Top 10 TRP: அடித்து பிடித்து டாப்புக்கு வந்த எதிர்நீச்சல்! TRP-யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்களின் விவரம்
இந்த வருடத்தின் பத்தாவது வாரத்தில், எந்தெந்த சீரியல்... அதிகப்படியான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு, டாப் 10 இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இந்த வாரம் வழக்கம் போல், முதலிடத்தை பிடித்துள்ளது 'சிங்க பெண்ணே' சீரியல். ரசிகர்கள் பலர், எப்போது ஆனந்தி... அன்பு நல்லவர் என்பதை புரிந்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், கடந்த வாரம் அன்பு குற்றமற்றவர் என்பது ஆதாரத்துடன் நிரூபணம் ஆனது. எனினும் ஆனந்திற்கு அன்பு தான் அழகன் என்கிற உண்மை தெரியவருமா என்கிற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 11.64 TRP புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
Ethirneechal
இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது 'எதிர்நீச்சல்' தொடர். தர்ஷினி கடத்தல் குறித்த காட்சிகள், விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்த நிலையில்... தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொடர் 10.68 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றியுள்ளது.
மூன்றாவது இடத்தில் 10.50 டிஆர்பி புள்ளிகளுடன் உள்ளது 'கயல்' சீரியல். ஒருவழியாக கயல், எழிலின் காதலை ஏற்றுக்கொண்டு, திருமணத்திற்கு தயாராகி வரும் நிலையில், சிவசங்கரி எழிலுக்கு பார்த்த வேறு ஒரு சம்மந்ததால் கயலுக்கு புது பிரச்சனை வந்துள்ளது. அதே போல், கயலின் பெரியப்பாவாலும் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள உள்ளார்.
இதை தொடர்ந்து, நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது 'வானத்தைப் போல' சீரியல். பொன்னியின் சதி திட்டத்தால் துளசி தன்னுடைய கணவன் ராஜபாண்டி இடம் இருந்து பிரிந்து வந்த நிலையில் இது சின்ராசுக்கு தெரியவருமா? இனி என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த தொடர் 9.45 TRP புள்ளிகளை கைப்பற்றியுள்ளது.
Iniya Serial
கடந்த வாரம் கடைசி இடத்தில் இருந்த 'இனியா' தொடர், இந்த வாரம் 8.90 TRP புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இனியா - விக்ரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை துவங்கிய நிலையில், ஒரு போலீஸ் அதிகாரி மூலம் மற்றொரு பிரச்சனை விக்ரமை நோக்கி வந்துள்ளது. இதை எப்படி இனியா - விக்ரம் முறியடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையடுத்து, டாப் 5 பட்டியலில் இடம் பிடித்து வந்த சுந்தரி தொடர், மிகவும் பின்தங்கி தற்போது 8.23 டிஆர்பி புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்பை விட, சுவாரசியம் குறைந்த காட்சிகள் இடம்பெறுவது தான் சுந்தரி சீரியல் TRP குறைந்ததற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் நண்பன் சஞ்சீவா இது? திருமணத்தின் போது எடுத்த அரிய புகைப்படத்தை வெளியிட்ட ப்ரீத்தி!
கடந்த வாரம், TRP-யில் 5-ஆவது இடத்தில் இருந்த விஜய் டிவி தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியல்.... தற்போது 7.83 டிஆர்பி புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மீனா - முத்து இடையே கட்டப்படும் சண்டை முதல் ரொமான்ஸ் வரை அனைத்தும் ரசிக்கும்படி இருந்தாலும், ரோகிணி எப்போது சிக்குவார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.
இதை தொடர்ந்து 8-ஆவது இடத்தில், பெண்களுக்கு ஒரு மோட்டிவேஷன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தான் உள்ளது. 7.8 TRP புள்ளிகளை பெற்றுள்ள இந்த சீரியலில், பாக்கியாவுக்கு போட்டியாக கோபியும் ரெஸ்ட்டாரெண்ட் பிளானை கையில் எடுத்துள்ள நிலையில்... அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதைத் தொடர்ந்து 9-ஆவது இடத்தில், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தொடர் உள்ளது. கதிரை திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படும் ராஜு.. பூகம்பமாய் வெடிக்க, இனியாவது கதிர் மனம் மாறுவாரா? இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை துவங்குவார்களா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீரியல் 6.38 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து 9-ஆவது இடத்தில், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தொடர் உள்ளது. கதிரை திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படும் ராஜு.. பூகம்பமாய் வெடிக்க, இனியாவது கதிர் மனம் மாறுவாரா? இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை துவங்குவார்களா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீரியல் 6.38 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.