விஜய்யின் நண்பன் சஞ்சீவா இது? திருமணத்தின் போது எடுத்த அரிய புகைப்படத்தை வெளியிட்ட ப்ரீத்தி!
விஜய்யின் நண்பரும் சீரியல் நடிகருமான சஞ்சீவ் - ப்ரீத்தி ஜோடி இன்று தங்களின் திருமண நாளை கொண்டாடும் நிலையில், அரிய புகைப்படங்கள் சிலவற்றை ப்ரீத்தி தற்போது வெளியிட்டுள்ளார்.
வெள்ளித்திரையில் நடிகர் விஜய்யுடன் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சீவ். திரைப்படங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் அதிரடியாக சின்னத்திரையில் தொகுப்பாளர், மற்றும் சீரியல் நடிகராக நுழைந்தார்.
பல நட்சத்திர ஜோடிகள், ஒன்றாக நடந்ததன் மூலம் காதலிக்க துவங்கி பின்னர் திருமண வாழ்க்கையில் நுழைந்தவர்கள். ஆனால், இந்த ஜோடி... இதுவரை எந்த ஒரு சீரியலிலும் ஒன்றாக இணைந்து நடித்ததே இல்லை. நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நட்பு, பின்னர் போன் மூலம் தொடர... அதுவே காதலாக மாறியுள்ளது. சஞ்சீவினி காதலை ப்ரீத்தி ஏற்றுக்கொண்டதும், மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வு தான்.
ப்ரீத்தி ஒரு நாள் போன் பண்ணும் போது, சஞ்சீவுக்கு ஓவரா அட்வைஸ் பண்ணி கடுப்பேற்றியுள்ளார். இதற்க்கு சஞ்சீவ், காமெடியாக "இவ்வளவு அட்வைஸ் பண்றியே... நீ என்ன என்னை கல்யாணமா பண்ணிக்கப் போறே?' என கேட்டுள்ளார். இதற்கு ப்ரீத்தியும், 'அதுக்கென்ன பண்ணிக்கிட்டா போச்சி...' காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். பின்னர் இவர்களின் காதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது.
2009 ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, 15-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர். திருமண நாளில் கோவிலுக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களும், தன்னுடைய திருமண புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார் ப்ரீத்தி. இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
ப்ரீத்தி, பல வருடங்களாக சீரியலில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில்... கடந்த சில வருடங்களாக தான் மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் சஞ்சய் சன் டிவியில் ஒளிபரப்பான 'வானத்தைப் போல' தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்து வந்த நிலையில், இதை தொடர்ந்து... 'லட்சுமி' என்கிற புது தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.