உள்ளனர். அததிமுக ஆட்சி காலத்தில் தான் மக்களுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது. திமுக அரசு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மேலும், மதுரை மாநகராட்சி மேயராக உள்ள இந்திராணி நிதியமைச்சரின் நிழலாக செயல்படுகிறார், அவர் கீ கொடுத்தால் மட்டுமே மேயர் செயல்படுகிறார். எந்தவொரு பணிகளும் செயல்படுத்தவில்லை, மாநகராட்சி இயங்குகிறதா? என தெரியவில்லை.
12:21 PM (IST) Aug 26
கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரண்டு ஆசிரியைகள் உட்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12:12 PM (IST) Aug 26
கொடநாடு கொலை வழக்கில் இன்று விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் செல்போன் பதிவுகள், தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க டிராய் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என அரசு தரப்பு தெரிவித்துள்ளது
11:30 AM (IST) Aug 26
பாரதமாதா சிலை வைக்கப்பட்டிருந்த வளாகத்தை உடைத்து உள்ளே சென்ற வழக்கில் பாஜக மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் நேற்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் படிக்க..
11:14 AM (IST) Aug 26
காரில் கடத்தப்பட்ட கொ.ம.தே.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டு அவரது உடல் ஏரியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11:12 AM (IST) Aug 26
இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
10:34 AM (IST) Aug 26
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளுக்குச் செரிமான மண்டலத்தில் பிரச்சனை இருப்பதால் அதற்கான உயர் சிகிச்சை வழங்குவதற்காக அவரை நேற்று ஜெர்மன் அழைத்துச் சென்றுள்ளனர்.
10:33 AM (IST) Aug 26
திருச்சி, ஶ்ரீரங்கம் அருகே பள்ளி வேன் மற்றும் பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 3 மாணவர்கள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10:22 AM (IST) Aug 26
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை நடிகர் தனுஷ் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு கிடைத்த வெற்றி என்பதால் படக்குழுவினருக்கு பார்ட்டியும் கொடுத்துள்ளார் தனுஷ். அதில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆனால் தனுஷ் கொடுத்த இந்த சக்சஸ் பார்ட்டியில் படத்தின் ஹீரோயின்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
09:54 AM (IST) Aug 26
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதை வச்சு அரசியல் பன்னலாம் என அண்ணாமலை பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
09:37 AM (IST) Aug 26
நடிகர் சந்தானம் மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். நேற்று சென்னையில் நடந்த கேப்டன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் கலந்துகொண்ட சந்தானம், ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் நடித்தால் அதில் காமெடியனாக நடிக்க தயார் என கூறினார். மேலும் படிக்க
09:34 AM (IST) Aug 26
கோவில்பட்டியில் பெய்த மழையின் காரணமாக இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதில், பள்ளி வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டுதால் குழந்தைகள் கதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
09:29 AM (IST) Aug 26
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
08:48 AM (IST) Aug 26
மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது தாக்குதல் வழக்கில் கைதான பாஜகவை சேர்ந்த தனலட்சுமி மற்றும் தெய்வானை இருவருக்கும் ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சரண்யா என்பவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
08:45 AM (IST) Aug 26
வெந்து தணிந்தது காடு படம் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட்டை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக சமீபத்திய பேட்டியில் அவர் அறிவித்துள்ளார். முதல் பாகம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த பாகத்திற்கான ஷூட்டிங் தற்போது லக்னோவில் நடைபெற்று வருவதாக அவர் கூறி உள்ளார். மேலும் படிக்க