MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு லலிதா கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 13 2026, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கணவருடன் கருத்து வேறுபாடு
Image Credit : Google

கணவருடன் கருத்து வேறுபாடு

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமலைவாசன். இவரது மனைவி லலிதா (23). இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஹர்சன்ராஜ்(5), ஒன்றரை வயதில் புவன்ராஜ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு லலிதா தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் சிறுவாச்சூரில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தார். மூத்த மகன் ஹர்சன்ராஜ் தந்தையுடன் இருந்து வந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
குழந்தையின் சாவில் மர்மம்
Image Credit : our own

குழந்தையின் சாவில் மர்மம்

இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி குழந்தை புவன்ராஜுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தாய் லலிதா அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இதனிடையே தனது குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக குழந்தையின் தந்தை தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

School Holiday: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!

Related Articles

Related image1
Vijayadharani Join TVK: பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி.. யார் இவர்? இணைய இதுதான் காரணமா?
Related image2
Free Sewing Machine: பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?
34
தலைமறைவான லலிதா
Image Credit : Google

தலைமறைவான லலிதா

இதனையடுத்து மர்ம மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு லலிதா திடீரென மாயமானதை அடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

44
கள்ளக்காதலனுடன் கைது
Image Credit : Asianet News

கள்ளக்காதலனுடன் கைது

போலீஸ் விசாரணையில் பெற்ற குழந்தையை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். எனக்கும் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்ததால் பூச்சிக் கொல்லி மருந்தை கொடுத்து கொலை செய்ததாக கூறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் குழந்தை எப்படி இறந்தது என்று கேட்பார்கள் என்பதால் வலிப்பு வந்து உயிரிழந்ததாக தெரிவித்தேன் என்றார். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சேலம்
குற்றம்
பெண்கள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Recommended image2
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Recommended image3
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Related Stories
Recommended image1
Vijayadharani Join TVK: பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி.. யார் இவர்? இணைய இதுதான் காரணமா?
Recommended image2
Free Sewing Machine: பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved