Dhanush: நான் நடிக்க ஆசைப்பட்டது 2 பேரின் வாழ்க்கை வரலாற்று படம்! ஒருவர் இளையராஜா.. இன்னொருவர்? தனுஷ் பேச்சு!
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் தனுஷ்.. இப்படத்தில் நடிப்பது குறித்தும்.. இரண்டு பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை பட்டதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ஈடு இணையில்லாத இசையால்... உலக மக்களை கவர்ந்தவர் இசைஞானி இளையராஜா. இவரின் வாழ்க்கை வரலாறு படத்தின் பூஜை இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இதில் இசைஞானியாக நடிக்கும் இளையராஜா பற்றி நடிகர் தனுஷ் பேசியது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேடைக்கு வந்த பின் பேச துவங்கிய தனுஷ்... "இசைஞானி இளையராஜா சார் அவர்களுக்கும், உலக நாயகன் கமலஹாசன் சார் அவர்களுக்கும், என் நண்பர் வெற்றிமாறன் அவர்களுக்கும், என் செல்லம் பாரதிராஜா அவர்களுக்கும் மற்றும் வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். 'எண்ணம் போல் வாழ்க்கை' என்று அடிக்கடி நான் சொல்வதும், அதை நம்புவதும் உண்டு.
Dhanush
நம்மில் பலர் இரவில் தூக்கம் இல்லை என்றால், இளையராஜா சார் அவர்களின் பாட்டை அப்படியே கேட்டுக்கொண்டு ஒருவிதமாக மெய்மறந்து தூங்குவோம். ஆனாலும் பல இரவுகள் இளையராஜா சாராகவே நடித்தால் எப்படி இருக்கும் என்று, என் மனதில் நினைத்து நினைத்து தூக்கம் இல்லாமல் இருந்திருக்கிறேன்.
நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாற்று படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதில் ஒருவர் இசைஞானி இளையராஜா. இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு. அதில் ஒன்னு நடந்துவிட்டது என கூறினார்.
இந்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய கருவத்தை கொடுக்கிறது. நான் இந்த இடத்திற்கு வர முடிஞ்சிருக்கு என்று நினைக்கும் போது. நான் இளையராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன்... பக்தன்... அவருடைய இசை தான் எனக்கு துணை. இது எல்லாருக்குமே பொருந்தும். அதை தாண்டி அவருடைய இசை எனக்கு ஒரு நடிப்பு ஆசானம் கூட, எனக்கு நடிப்பு என்றால் என்ன என்று தெரியாத காலத்தில் இருந்து, இப்ப வரைக்கும் ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன்னாடி அந்த காட்சிக்கு தகுந்த இளையராஜா பாடல் ஒன்றையோ அல்லது BGM கேட்பேன். எனக்கு அந்த இசை குறிப்பிட்ட காட்சியை எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லும் அதை அப்படியே உள்வாங்கி அந்த காட்சிகள் நடிப்பேன்.
Dhanush
வெற்றிமாறன் சிலமுறை இதை பார்த்திருக்கிறார். இப்பவும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப் பெரிய சவால் மற்றும் மிகப்பெரிய ரெஸ்பான்சிபிலிட்டி என்று சொல்கின்றனர். எனக்கு அப்படி தெரியவில்லை. ஏனென்றால் இப்பவும் அதே இசை எனக்கு சொல்லும்... எப்படி அவராகவே நடிக்க வேண்டும் என்று. மேலே வரும் போது கூட, சார் நீங்க முன்னாடி போங்க... உங்களை நான் அப்படியே ஃபாலோ பண்ணி வருகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர் நான் என்ன, உனக்கு கைடா என கேட்டார். கைடு தான் சார்... கைடு பண்ணிக்கிட்டே தான் வந்துட்டு இருக்கீங்க.. இவ்வளவு நாளா, நானும் உங்களை பாலோ பண்ணி வந்துகிட்டே தான் இருக்கேன் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.