Asianet News TamilAsianet News Tamil

Tallest Man : மிக உயரமான இலங்கை தமிழர்.. அண்ணாந்து பார்க்க வைக்கும் மனிதர்.!! எத்தனை அடி உயரம் தெரியுமா.?

இலங்கை நாட்டில் மிக உயரமான மனிதராக குணசிங்கம் கஜேந்திரன் கண்டறியப்பட்டுள்ளார். 7அடி 2 அங்குலம் உயரம் குண்ட நபர் இவர், தனது குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், உதவி செய்யும் படி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் உயர்ந்த மனிதர்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - கைவேலி பகுதியில் இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர்  7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதனாலேயே இலங்கையில் தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான 45 வயதுடைய இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கின்றார். இவர் அதிக உயரமாக இருப்பதனால் ஆட்டோவிற்குள் அமர்ந்திருப்பது கூட கடினமானதாகும். தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாகவும், இலங்கையில் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற செருப்புகள் கூட கிடைக்கவில்லையென தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்தே தனக்கு கால்களுக்கு ஏற்ற செருப்புகள் வாங்கும் நிலை இருப்பதாக கூறினார்.  

 இலங்கையின் உயர்ந்த மனிதனாக இருந்தாலும் இவருக்கு வழங்கவேண்டிய அங்கீகாரத்தையும் செலுத்த வேண்டிய அக்கறையையும் பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது. இவரது குடும்பம் தற்போது மிகவும் வருமை நிலையில் காணப்படுகிறது. இவர் ஒரு தமிழர், அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்தமையால் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையா என மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.இதனிடையே சுல்தான் கோஷன் என்பவர் 8அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் தான் உலகின் மிக உயர்ந்த மனிதர் ஆவார். 

Video Top Stories