Asianet News TamilAsianet News Tamil

கோவையில் பயங்கர ஆயுதத்துடன் கூரையை பிரித்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே நள்ளிரவு நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளின் கூரை மீது ஏறி கொள்ளை முயற்சியில் ஈடுபடும் கும்பல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, சங்கோதிபாளையம், செல்லப்பம்பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள், தோட்டங்களுக்குள் தனியே இருக்கும் வீடுகளில் திருட முயற்சித்துள்ளனர். வீட்டின் கூரையின் மீது ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்கவும் முயற்சித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அங்குள்ள வட மாநில நபரிடம் செல்போன்களையும் திருடிச் சென்றுள்ளனர். 

இது குறித்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரிந்ததோடு, வீட்டின் கூரையின் மேல் ஏறி நோட்டம் விடும் சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் காவல்துறையினர்  விசாரணை நடத்திவருகின்றனர்.

Video Top Stories