Serial Top 10 TRP: தடாலடியாக டாப் 10 TRP-யில் இடம்பிடித்த ஜீ தமிழ்! விஜய் டிவி - சன் டிவி சீரியல்களுக்கு டஃப்!
இந்த வருடத்தின் ஆறாவது வாரத்தில், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டாப் 10 டிஆர்பி லிஸ்டில் இடம்பிடித்த சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
serial TRP
திரைப்படங்களுக்கு நிகராக தற்போது சீரியல்களும் அதிக அளவில் இல்லத்தரசிகளை தாண்டி இளம் ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காலத்திற்கு ஏற்ற போல் சீரியல்களில் ஏற்பட்ட கதை மாற்றமும், அதனை இயக்குனர்கள் கொண்டு செல்லும் விதமும் தான். இந்நிலையில் பல்லாயிர கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த டாப் 10 சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
முதல் இடத்தில், 'சிங்க பெண்ணே' சீரியல் உள்ளது. கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், அண்மையில் தான் 100 எபிசோடை எட்டியது. இந்த சீரியல் இந்த வாரம் 11.10 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆனந்தி, அழகன் யார் என்பதை தெரிந்து கொள்வாரா? அல்லது மகேஷின் காதலை ஏற்றுக் கொள்வாரா? என்கிற பரபரப்பான கதைகளத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இரண்டாவது இடத்தில் கயல் சீரியல் உள்ளது. எதிரிகளின் சூழ்ச்சியால் விபத்தில் சிக்கி உயிர் போகும் நிலையில் இருந்த கயல், ஒரு வழியாக மீண்டு வந்துள்ள நிலையில்... தன்னுடைய தங்கை ஆனந்தி குடிகாரன் ஒருவனை திருமணம் செய்து கொள்வதை தடுத்து நிறுத்தி, அவருடைய வாழ்க்கையை காப்பாற்றுவாரா? எழில் தன்னால் தான் கயலுக்கு இப்படியெல்லாம் நடக்கிறது என நினைக்கும் பயத்தைப் போக்கி மீண்டும் அவருடன் சேர்வாரா? என்கிற கதை களத்தில் தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் இந்த வாரம் 10 .83 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.
மூன்றாவது இடத்தில் வழக்கம்போல் வானத்தைப்போல தொடர் தான் உள்ளது. துளசி உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்கிற மிகப்பெரிய கேள்வியுடன் தற்போது இந்த தொடர் நகர்ந்து வருகிறது. தங்கையின் நினைப்பால் பித்து பிடித்தது போல் இருக்கும் சின்ராசு, தன்னுடைய தங்கையை எப்படி கண்டுபிடிப்பார் என்பதை மிகவும் சுவாரசியமாக கொண்டு செல்கிறார் இயக்குனர். இந்த தொடர் இந்த வாரம் 10.43 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.
இந்த சீரியலை தொடர்ந்து அடுத்த இடத்தில் எதிர்நீச்சல் தொடர் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக டாப் 3 பட்டியலில் இடம்பிடித்த இந்த தொடர் இந்த வாரம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 10.39 புள்ளிகளை பெற்றுள்ளது. தர்ஷினியை அவருடைய அம்மா ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா, ஜனனி, ஆகியோர் தான் கடத்தி விட்டதாக பொய் புகார் கொடுத்து குணசேகரன் ஜெயிலில் அடைத்துள்ள நிலையில், அவர்களை எப்படி கதிர்,ஸ் சக்தி, ஞானம் வெளியே கொண்டு வருவார்கள்? அந்த வீட்டில் இருந்து தப்பிய தர்ஷினி தற்போது எங்கிருக்கிறார் என்பதும், சஸ்பென்சாக உள்ளது, இந்தத் தொடர் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
ஐந்தாவது இடத்தில் 8.99 புள்ளிகளுடன் சுந்தரி சீரியல் உள்ளது. கடந்த வாரம் முழுக்க அப்பத்தாவை சுந்தரி எப்படி காப்பாற்றுவார் என்கிற பரபரப்பான கதைக்களம் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த வாரம் கார்த்தியை சுந்தரி சந்திப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து 6-ஆவது இடத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சூப்பர் ஹிட் தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியல் உள்ளது. முத்து தன்னுடைய அம்மாவிடம் இருந்து ஒரு லட்சம் பணத்தை திருடியது தன்னுடைய மச்சான் சத்யா தான் என்பதை தெரிந்து கொண்ட நிலையில், அதை மீனாவிடம் சொல்வாரா? இல்லையா? என்கிற சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. மேலும் இந்த விஷயம் விஜயாவுக்கு தெரிய வந்தால் பெரிய பூகம்பமே வெடிக்கும் என்பது மட்டும் உறுதி. மேலும் சத்யாவால் ரோகிணி சிக்குவாரா என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இப்படி பல்வேறு சஸ்பென்ஸுகள் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இந்த வாரம் 8.73 புள்ளிகளை பெற்றுள்ளது.
Iniya Serial
ஏழாவது இடத்தில் இனியா தொடர், 8.25 டிஆர்பி புள்ளிகளுடன் உள்ளது. இனியா தன்னுடைய நாத்தனார் அக்ஷயாவை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள், விக்ரமுக்கு தெரிய வந்தால்... என்ன நடக்கும்? அதை அவர் எப்படி எடுத்து கொள்வார் என்று பரபரப்புக்கு குறைவில்லாமல் இந்த சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
எட்டாவது இடத்தில், கடந்த வாரம் முழுவதும் மகா சங்கமாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் தான் உள்ளன. இந்த சீரியல்கள் இரண்டுமே 7 .63 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. கதிர் - ராஜி திருமணத்தை பாண்டியன் ஏற்றுக்கொள்வாரா? பாக்கியலட்சுமி செய்யாத ஒரு விஷயத்தை தன் தலையில் போட்டுக் கொண்ட நிலையில்... அது பற்றி அவருடைய குடும்பத்துக்கும் தெரிய வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த வாரம் ஒன்பதாவது இடத்தில் ஆனந்த ராகம் சீரியல் 6.35 டிஆர்பி புள்ளிகளுடன் உள்ளது. ஈஸ்வரி மீது கொலை பழி சுமதி ஜெயில் உள்ளே தள்ளிய நிலையில், ஈஸ்வரியை காப்பாற்ற... தற்போது அவரின் மாமியார் ஜெயிலுக்கு சென்றுள்ளார். ஈஸ்வரி உண்மையான கொலையாளி யார் என்பதை அறிந்து, தன்னுடைய மாமியாரை காப்பாற்றுவாரா இல்லையா என்கிற பரபரப்பான காட்சிகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
மனைவி மோனிகா டேவிட் உடன் காத்துவாக்குல காதல் செய்த கவின் - வைரலாகும் Valentines Day போட்டோஸ்
இந்த வாரம் கடைசி இடத்தில் இருப்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடர். இதுவரை டாப் 10 TRP லிஸ்டில் இடம்பெற முடியாமல் திணறியது ஜீ தமிழ் தொடர்கள். அந்த வகையில் இந்த வாரம், கார்த்திகை தீபம் 5.88 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தை பிடித்துள்ளது.