Published : Aug 26, 2022, 07:19 AM ISTUpdated : Aug 26, 2022, 09:59 PM IST

Tamil News live : திமுகவுக்கு எதிராக அதிமுக.. போராட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி !

சுருக்கம்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் திமுக அரசைக் கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டம்  நடத்த உள்ளதாக அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 Tamil News live : திமுகவுக்கு எதிராக அதிமுக.. போராட்டத்தை அறிவித்த  எடப்பாடி பழனிசாமி !

09:59 PM (IST) Aug 26

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. முதல்வரை சந்திக்கும் ஸ்ரீமதியின் பெற்றோர் - அதிரடி திருப்பம்

ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க

09:03 PM (IST) Aug 26

டிகிரி மட்டும் போதும்.. தமிழக விமான நிலையங்களில் அருமையான வேலைவாய்ப்பு - முழு தகவல்கள் !

தமிழக விமான நிலையங்களில் இளநிலை உதவியாளர் வேலை அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

09:02 PM (IST) Aug 26

அரசு கொடுக்கும் இலவச தேர்தல் வாக்குறுதிகளில் நீதிமன்றம் தலையிடவே முடியாது.. திமுக முன் வைத்த

இலவசம் குறித்த வழக்கில் திமுக முன்வைத்த வாதங்கள் உச்சநீதிமன்றத்தால் ஏற்க்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு: மேலும் படிக்க
 

09:00 PM (IST) Aug 26

தமிழ் மொழி, பண்பாடு தெரியலன்னா வாய்மூடி அமைதியா இருங்க.. ஆளுநர் ஆர்.என் ரவியை பங்கம் செய்த பழ. நெடுமாறன்.

திருவள்ளுவர் திருக்குறளில் ஆதிபகவன் என கூறி தான் ஒரு ஆன்மீகவாதி என்பதை வெளிப்படுத்தியுள்ளார் என பேசி ஆளுநர் ஆர்.என் ரவி தனது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார் என பழ. நெடுமாறான் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: மேலும் படிக்க
 

09:00 PM (IST) Aug 26

. லைகாவுக்கு 21 கோடி கடன் பாக்கி.. சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சொல்லி நடிகர் விஷாலுக்கு ஆப்பு.


லைக்கா நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க


 

08:59 PM (IST) Aug 26

அதிமுக திட்டத்திற்கு ஸ்டாலின் அரசு மூடுவிழா.. CV.சண்முகத்தை களமிறக்கிய எடப்பாடி.. திண்டிவனத்தில் தரமான சம்பவம்.

அம்மா பல்கலைகழகத்தை மூடி மாணவர்களின் கல்வியில் மண்ணைப்போட்ட திமுக அரசு தற்போது கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தி மக்களின் மக்களை குடிநீருக்கு கையேந்த வைத்துள்ளது என திமுக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: மேலும் படிக்க

08:58 PM (IST) Aug 26

இது என் நண்பன் படித்த கல்லூரி.. போகும் இடமெல்லாம் உதய் புராணம் பாடும் அன்பில் மகேஷ்.. கடுப்பில் ஸ்டாலின்.?

இது என் நண்பன் உதயநிதி படித்த கல்லூரி அதனால்தான் நான் இந்த கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போகுமிடமெல்லாம் உதயநிதி என் நண்பன், எங்களது நட்பு ஆழமானது அப்படி  இப்படி என தொடர்ந்து  அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது .மேலும் படிக்க


 

08:57 PM (IST) Aug 26

ஓபிஎஸ் உடன் இயக்குநர் பாக்கியராஜ் சந்திப்பு.. அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை.

அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என நடிகர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ்சை நேரில் சந்தித்து உரையாற்றிய பாக்கியராஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் படிக்க
 

08:57 PM (IST) Aug 26

அதிபர் நினைப்பில் எடப்பாடி.. அதிமுகவை பட்டாபோட்டு தராச் செல்லி அடம்பிடிக்கிறார். மருது அழகுராஜ்.

அதிமுக என்னும் கட்சியை காப்பாற்ற  ஒபிஎஸ் பின்னால் தொண்டர்கள் அணிவகுக்க வேண்டும் என மருது அழகுராஜ் வலியுறுத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:மேலும் படிக்க
 

08:56 PM (IST) Aug 26

திமுகவை டேமேஜ் பண்ண அதிமுக தேவையில்ல... கே.என் நேரு போதும்போல.. திராவிட மாடலை கழுவி ஊற்றிய நாராயணன் திருப்பதி..

திமுக ஆட்சியில் காவல்துறையினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ஒரே  வரிகள் சொல்லிவிட்டார் கே. என் நேரு என்றும், வெள்ளந்தியாக பேசுவதாக எண்ணி திமுகவின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றியிருக்கிறார் அவர் என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். மேலும் படிக்க

 
 

08:55 PM (IST) Aug 26

"மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சியை பிடிக்க போகிறார் ".. திமுக கோட்டையில் வெடி வைத்த ஜெயக்குமார்.

ஆந்திராவில் நடந்ததைப் போல மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சிக்கு வரப் போகும் சம்பவம் தமிழகத்தில் நடக்கப் போகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  முதலமைச்சர் ஸ்டாலினையும் அவரது மருமகன் சபரீசனையும் கருத்திக் கொண்டே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
 

08:29 PM (IST) Aug 26

மது போதையில் பெற்ற மகள்களையே.. ஒரு தந்தை செய்யுற காரியமா இது? அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

தந்தையே மது போதையில் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

07:54 PM (IST) Aug 26

பேய் ஓட்டுகிறேன், 13 வயது சிறுமி & தம்பிக்கு நேர்ந்த விபரீதம் - மதபோதகர் செய்த வெறிச்செயல் !

பேய் விரட்டுவதாக கூறி 13 வயது சிறுமியையும், அவளது தம்பியையும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

07:21 PM (IST) Aug 26

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. 2030க்குள் 6ஜி வருது - பிரதமர் வெளியிட்ட சூப்பர் தகவல் !

நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் தான் கடும் போட்டிகளுக்கு நடுவே 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி சேவையை தனக்கு சொந்தமாக்கியுள்ளது.

மேலும் படிக்க

06:30 PM (IST) Aug 26

“ஆப்ரேசன் லோட்டஸ்.. 277 எம்எல்ஏக்கள், 5,500 கோடி.. பாஜகவை வெளுத்து வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் !”

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை, பாஜக விலைக்கு வாங்கச் செயல்பட்டுவருவதாகவும் ஆம் ஆத்மி மட்டத்தில் செய்திகள் வெளிவந்தன.

மேலும் படிக்க

05:41 PM (IST) Aug 26

“அதிமுக முக்கிய பிரமுகர் கடத்தல்.. கொங்கு மண்டலத்தில் பரபரப்பு.! அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்”

அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரை கடத்தி ஒன்றறை கோடி ரூபாய் பணம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

05:00 PM (IST) Aug 26

“சென்னைக்கு 2வது விமான நிலையம் தேவையா ? நான் இருக்கும் வரைக்கும் நடக்காது” - கொதிக்கும் சீமான்!

சென்னையில் 2வது விமான நிலையம் அமையவுள்ள பரந்தூரில் விவசாய நிலங்கள் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 

மேலும் படிக்க

04:29 PM (IST) Aug 26

இறுதி சடங்கில் உயிரோடு எழுந்து வந்த சிறுமி.. உறவினர்களுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

மெக்சிகோவில் உள்ள சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் உள்ள சலினாஸ் டி ஹில்டால்கோ என்ற மருத்துவமனையில் தான், இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

மேலும் படிக்க

03:11 PM (IST) Aug 26

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !

‘மக்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைக்கலாம்' என்று கூறப்பட்டது.

மேலும் படிக்க

02:56 PM (IST) Aug 26

விறுவிறுக்கும் ‘பிக்பாஸ் சீசன் 6’ பணிகள்.. இதுவரை 10 போட்டியாளர்களை தட்டி தூக்கிய பிக்பாஸ் குழு- அவர்கள் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இதுவரை 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தொகுப்பாளர் ரக்‌ஷன், தொகுப்பாளினி டிடி, இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா, பாடகி ராஜ லட்சுமி, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார், சீரியல் நடிகைகள் ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை ஷில்பா மஞ்சுநாத் மற்றும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.  மேலும் படிக்க

02:27 PM (IST) Aug 26

அண்ணாமலை குரலில் மிமிக்ரி செய்து ஆடியோ வெளியீடு..? அதிரடியாக களத்தில் இறங்கிய பாஜக.. சைபர் கிரைமில் புகார்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குரல் போல் மிமிக்ரி செய்து ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க..

01:43 PM (IST) Aug 26

பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு... திடீரென வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது ஏன்? - வெளியான பரபரப்பு தகவல்

தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா, தற்போது சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அவர் அஜீரணக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

01:24 PM (IST) Aug 26

சரக்கு அடிக்க பணம் தராத மனைவி.. போதையில் துடிதுடிக்க கொன்ற கணவருக்கு சரியான ஆப்பு வைத்த நீதிமன்றம்.!

குடிக்க பணம் தர மறுத்த மனைவியை எரித்துகொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க

12:43 PM (IST) Aug 26

அதிமுகவினரை விலைக்கு வாங்க பேரம் பேசும் ஓபிஎஸ்.? தரம் தாழ்ந்த செயலை வரலாறு மன்னிக்காது- ஆர்பி உதயகுமார் ஆவேசம்

அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, எதிர்காலத்தை தொலைத்துவிட்ட ஓபிஎஸ், தன்னை நிலைநிறுத்தி கொள்ள மௌனயுத்தலிருந்து தற்போது தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..
 

12:28 PM (IST) Aug 26

படம் சுமாரு... ஆனால் வசூல் படு ஜோரு! முதல் நாளில் அமீர்கான் படத்தைவிட அதிக கலெக்‌ஷனை அள்ளிய லைகர்

லைகர் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் மாஸ் காட்டி உள்ளது. இப்படம் அதிகபட்சமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.14 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதேபோல் இதன் இந்தி பதிப்பும் முதல் நாளில் ரூ.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதர மொழிகளெல்லாம் சேர்த்து இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.20-ல் இருந்து ரூ.22 கோடி வரை வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

12:26 PM (IST) Aug 26

தீர்ப்பு எப்படி வந்தாலும் கவலையில்லை.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுக தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு  கவலையில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொண்டர்கள் உள்ளனர். அததிமுக ஆட்சி காலத்தில் தான் மக்களுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது. திமுக அரசு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மேலும், மதுரை மாநகராட்சி மேயராக உள்ள இந்திராணி நிதியமைச்சரின் நிழலாக செயல்படுகிறார், அவர் கீ கொடுத்தால் மட்டுமே மேயர் செயல்படுகிறார். எந்தவொரு பணிகளும் செயல்படுத்தவில்லை, மாநகராட்சி இயங்குகிறதா? என தெரியவில்லை. 

12:21 PM (IST) Aug 26

ஸ்ரீமதி உடலில் கைரேகைகள்! அதிக காயங்கள் இருந்ததாக கூறியும் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர்,  இரண்டு ஆசிரியைகள் உட்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

12:12 PM (IST) Aug 26

கொடநாடு கொலை வழக்கு..! செல்போன் பதிவுகள் கண்டறிய டிராய் ஒத்துழைப்பு அளிக்கவில்லை- தமிழக அரசு புகார்

கொடநாடு கொலை வழக்கில் இன்று விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் செல்போன் பதிவுகள், தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க டிராய் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என அரசு தரப்பு தெரிவித்துள்ளது 

மேலும் படிக்க..

11:30 AM (IST) Aug 26

சிறையை காட்டி அச்சப்படுத்த முடியாது..! இனி தான் ஆட்டத்தை பார்க்கப்போறீங்க...! ஸ்டாலினை எச்சரிக்கும் பாஜக

பாரதமாதா சிலை வைக்கப்பட்டிருந்த வளாகத்தை உடைத்து உள்ளே சென்ற வழக்கில் பாஜக மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் நேற்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் படிக்க..

11:14 AM (IST) Aug 26

கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி காரில் கடத்தி கொடூர கொலை.. நெஞ்சு, பின்னந்தலையில் சரமாரி வெட்டு.!

காரில் கடத்தப்பட்ட கொ.ம.தே.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டு அவரது உடல் ஏரியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

11:12 AM (IST) Aug 26

இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு.. நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

10:34 AM (IST) Aug 26

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு... சிகிச்சைக்காக அவசரமாக ஜெர்மனி பயணம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளுக்குச் செரிமான மண்டலத்தில் பிரச்சனை இருப்பதால் அதற்கான உயர் சிகிச்சை வழங்குவதற்காக அவரை நேற்று ஜெர்மன் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க..

10:33 AM (IST) Aug 26

பள்ளி வேன் - பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதல்.. 10 பேர் காயம்

திருச்சி, ஶ்ரீரங்கம் அருகே பள்ளி வேன் மற்றும் பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 3 மாணவர்கள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

10:22 AM (IST) Aug 26

திருச்சிற்றம்பலம் தந்த பிளாக்பஸ்டர் ஹிட்! நடிகைகள் இன்றி சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய தனுஷ் - வைரலாகும் போட்டோஸ்

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை நடிகர் தனுஷ் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு கிடைத்த வெற்றி என்பதால் படக்குழுவினருக்கு பார்ட்டியும் கொடுத்துள்ளார் தனுஷ். அதில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆனால் தனுஷ் கொடுத்த இந்த சக்சஸ் பார்ட்டியில் படத்தின் ஹீரோயின்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

09:54 AM (IST) Aug 26

பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீச்சு ஆடியோ..! இது அண்ணாமலை குரல் தான், ஆனால் ...! பகீர் கிளப்பும் பாஜக நிர்வாகி

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதை வச்சு அரசியல் பன்னலாம் என அண்ணாமலை பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

09:37 AM (IST) Aug 26

வீட்ல சும்மா தான் இருக்கேன்... மீண்டும் காமெடியனாக நடிக்க தயார் - கேப்டன் பட விழாவில் ஓப்பனாக பேசிய சந்தானம்

நடிகர் சந்தானம் மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். நேற்று சென்னையில் நடந்த கேப்டன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் கலந்துகொண்ட சந்தானம், ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் நடித்தால் அதில் காமெடியனாக நடிக்க தயார் என கூறினார்.  மேலும் படிக்க

09:34 AM (IST) Aug 26

ரயில்வே சுரங்கப்பாதையை சூழ்ந்த வெள்ளம்.. சிக்கிக்கொண்ட பள்ளி வாகனம்.. அலறித்துடித்த குழந்தைகளால் பரபரப்பு.!

கோவில்பட்டியில் பெய்த மழையின் காரணமாக இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.  இதில், பள்ளி வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டுதால் குழந்தைகள் கதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க

09:29 AM (IST) Aug 26

நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

08:48 AM (IST) Aug 26

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு.. 2 பெண்களுக்கு ஜாமீன் வழங்கி.. ஒரு பெண்ணுக்கு ஆப்பு வைத்த நீதிபதி.!

மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல்  தியாகராஜன் கார் மீது தாக்குதல் வழக்கில் கைதான பாஜகவை சேர்ந்த தனலட்சுமி மற்றும் தெய்வானை இருவருக்கும் ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சரண்யா என்பவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

மேலும் படிக்க

08:45 AM (IST) Aug 26

கே.ஜி.எஃப் பாணியில் ரிலீசாகும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு... கவுதம் மேனன் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்

வெந்து தணிந்தது காடு படம் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட்டை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக சமீபத்திய பேட்டியில் அவர் அறிவித்துள்ளார். முதல் பாகம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த பாகத்திற்கான ஷூட்டிங் தற்போது லக்னோவில் நடைபெற்று வருவதாக அவர் கூறி உள்ளார். மேலும் படிக்க