தந்தையே மது போதையில் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரியில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் 30 வயதான சரவணன். இவர் அந்த பகுதியில் பெயிண்டராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”

சரவணனுக்கு மது பழக்கம் இருப்பதால், அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் சரவணனின் மனைவி தன் பிள்ளைகளை கணவரிடம் விட்டு விட்டு சண்டை போட்டு கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பிறகு சரவணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது பெண் குழந்தைகளின் அந்தரங்க உறுப்பு மற்றும் மார்பகங்களில் நக கீறல் காயங்கள் இருப்பதை கண்டுள்ளார். இதுபற்றி குழந்தைகளிடம் கேட்ட பொது, இரவில் தந்தை தங்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்று கூற, அதிர்ச்சியடைந்த மனைவி உடனே காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

மேலும் செய்திகளுக்கு..வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !

உடனே முத்தியால்பேட்டை போலீசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். தந்தையே மது போதையில் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேசன் லோட்டஸ்.. 277 எம்எல்ஏக்கள், 5,500 கோடி.. பாஜகவை வெளுத்து வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் !”