சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: விஜயகாந்துக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவை! மியாட் மருத்துவமனை
Tamil News Live Updates: விஜயகாந்துக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவை! மியாட் மருத்துவமனை

கடந்த 24 மணிநேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. ஆகையால் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனையில் தகவல் தெரிவித்துள்ளது.
நள்ளிரவு 1 மணிவரை மழை தொடரும்
மழை பாதிப்பு: அவசர உதவி எண் 1913
சென்னையில் மழை பாதித்துள்ள பகுதிகளில் உதவி தேவைப்பட்டால் 1913 என்ற இலவச அவசர உதவி எண்ணை அழைக்கலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 30) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
என்னுடைய கனவெல்லாம் இதுதான்: முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்!
என்னுடைய கனவெல்லாம், தமிழ்நாட்டு மாணவர்களும், மாணவிகளும் உலகம் எல்லாம் சென்று சாதிக்கவேண்டும் என்பதுதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அடுத்த ஆண்டு புதிய ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் ஏதர்!
அடுத்த ஆண்டு புதிய ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளாதாக ஏதர் நிறுவனம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் - எல்.முருகன் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் நடைபெற்று வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்
விமானத்தில் செல்போனை ஏன் ஏரோபிளேன் மோடில் வைக்க சொல்கிறார்கள்?
விமானத்தில் செல்போனை ஏன் ஏரோபிளேன் மோடில் வைக்க சொல்கிறார்கள் என்பது பற்றி இங்கு காணலாம்.
ஆதிக் ரவிச்சந்திரனா? சோபிசந்தா? அஜித்தின் ஏகே 63 பட வாய்ப்பை தட்டிதூக்கியது யார்? சுடசுட வந்த சூப்பர் அப்டேட்
அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஏகே 63 படத்தை இயக்கும் போட்டியில் ஆதிக் மற்றும் கோபிசந்த் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், அது யார் என்பது குறித்து பார்க்கலாம்.
டிசம்பர் 1ஆம் தேதி முதல் என்னென்ன மாறப் போகிறது? அமலுக்கு வரும் புதிய விதிகள்!
டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் பல்வேறு புதிய் விதிகள், நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.
பொளிச்சு பொளிச்சுனு அடிப்பேன்னு சொன்ன விஷ்ணு... ஓவியா பாணியில் தரமான பதிலடி கொடுத்த அர்ச்சனா
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ள அர்ச்சனாவும், விஷ்ணுவும் வாக்குவாதம் முற்றி சண்டையிட்டுக்கொண்டதால் பிக்பாஸ் வீடே பரபரப்பானது.
விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை!
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது
KT Raghavan: மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் கே.டி.ராகவன்.. முக்கிய பதவியை வழங்கிய அண்ணாமலை..!
ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த கே.டி.ராகவனுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை முக்கிய பதவியை வழங்கியுள்ளார்.
விஜயகாந்துக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவை.. மியாட் மருத்துவமனை
கடந்த 24 மணிநேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. ஆகையால் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனையில் தகவல் தெரிவித்துள்ளது.
21ஆம் நூற்றாண்டின் அடிமைத்தனம்: தெலங்கானா கிக் தொழிலாளர்களுக்கு ராகுல் அளித்த உறுதி!
தெலங்கானாவில் ஆட்டோ டிரைவர்கள், கிக் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவர்களின் நலனுக்காக சட்டமியற்றப்படும் என உறுதியளித்தார்
41 வயதிலும் முரட்டு சிங்கிளாக வலம் வரும் நடிகை குத்து ரம்யா... இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா?
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான நடிகை திவ்யா ஸ்பந்தனாவின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
கோடநாடு வழக்கு - நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகளை ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது
Train Cancelled: சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு ரயில் சேவை இன்று முதல் ரத்து! எத்தனை நாட்கள் வரை தெரியுமா?
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே செல்லும் இரவு ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னையில் அதிர்ச்சி.. மழைக்காக ஒதுங்கிய வழக்கறிஞர்.. மின்சார தாக்கி தூக்கி வீசப்பட்டு பலி!
சென்னையில் மழைக்கு ஒதுங்கிய முன்னாள் மாமன்ற உறுப்பினரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சம்பத் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.