Published : Aug 15, 2022, 07:13 AM ISTUpdated : Aug 15, 2022, 10:41 PM IST

Tamil News live : ஆளுநர் தேநீர் விருந்து.. ஓபிஎஸ் அட்டென்ட் - எடப்பாடி வெளியே !

சுருக்கம்

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சபாநாயர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம், பழனிவேல் தியாகராஜன், மெய்நாதன், செந்தில் பாலாஜி ஆகியோர்  மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றுள்ளார். ஆனால் இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.

Tamil News live : ஆளுநர் தேநீர் விருந்து.. ஓபிஎஸ் அட்டென்ட் - எடப்பாடி வெளியே !

10:41 PM (IST) Aug 15

பிரபல விஜே மற்றும் சினிமா விமர்சகர் கௌஷிக் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்!

இளம் வயதிலேயே பிரபல பத்திரிக்கையாளர் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க 
 

10:40 PM (IST) Aug 15

நயனை கட்டிப்பிடித்து நச்சுனு முத்தம் கொடுத்த விக்கி..! வைரலாகும் படு ரொமான்டிக் ஹாட் போட்டோ..!

நயன்தாராவுடன் ஸ்பெயின் நாட்டில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய நயன் - விக்கி ஜோடி தற்போது ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க 
 

10:02 PM (IST) Aug 15

கேப்டனுக்கா இந்த நிலைமை.. கண்ணீர்விட்டு கதறிய தேமுதிக தொண்டர்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க

08:53 PM (IST) Aug 15

ஆகஸ்ட் 16 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு

வரும் ஆகஸ்ட் 16ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

08:52 PM (IST) Aug 15

இது நாட்டிற்கு நல்லது இல்லை.. கொதிக்கும் நிதி அமைச்சர் பிடிஆர்

சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது.

மேலும் படிக்க

08:14 PM (IST) Aug 15

75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய பிரபலங்கள்..! புகைப்பட தொகுப்பு..!

நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அனைத்து மக்களும், பிரபலங்களும் தங்களுடைய வீட்டில் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பலரும் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில், பிரபலங்கள் தேசிய கொடியோடு வெளியிட்ட புகைப்பட தொகுப்பு இதோ..

08:08 PM (IST) Aug 15

ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து.. ஓபிஎஸ் உள்ளே - எடப்பாடி வெளியே

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க

07:07 PM (IST) Aug 15

திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. அமமுக பொதுக்குழுவில் டிடிவி தினகரன் பேச்சு

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மேலும் படிக்க

06:25 PM (IST) Aug 15

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்துச்சு.. கொந்தளிக்கும் ஜெயக்குமார் !

தற்போதைய ஆளும் கட்சியினரால் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.

மேலும் படிக்க

05:36 PM (IST) Aug 15

8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. மாதந்தோறும் ரூ.50,000 வரை சம்பளத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் வேலை..

கன்னியாகுமரி மாவட்டம் குறுந்தன் கோடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

05:35 PM (IST) Aug 15

தமிழகம் முழுவதும் நாளை போராட்டம்.. இந்து முன்னணி கட்சி அறிவிப்பு

கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

05:09 PM (IST) Aug 15

இன்ஜினியரிங் படித்தால் மட்டும் போதும்.. அருமையான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது

இந்திய தர ஆய்வு நிறுவனத்தில் (பி.ஐ.எஸ்) காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

04:40 PM (IST) Aug 15

காவல்துறையில் காலியாக உள்ள 3,552 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. முழு விவரம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காலியாக 3,552 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றுடன் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் படிக்க

04:22 PM (IST) Aug 15

தமிழகத்தில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.. அண்ணாமலை பேச்சு

75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில்  உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார்.

மேலும் படிக்க

04:07 PM (IST) Aug 15

சர்ச்சையில் சிக்கிய 'விருமன்'... கார்த்தி - சூர்யாவை துரத்தும் நெகடிவ் விமர்சனம்!

'விருமன்' திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படத்திற்கு சிலர் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் தெரிவித்து வருவது மட்டும் இன்றி, குறிப்பிட்ட சாதியை இப்படம் தூக்கி பிடிப்பதாக சர்ச்சை கருத்தை முன்வைத்து வருகிறார்கள். மேலும் படிக்க...
 

03:52 PM (IST) Aug 15

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சூப்பர் வேலை.. முழு விவரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலியாக உள்ள 19 பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமையல்காரர், பிளம்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க
 

03:39 PM (IST) Aug 15

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்

ஸ்ரீமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

02:49 PM (IST) Aug 15

விஜய் சென்ற அதே இடத்தை தேர்வு செய்த அஜித்... அடுத்து எங்கே செல்கிறது AK 61 படக்குழு? வெளியான சூப்பர் அப்டேட்!

விஜய் சென்ற அதே இடத்திற்கு அஜித் தன்னுடைய படப்பிடிப்பிற்காக செல்ல உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க...
 

02:48 PM (IST) Aug 15

ஹனி மூன் சென்ற இடத்தில் பிரச்சனையா? சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் ஷாக்கிங் புகைப்படம்!

நடிகை நயன்தாரா... தற்போது தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் இரண்டாவது முறையாக ஹனிமூனுக்கு சென்றுள்ள நிலையில், நயனின் சோகமான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் படிக்க...
 

02:48 PM (IST) Aug 15

நடிகர் பாபி சிம்ஹாவின் 'தடை உடை' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் 'தடை உடை' படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...
 

02:39 PM (IST) Aug 15

முழுவதுமாக அம்மனாக மாறிய அன்னபூரணி.. கையில் சூலம்.. தலையில் கிரீடம்.. பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம்..!

கீழ்பென்னாத்தூரில் ஆடி மாதம் முன்னிட்டு அன்னபூரணி அரசு அம்மா கையில் சூலம், தலையில் கிரீடங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
மேலும் படிக்க

02:39 PM (IST) Aug 15

குறையும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 14,917 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 32 பேர் பலி..

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 32 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க

02:13 PM (IST) Aug 15

நாளை கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம்‌ மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

02:06 PM (IST) Aug 15

மருத்துவமனையில் நடிகர் விஜய்... பதறி ஓடிய வாரிசு படக்குழு - இணையத்தில் காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது மருத்துவமனை ஒன்றில் வாரிசு படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது எடுத்த வீடியோ காட்சி கசிந்துள்ளது. அதில் நடிகர் விஜய் மற்றும் பிரபு ஆகியோர் உயிருக்கு போராடும் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து பதறியபடி தள்ளிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

01:24 PM (IST) Aug 15

மாணவர்களுக்கு வழங்கும் மடிகணினி இத்திட்டம் கைவிடப்படுகிறதா? அலறும் ராமதாஸ்..!

மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

01:17 PM (IST) Aug 15

இன்னும் ஒரு வருஷமா! பிரபாஸின் ‘சலார்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த KGF இயக்குனர்... ஷாக்கான ரசிகர்கள்

கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், சுருதிஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

01:06 PM (IST) Aug 15

சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஏன் பட்ட பகலில் வங்கியில் கொள்ளை..? ஸ்டாலினை பார்த்து எகிறும் பிரேமலதா..

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக கூறும் முதலமைச்சருக்கு, பட்ட பகலில் வங்கியில் கொள்ளை நடந்ததுது குறித்து எதுவும் தெரிவில்லை. அடுத்த மாதத்தில் தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்மேலும் படிக்க

12:58 PM (IST) Aug 15

புருஷனை இழந்த நீ இப்படி செய்யறது தப்புமா.. மகளுக்கு அட்வைஸ் செய்த பெற்றோர்.. ஆத்திரத்தில் வாலிபர் என்ன செய்தார் தெரியுமா?

பெற்றோர் எச்சரித்ததையடுத்து கள்ளக்காதலை கைவிட்டு திருந்திவாழ்ந்தார். இதனால் ஆத்திரத்தில் கள்ளக்காதலன் பெண்ணின் பெற்றோரை கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

12:37 PM (IST) Aug 15

Soori : வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசியக் கொடியை கட்டி பறக்க விட்ட சூரி... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

வீடு துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியில் தேசிய கொடியை கட்டி பறக்க விட்டு, அதை போட்டோ எடுத்து பதிவிட்ட நடிகர் சூரியை நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர். மேலும் படிக்க

 

12:09 PM (IST) Aug 15

சுதந்திர தின விழா.. தேசிய போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி

நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

 

11:57 AM (IST) Aug 15

பேருந்து மோதி பிளஸ் 2 மாணவி பலி.. சுதந்திர தின விழா முடித்து வீடு திரும்பிய போது சோகம்.. ஓட்டுநனர் தப்பியோட்டம

சென்னை அருகே தனியார் பள்ளியில் சுதந்திர தினவிழாவை கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த மாணவி லட்சுமிஸ்ரீ, அரசு மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். குரோம்பேட்டை பள்ளியில் பயின்று வரும் மாணவி, இன்று சுதந்திர தினவிழாவை முடித்து, சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாப்புரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க
 

11:43 AM (IST) Aug 15

பேருந்து மோதி தனியார் பள்ளி மாணவி பலி..

சென்னை அருகே தனியார்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது பேருந்து மோதி பள்ளி மாணவி பலி . குரோம்பேட்டை பள்ளியில் சுதந்திர தினவிழா முடித்து, சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாப்புரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

11:40 AM (IST) Aug 15

விரைவில் 5ஜி சேவை: புதிய இந்தியாவின் சவால்களுக்கு உள்நாட்டு தொழில்நுட்பம் தீர்வு: பிரதமர் மோடி உறுதி

புதிய இந்தியாவின் சவால்களுக்கு மேட் இன் இந்தியா தொழில்நுட்பம் தீர்வுகளை வழங்கும். இந்தியாவில் விரைவில் 5 ஜி சேவை தொடங்கப்படும் என்று 75வது சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். விரிவான செய்திகளுக்கு

11:39 AM (IST) Aug 15

அடுத்த 25 ஆண்டுகளுக்கு 5 முக்கியத் தீர்மானங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்ல 5 முக்கியத் தீர்மானங்களை எடுப்பது அவசியம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். விரிவான செய்திகளுக்கு

11:36 AM (IST) Aug 15

அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி கொள்ளை - முக்கிய குற்றவாளி முருகன் கைது

சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த  ஊழியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது திருமங்கலம் காவல்நிலையத்தில் முருகன் சரணடைந்தார். நேற்று முன் தினம், வங்கியில் காவாலாலி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கிளை மேலாளர், ஊழியர் இருவரை அடித்து, கை கால்களை கட்டி போட்டு, 11 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் இதுவரை 18 கிலோ நகைகள் வரை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க

11:01 AM (IST) Aug 15

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்வு.. முதலமைச்சர் அறிவிப்பு..

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் குடும்ப ஓய்வூதியம், ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் படிக்க

11:00 AM (IST) Aug 15

பெரியார் சிலை பற்றி அவதூறு பேச்சு-கனல் கண்ணன் கைது

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து கூறிய சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

10:34 AM (IST) Aug 15

முழு உருவ காந்தி சிலை - எழும்பூர் அருங்காட்சியகத்தில் முதலமைச்சர் திறந்து வைப்பு

சென்னை எழும்பூர் அருட்காட்சியகத்தில் காந்தி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  75 வது சுதந்திர நாளை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை முதலமைச்சர் ஏற்றினார். பின்னர் இந்தாண்டிற்கான நல்லாளுமை விருதுகளை வழங்கினார். பின்னர் தமிழக காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் எழும்பூர் அருட்காட்சியகத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் முழு உருவ சிலை திறந்து வைத்தார். 
 

10:34 AM (IST) Aug 15

54 வருஷமா முரட்டு சிங்கிளாக இருந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில் திருமணம்..!

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.மேலும் படிக்க

10:34 AM (IST) Aug 15

டெல்லி செங்கோட்டை அணிவகுப்பில், முதல்முறையாக ‘மேட் இன் இந்தியா’ துப்பாக்கி மூலம் மரியாதை

டெல்லி செங்கோட்டையில் இன்று நடந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.விரிவான செய்திகளுக்கு.....