Sneha Photos: தன்னுடைய கடையில் வேலை செய்யும் பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சினேகா! வைரலாகும் போட்டோஸ்!
இந்த ஆண்டு மகளிர் தினத்தை தன்னுடைய கடையில் வேலை செய்யும் பெண்களுடன் கொண்டாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை சினேகா.
தமிழில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக, கடந்த 2000-ஆம் ஆண்டு "என்னவளே" படத்தின் மூலம் அறிமுகமானவர் சினேகா. முதல் படத்திலேயே... தன்னுடைய எதார்த்தமான அழகாலும், நடிப்பாலும் பல ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டர்.
இதைத்தொடர்ந்து, அண்ணன் - தம்பிகள் பாசத்தை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட 'ஆனந்தம்' படத்தில் அபாஸுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் 'பார்த்தாலே பரவசம்', 'புன்னகை தேசம்', 'விரும்புகிறேன்', 'ஆட்டோகிராப்' என பல ஹிட் படங்களில் நடித்தார்.
கமல், விஜய், அஜித், பிரஷாந்த், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த சினேகா சில காதல் சச்சைகளிலும் சிக்கியுள்ளார். குறிப்பாக பிரபல தொழிலதிபருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
வாழ்க்கையில் பல சோதனைகள் வந்தாலும், அதனை தூசி போல் உதறிவிட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். இந்நிலையில் தான் நடிகர் பிரசன்னாவுடன் 'அச்சமின்றி அச்சமின்றி' படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டது.
தங்களின் காதலை பெற்றோரிடம் கூறி, அவர்கள் பச்சை கொடி காட்டியபின்னர் இருவரும் இல்லறவாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தனர். இவர்களின் காதலின் அடையாளமாக விஹான் என்கிற மகனும் ஆத்யந்தா என்கிற அழகிய மகள் ஒருவரும் உள்ளனர்.
திருமணத்திற்கு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியுள்ள சினேகா, அதிரடியாக கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தனது கணவரோடு இணைந்து "சினேகாலயா" என்கின்ற ஒரு துணிக்கடையை அவர் திறந்துள்ளார். இந்த கடையின் திறப்பு விழாவிற்கு பிரபல மருத்துவர் அனிதா விஜயகுமார் தனது குடும்பத்தோடு வருகை தந்திருந்தார். அதேபோல சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்களும் வந்து அவர்களை வாழ்த்தினர்.
தன்னுடைய கடை திறப்பு விழாவிற்கு வந்த அனைவருக்குமே... அழகிய சேலை ஒன்றை சினேகா பரிசாக கொடுத்தார். மேலும் தன்னுடைய கடை பற்றி பல்வேறு புரமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் சினேகா. 1500 ரூபாய் முதல் சில லட்சங்கள் வரை புடவை கிடைப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்காக மிகவும் கிராண்டாக தனித்துவமாக டிசைன் செய்தும்கொடுக்கிறார்கள். மேலும் அங்கிருக்கும் சேலைகள் அனைத்தையும் நடிகை சினேகாவே பார்த்து பார்த்து தன்னுடைய கஸ்டமர்களுக்காக தேர்வு செய்துள்ளாராம்.
பிஸ்னஸில் சாதிக்க வேண்டும் என போராடி வரும் சினேகா... இந்த ஆண்டு மகளிர் தினத்தை தன்னுடைய கடையில் பணியாற்றும் பெண்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.