பேய் ஓட்டுகிறேன், 13 வயது சிறுமி & தம்பிக்கு நேர்ந்த விபரீதம் - மதபோதகர் செய்த வெறிச்செயல் !
பேய் விரட்டுவதாக கூறி 13 வயது சிறுமியையும், அவளது தம்பியையும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம், பாலராமபுரத்தை சேர்ந்தவர் ஜோஸ் பிரகாஷ். இவை போதகராக இருக்கிறார். இவரது வீட்டின் அருகே வசித்த தம்பதியின் 13 வயது பெண் குழந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்த சிறுமியை பார்த்த போதகர் ஜோஸ் பிரகாஷ், அந்த சிறுமிக்கும், அவரது தம்பிக்கும் பேய் பிடித்திருப்பாக கூறி உள்ளார். தான் பேய் ஓட்டி இருவரையும் குணப்படுத்துவதாகவும், சிறுமியின் பெற்றோரிடம் கூறி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !
இதனை நம்பி பெற்றோர், தன்னுடைய மகள் மற்றும் மகனை அவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது போதகர் ஜோஸ் பிரகாஷ் சிறுமியையும், சிறுவனையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோஸ் பிரகாசை கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேசன் லோட்டஸ்.. 277 எம்எல்ஏக்கள், 5,500 கோடி.. பாஜகவை வெளுத்து வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் !”
இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. இது தொடர்பான வழக்கு மஞ்சேரியில் உள்ள போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாஸ்டர் ஜோஸ் பிரகாஷை அவரது ஆயுள்காலம் முழுவதும் சிறையில் அடைக்கவும், ₹2.75 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”