Asianet News TamilAsianet News Tamil

Watch : மதுரை குளிர்வித்த கோடை மழை! திடீர் அருவியில் குளித்து மகிழ்ந்த மக்கள்!

மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே திடீரென கனமழை பெய்தது. அப்போது திடீரென உருவான அருவியில் மக்கள் குளித்து வெப்பத்தை தணித்தனர்.
 

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி மாநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோடை வெளியிலும் சுட்டெரித்து வருவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக திடீரென கனமழை பெய்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெற்குவாசல், கீழவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மீனாட்சி அம்மன் கோவில் அருகே திடீரென உருவான அருவில்யில் மக்கள் குளித்து வெப்பத்தை தணித்தனர்.

Video Top Stories