Asianet News TamilAsianet News Tamil

வெயிலின் தாக்கம் தாங்காமல் குட்டையில் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட கோவில் யானை வீடியோ வைரல்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை செயற்கை நீர்தேக்க தொட்டியில் ஆனந்தமாக குளிக்கும் வீடியோ பார்ப்பவர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருக்கக்கூடிய கோவில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். முருகப்பெருமானின் இந்த கோவிலில் பங்குனித் திருவிழாவின் சிகர நிகழ்வுகளான திருக்கல்யாண வைபவம், திருத்தேரோட்டம் ஆகியவை கோலாகலமாக பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திருக்கோவில் பின்புறம் இருக்கக்கூடிய பகுதியில் கோவில் யானை தெய்வானை பாகனுடன் சென்று சுட்டெரிக்கும் வெயிலின் சூட்டை தணிக்கும் வகையில் ஆனந்தமாக உருண்டு புரண்டு தண்ணீரில் விளையாடும் காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீரைக் கண்டால் யாருக்குத்தான் பிடிக்காது மனிதர்களாகிய நாமே நீச்சல் குளத்தை தேடும் போது யானை குதித்து விளையாடக்கூடிய காட்சி காண்போரை மகிழ்ச்சி அடையச் செய்கிறது.

கடந்த மாதம் கள்ளழகர் திருக்கோவில் யானை குளிக்கக் கூடிய காட்சிகள் வெளியாகிய நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் கோவில் தெய்வானை யானை குளிக்கக் கூடிய காட்சிகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories