8:53 PM IST
சீயானின் விக்ரம் படத்திலிருந்து ஆதிரா லிரிக் வீடியோ பாடல் வெளியீடு
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை தாமரை, பா விஜய், விவேக் எழுதியுள்ளனர். தற்போது ஆதிரா என்னும் தெலுங்கு பாடல் வரும் ஜூலை 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க... சீயானின் விக்ரம் படத்திலிருந்து ஆதிரா லிரிக் வீடியோ பாடல் வெளியீடு
8:52 PM IST
தனுஷ் குரலில் "மேகம் கருக்காதா "..திருச்சிற்றம்பலம் லிரிக் வீடியோ இதோ!
ஏற்கனவே தாய் கிழவி பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு வரிகளை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது மேகம் கருக்குதா என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் தனுஷ் எழுதி பாடியுள்ளார்.
மேலும் படிக்க... தனுஷ் குரலில் "மேகம் கருக்காதா "..திருச்சிற்றம்பலம் லிரிக் வீடியோ இதோ!
8:50 PM IST
உச்சகட்ட கவர்ச்சியில் குதித்த தர்ஷா குப்தா...அரைகுறை உடையில் கவரும் சீரியல் நடிகை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 வில் பங்கேற்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர் சினிமா வாய்ப்புகளை குறிவைத்து வருகிறார்.
மேலும் படிக்க...உச்சகட்ட கவர்ச்சியில் குதித்த தர்ஷா குப்தா...அரைகுறை உடையில் கவரும் சீரியல் நடிகை!
7:50 PM IST
கணவனை பிரிந்து இருக்கும் மனைவி தாலி சங்கிலியை கழற்றுவதா.?? உயர் நீதிமன்றம் அதிருப்தி.. அதிரடி உத்தரவு.
கணவனை பிரிந்து வாழும் மனைவி தாலிச் சங்கிலியை கழற்றி வைப்பது என்பது கணவருக்கு மனரீதியாக அளிக்கும் டார்ச்சர் என்றும் அது சம்பிரதாய மற்ற செயல் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மனைவியின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் கணவன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு கருத்து கூறியுள்ளனர்.மேலும் படிக்க
6:56 PM IST
முன்பு வேஷ்டி..இப்ப சேலை..கிளாமர் தேவதையாய் மனதை கொள்ளையடிக்கும் மாளவிகா!
பிரபல டிசைனரிடமிருந்து மாளவிகா தற்போது பிரவுன் நிற நெட் புடவையை தேர்வு செய்துள்ளார். கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த சேலை அழகுடன் கூடிய திகைப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க...முன்பு வேஷ்டி..இப்ப சேலை..கிளாமர் தேவதையாய் மனதை கொள்ளையடிக்கும் மாளவிகா!
6:22 PM IST
பொன்னையனுக்கு வேட்டு வைத்த நாஞ்சில் கோலப்பனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி... ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்றும் நீக்கம்.
அதிமுகவினர் குறித்து பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருடன் 21 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க
5:36 PM IST
போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள், பெட்ரோல் குண்டு கொண்டு வந்தார் ஓபிஎஸ்... பன்னீர் மீது பகீர் புகார்.
ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்ய வேண்டுமென அதிமுக மாவட்ட செயலாளர் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். கடந்த 11ஆம் தேதி போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள் பெட்ரோல் குண்டுகள் கொண்டு வந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையை ஓபிஎஸ் தவறாக பயன்படுத்தி உள்ளதால் அவரது பாதுகாப்பை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் அந்ந புகாரில் கூறியுள்ளார்.மேலும் படிக்க
5:31 PM IST
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் லலித் மோடி..அவரது முன்னாள் மனைவி குறித்த சில தகவல்!
சுஷ்மிதா சென்னும், மறைந்த மினல் மோடியும் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவர்கள். இவர்கள் மூவரும் அடிக்கடி ஐபிஎல் போட்டிகளை ஒன்றாக பார்த்துள்ளனர் என பல பத்திரிகைகளில் எழுதப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க...பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் லலித் மோடி..அவரது முன்னாள் மனைவி குறித்த சில தகவல்!
5:01 PM IST
நாட்டை விட்டு வெளியேற மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சேவுக்கு தடை... இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி!!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்த நிலையில் கோட்டபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் வெளியேறக்கூடும் என்பதால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்க வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, வரும் 28 ஆம் தேதி வரை இவர்கள் இருவரும் இலங்கையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4:47 PM IST
"கமல் போஸ்டரை பார்த்து பயந்த விஜய் சேதுபதி..இன்று மாஸ் வில்லன்" : சீனுராமசாமியின் நெகிழ்ச்சி பேட்டி !
மாமனிதன் படம் குறித்தான ப்ரமோஷன் விழாவின் போது இயக்குனர் தனது பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டதோடு தனது நாயகன் குறித்து பெருமிதமாக பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க..."கமல் போஸ்டரை பார்த்து பயந்த விஜய் சேதுபதி..இன்று மாஸ் வில்லன்" : சீனுராமசாமியின் நெகிழ்ச்சி பேட்டி !
4:40 PM IST
ஜாமினில் வெளிவந்த பாஜக நிர்வாகி சவுதாமணி.. மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சவுதாமணி ஜாமினில் வெளிவந்தார். அவரை பாஜக தொண்டர்களும் அவரது ஆதர்வாளர்களும் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கே சென்று போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
4:40 PM IST
பிரசவத்திற்கு வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து டாக்டர் உடலுறவு.. 5 பேருடன் உல்லாசம் அனுபவித்தது
பிரசவம் பார்க்க வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அம்மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. மேலும் படிக்க
3:55 PM IST
மருத்துவமனையில் இருந்துக்கொண்டே பணி செய்யும் முதல்வர்.. நீலகிரி மழை நிலவரத்தை விசாரித்து குழு அமைப்பு
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற, அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் செந்தில்பாலாஜி மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3:50 PM IST
மகளின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூர தாய்.. வித விதமாக டார்ச்சர் செய்து சைகோத்தனம்.
வளர்ப்புத்தாய் 6 வயது மகளின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொடுமை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்துள்ளதுமேலும் படிக்க
.
3:28 PM IST
இந்திரா காந்தியான கங்கனா ரனாவத்.. ட்ரைலரை பார்த்து தமன்னா என்ன சொன்னார் தெரியுமா?
எமர்ஜென்சி டீசர் குறித்து பாலிவுட் பிரபலங்கள் அர்ஜுன் ராம்பால், திவ்யா தாத்தா மற்றும் ஏக்கா கபூர் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்த நிலையை தமன்னா பாட்டியா " பிளடி ப்ரில்லியண்ட் " என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
மேலும் படிக்க...இந்திரா காந்தியான கங்கனா ரனாவத்.. ட்ரைலரை பார்த்து தமன்னா என்ன சொன்னார் தெரியுமா?
3:13 PM IST
அலர்ட்!! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 திட்டம்.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற மாணவிகள் விண்ணப்பித்தற்கான கால அவகாசம் ஜூலை 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணபித்து உள்ளனர்மேலும் படிக்க
3:02 PM IST
பிரதாப் போத்தன் உடலுக்கு கமல், மணிரத்னம், சீனு ராமசாமி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி
நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது உடலுக்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குனர்கள் மணிரத்னம், சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராம், ராஜிவ் மேனன் ஆகியோர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் படிக்க
2:39 PM IST
மக்களே உஷார்!! தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை.. இந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
2:25 PM IST
Pratap Pothen Second Wife : மறைந்த பிரதாப் போத்தன் இரண்டாவது மனைவி மற்றும் மகள் பற்றி தெரியுமா?
Pratap Pothen Second Wife and daughter : கடந்த 1985 ஆம் ஆண்டு மிகவும் பிரபல நடிகராக இருந்த பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு மட்டுமே நிலைத்திருந்தது.
மேலும் படிக்க... Pratap Pothen Second Wife : மறைந்த பிரதாப் போத்தன் இரண்டாவது மனைவி மற்றும் மகள் பற்றி தெரியுமா?
1:53 PM IST
சாதி வன்மத்துடன் கேள்வித்தாள் தயாரித்த ஒருத்தவனையும் விடாதீங்க.. கண்சிவக்கும் ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதிய வன்மத்துடன் வினா அமைக்கக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1:49 PM IST
"பார்த்திபனின் இரவின் நிழல்"....படக்குழுவின் கலகலப்பான வேண்டுகோள்!
ரோபோ சங்கர், வரலட்சுமி, பார்த்திபன் உள்ளிட்டோர் படம் குறித்த சுவாரசியமாக பேசியுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். அதோடு பார்த்திபனை வெகுவாக பாராட்டி உள்ள வரலட்சுமி தயவு செய்து இந்த படத்தை அருகில் உள்ள திரையரங்கில் சென்று பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க..."பார்த்திபனின் இரவின் நிழல்"....படக்குழுவின் கலகலப்பான வேண்டுகோள்!
1:48 PM IST
பக்கா கிளாமராக மாறிய கீர்த்தி சுரேஷ்!.. சொக்க வைக்கும் போட்டோஸ் இதோ..
பட வாய்ப்புகள் அதிகரிப்பதால் கீர்த்தி சுரேஷ் தனது பாணியை மாற்றி கவர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளார். கொஞ்சம் அதிகமாகவே கிளாமர் காட்டி வருகிறார்.
மேலும் படிக்க...பக்கா கிளாமராக மாறிய கீர்த்தி சுரேஷ்!.. சொக்க வைக்கும் போட்டோஸ் இதோ.
1:26 PM IST
'ஜெ' வே 8 வருஷம் என்னால் தூக்கமின்றி தவித்தார்.. நீங்கள் எம்மாத்திரம் ஜெயக்குமார்.. எக்காளம் போடும் ஆர்.எஸ் பாரதி.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல் - திராணியில்லாமல், என்னுடைய கேள்விகளுக்கு தொடர்பில்லாமல் “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை?” என்ற பழமொழிக்கேற்பவும் - “பந்ததை உதைப்பதற்கு பதிலாக, ஆளை உதைப்பதாக” சம்பந்தா சம்பந்தமில்லாமல் - பொறுப்பற்ற தன்மையில் - ஆதாரமில்லாமல் - வாய்க்கு வந்தபடி அறிக்கை என்ற பெயரில் உளறிக் கொட்டியிருக்கிறார்.மேலும் படிக்க
1:08 PM IST
இறப்பதற்கு முன்பே மரணம் குறித்தும்... வாழ்க்கையின் தத்துவத்தையும் முகநூல் பதிவில் கூறிய பிரதாப் போத்தன்!
மறைந்த இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் இறுதியாக தன்னுடைய முகநூலில் பதிவிட்ட பதிவு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் செய்திகள்...
1:06 PM IST
பெரியார் பல்கலை. சாதி தொடர்பான கேள்வியா..? இது தான் சமூக நீதியா கொந்தளித்த அண்ணாமலை
சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்டது தவறானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெற கூடாது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
1:00 PM IST
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
12:46 PM IST
2026 இல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சி... இனி தனித்து நின்று யாருமே ஜெயிக்க முடியாது.. அடித்து சொல்லும் அன்புமணி.
2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியுடன் தமிழகத்தில் பாமக காமராஜர் ஆட்சியை அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்தில் காமராஜர் பெயர் பலகை விரைவில் வைக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் படிக்க
12:29 PM IST
சென்னை ஐஐடி(IIT) நாட்டிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனமாக தொடர்ந்து 4-வது ஆண்டாக தேர்வு
நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியில் தொடர்ந்து 4-வது ஆண்டாக, சென்னை ஐஐடி உயர் கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12:25 PM IST
இபிஎஸ் உள்ளிட்ட 22 பேர் நீக்கம்.. ஆவணங்களை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவில் இருந்து நீக்கிய ஆவணங்களை FAX மூலம் தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி வைத்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை இபிஎஸ் நீக்கிய நிலையில், இபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேரை ஓபிஎஸ் நீக்கினார்.
12:03 PM IST
விஜய்யின் சொகுசு கார் வழக்கு முடித்து வைப்பு
நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நடிகர் விஜய் 2019-ம் ஆண்டு ஜனவரிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை முழுமையாக செலுத்தி இருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கக்கூடாது எனவும், 2019 ஜனவரிக்கு பின்னும் அபராதம் செலுத்தாமல் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.மேலும் படிக்க
11:52 AM IST
15 வயதில் தந்தையை இழந்த பிரதாப் போத்தன்... சினிமாவிற்குள் வந்தது எப்படி?
கடந்த சில மாதங்களாக, உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன்... இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார். இவரது இழப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இவரை பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் தொடர்ந்து வெளியாக துவங்கியுள்ளது. மேலும் படிக்க...
11:51 AM IST
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது...? பெரியார் பல்கலை. தேர்வின் கேள்வியால் சர்ச்சை..அரசியல் கட்சி தலைவர்கள் ஆவேசம்
பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது என கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. எனவே உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதா் கேட்டுக்கொண்டுள்ளார்.
11:47 AM IST
கள்ளக்காதலி சொன்ன அந்த ஒருவார்த்தை.. வேலை முடிந்ததுமே கள்ளக்காதலன் செய்த பயங்கரம்..
திருமணத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பேன்சி ஸ்டோர் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
11:33 AM IST
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை நிபந்தனைகளுடன் ஊர்காவல் துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மீனவர்களின் 2 படகுகளையும் அரசுடமையாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
11:32 AM IST
முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
கொரோனா சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினிடம் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலினிடம் போனில் நலம் விசாரித்தார்.
10:42 AM IST
பொன்னையன் முன்பை போல் இல்லை..! பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார்-சீறிய துரைமுருகன்
கே.பி.முனுசாமி குவாரிக்கு ஏற்கனவே சீல் வைத்துள்ளதாகவும், சமீபத்தில் நடைபெற்ற டெண்டர் ஒன்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்து குவாரி ஒன்றை கே.பி.முனுசாமி பெற்றுள்ளார் என நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
9:58 AM IST
நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்
நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கிய பிரதாப் போத்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 69. மேலும் படிக்க
9:41 AM IST
சின்னவர் என என்னை கூப்பிட்டால் பலருக்கு வயிற்றெரிச்சல்...! எதிர்கட்சிகளை கலாய்த்த உதயநிதி
தன்னை சின்னவர் என்று கூப்பிட்டால் பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுவதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், அவர்கள் வயிற்றெரிச்சல் படட்டும் என தெரிவித்துள்ளார்.
9:32 AM IST
அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்து இருப்பதை அதிகாரபூர்வமாக இலங்கை சபாநாயகர் அறிவித்தார்
9:23 AM IST
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து!
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 113.96 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 82,642 கன அடி ஆகவும் நீர் வெளியேற்றம் 20,000 கன அடி ஆகவும் உள்ளது
9:23 AM IST
சூர்யாவுக்கு கமல் பரிசளித்த ரோலெக்ஸ் வாட்ச்சின் சுவாரஸ்ய பின்னணி
விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் என்கிற மிரட்டலான வில்லனாக வந்து மாஸாக நடித்திருந்த சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார் கமல். இதன் மதிப்பு ரூ.42 லட்சம் ஆகும். இது புது வாட்ச் இல்லை என்றும், கமல் பல வருடங்களாக பயன்படுத்தி வந்தது எனவும் கூறப்பட்ட நிலையில், அவர் அந்த வாட்சை 32 ஆண்டுகளுக்கு முன் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பயன்படுத்தி இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் படிக்க
9:23 AM IST
பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
9:19 AM IST
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?“ பெரியார் பல்கலை தேர்வில் கேள்வி
தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி ? என சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேள்வியால் சர்ச்சை வெடித்துள்ளது. முதுகலை எம்.ஏ வரலாறு 2-வது செமஸ்டர் தேர்வில் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
9:01 AM IST
காப்பு, கம்மல், செயின், கயிறு கட்ட மாணவர்களுக்கு தடை.. பள்ளிக்கு செல்போன் கூடாது.. சமூக பாதுகாப்பு துறை அதிரடி
பள்ளிக்கூட மாணவர்கள் காப்பு, கம்மல், செயின், கயிறு கட்ட தடைவிதித்து சமூகப் பாதுகாப்புத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. பிறந்த நாளன்றும் கூட சீருடையில்தான் வரவேண்டும், டூவீலர், பள்ளிக் கூடங்களில் மொபைல் போனுக்கு அனுமதி இல்லை, டாட்டூ வுடன் பள்ளிக்கூடம் வர அனுமதி இல்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9:00 AM IST
சுஷ்மிதா சென்-ஐ டேட் செய்யும் லலித் மோடி… வைரலாக பரவும் டிவிட்டர் பதிவு!!
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
8:57 AM IST
என்னையும், சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்கியதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள்.. ஓபிஎஸ்ஐ தாக்கும் டிடிவி.
பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் தண்ணீர் பாட்டிலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது, எனக்கே பாவமாகத்தான் இருந்தது. நாளை இதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என டிடிவி.தினகரன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
8:20 AM IST
இரவின் நிழல் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்?... மனம் திறந்த ‘பவி டீச்சர்’ பிரிகிடா
இரவின் நிழல் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் பிரிகிடா. இவர் ஆஹா கல்யாணம் என்கிற வெப்தொடரில் பவி டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவிற்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன். மேலும் படிக்க
8:09 AM IST
பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை
பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2019-20ம் ஆண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் வைத்திருந்தால் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
7:37 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் உயிரிழப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்க, தேவஸ்தான அதிகாரிகள் வரிசையில் உள்ள கழிவறையில் உயிரிழந்ததாக கூறுகின்றனர்.
7:35 AM IST
ஒரு விஷயத்துக்குதான் அமைதியா இருக்கேன்.. ஜெயபிரதீப் உருக்கம்
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயபிரதீப் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,
7:20 AM IST
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புவதாக தகவல்
சென்னை, காவேரி மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்றதாக மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
7:19 AM IST
நடிகர் விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு
சொகுசு கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
8:53 PM IST:
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை தாமரை, பா விஜய், விவேக் எழுதியுள்ளனர். தற்போது ஆதிரா என்னும் தெலுங்கு பாடல் வரும் ஜூலை 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க... சீயானின் விக்ரம் படத்திலிருந்து ஆதிரா லிரிக் வீடியோ பாடல் வெளியீடு
8:52 PM IST:
ஏற்கனவே தாய் கிழவி பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு வரிகளை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது மேகம் கருக்குதா என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் தனுஷ் எழுதி பாடியுள்ளார்.
மேலும் படிக்க... தனுஷ் குரலில் "மேகம் கருக்காதா "..திருச்சிற்றம்பலம் லிரிக் வீடியோ இதோ!
8:50 PM IST:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 வில் பங்கேற்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர் சினிமா வாய்ப்புகளை குறிவைத்து வருகிறார்.
மேலும் படிக்க...உச்சகட்ட கவர்ச்சியில் குதித்த தர்ஷா குப்தா...அரைகுறை உடையில் கவரும் சீரியல் நடிகை!
7:50 PM IST:
கணவனை பிரிந்து வாழும் மனைவி தாலிச் சங்கிலியை கழற்றி வைப்பது என்பது கணவருக்கு மனரீதியாக அளிக்கும் டார்ச்சர் என்றும் அது சம்பிரதாய மற்ற செயல் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மனைவியின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் கணவன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு கருத்து கூறியுள்ளனர்.மேலும் படிக்க
6:56 PM IST:
பிரபல டிசைனரிடமிருந்து மாளவிகா தற்போது பிரவுன் நிற நெட் புடவையை தேர்வு செய்துள்ளார். கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த சேலை அழகுடன் கூடிய திகைப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க...முன்பு வேஷ்டி..இப்ப சேலை..கிளாமர் தேவதையாய் மனதை கொள்ளையடிக்கும் மாளவிகா!
6:22 PM IST:
அதிமுகவினர் குறித்து பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருடன் 21 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க
5:36 PM IST:
ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்ய வேண்டுமென அதிமுக மாவட்ட செயலாளர் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். கடந்த 11ஆம் தேதி போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள் பெட்ரோல் குண்டுகள் கொண்டு வந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையை ஓபிஎஸ் தவறாக பயன்படுத்தி உள்ளதால் அவரது பாதுகாப்பை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் அந்ந புகாரில் கூறியுள்ளார்.மேலும் படிக்க
5:31 PM IST:
சுஷ்மிதா சென்னும், மறைந்த மினல் மோடியும் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவர்கள். இவர்கள் மூவரும் அடிக்கடி ஐபிஎல் போட்டிகளை ஒன்றாக பார்த்துள்ளனர் என பல பத்திரிகைகளில் எழுதப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க...பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் லலித் மோடி..அவரது முன்னாள் மனைவி குறித்த சில தகவல்!
7:23 PM IST:
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்த நிலையில் கோட்டபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் வெளியேறக்கூடும் என்பதால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்க வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, வரும் 28 ஆம் தேதி வரை இவர்கள் இருவரும் இலங்கையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4:47 PM IST:
மாமனிதன் படம் குறித்தான ப்ரமோஷன் விழாவின் போது இயக்குனர் தனது பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டதோடு தனது நாயகன் குறித்து பெருமிதமாக பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க..."கமல் போஸ்டரை பார்த்து பயந்த விஜய் சேதுபதி..இன்று மாஸ் வில்லன்" : சீனுராமசாமியின் நெகிழ்ச்சி பேட்டி !
4:40 PM IST:
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சவுதாமணி ஜாமினில் வெளிவந்தார். அவரை பாஜக தொண்டர்களும் அவரது ஆதர்வாளர்களும் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கே சென்று போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
4:40 PM IST:
பிரசவம் பார்க்க வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அம்மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. மேலும் படிக்க
3:55 PM IST:
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற, அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் செந்தில்பாலாஜி மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3:50 PM IST:
வளர்ப்புத்தாய் 6 வயது மகளின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொடுமை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்துள்ளதுமேலும் படிக்க
.
3:28 PM IST:
எமர்ஜென்சி டீசர் குறித்து பாலிவுட் பிரபலங்கள் அர்ஜுன் ராம்பால், திவ்யா தாத்தா மற்றும் ஏக்கா கபூர் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்த நிலையை தமன்னா பாட்டியா " பிளடி ப்ரில்லியண்ட் " என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
மேலும் படிக்க...இந்திரா காந்தியான கங்கனா ரனாவத்.. ட்ரைலரை பார்த்து தமன்னா என்ன சொன்னார் தெரியுமா?
3:13 PM IST:
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற மாணவிகள் விண்ணப்பித்தற்கான கால அவகாசம் ஜூலை 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணபித்து உள்ளனர்மேலும் படிக்க
3:02 PM IST:
நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது உடலுக்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குனர்கள் மணிரத்னம், சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராம், ராஜிவ் மேனன் ஆகியோர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் படிக்க
2:39 PM IST:
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
2:25 PM IST:
Pratap Pothen Second Wife and daughter : கடந்த 1985 ஆம் ஆண்டு மிகவும் பிரபல நடிகராக இருந்த பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு மட்டுமே நிலைத்திருந்தது.
மேலும் படிக்க... Pratap Pothen Second Wife : மறைந்த பிரதாப் போத்தன் இரண்டாவது மனைவி மற்றும் மகள் பற்றி தெரியுமா?
1:53 PM IST:
பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதிய வன்மத்துடன் வினா அமைக்கக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1:49 PM IST:
ரோபோ சங்கர், வரலட்சுமி, பார்த்திபன் உள்ளிட்டோர் படம் குறித்த சுவாரசியமாக பேசியுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். அதோடு பார்த்திபனை வெகுவாக பாராட்டி உள்ள வரலட்சுமி தயவு செய்து இந்த படத்தை அருகில் உள்ள திரையரங்கில் சென்று பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க..."பார்த்திபனின் இரவின் நிழல்"....படக்குழுவின் கலகலப்பான வேண்டுகோள்!
1:48 PM IST:
பட வாய்ப்புகள் அதிகரிப்பதால் கீர்த்தி சுரேஷ் தனது பாணியை மாற்றி கவர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளார். கொஞ்சம் அதிகமாகவே கிளாமர் காட்டி வருகிறார்.
மேலும் படிக்க...பக்கா கிளாமராக மாறிய கீர்த்தி சுரேஷ்!.. சொக்க வைக்கும் போட்டோஸ் இதோ.
1:26 PM IST:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல் - திராணியில்லாமல், என்னுடைய கேள்விகளுக்கு தொடர்பில்லாமல் “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை?” என்ற பழமொழிக்கேற்பவும் - “பந்ததை உதைப்பதற்கு பதிலாக, ஆளை உதைப்பதாக” சம்பந்தா சம்பந்தமில்லாமல் - பொறுப்பற்ற தன்மையில் - ஆதாரமில்லாமல் - வாய்க்கு வந்தபடி அறிக்கை என்ற பெயரில் உளறிக் கொட்டியிருக்கிறார்.மேலும் படிக்க
1:08 PM IST:
மறைந்த இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் இறுதியாக தன்னுடைய முகநூலில் பதிவிட்ட பதிவு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் செய்திகள்...
1:06 PM IST:
சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்டது தவறானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெற கூடாது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
1:03 PM IST:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
12:46 PM IST:
2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியுடன் தமிழகத்தில் பாமக காமராஜர் ஆட்சியை அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்தில் காமராஜர் பெயர் பலகை விரைவில் வைக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் படிக்க
12:29 PM IST:
நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியில் தொடர்ந்து 4-வது ஆண்டாக, சென்னை ஐஐடி உயர் கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12:25 PM IST:
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவில் இருந்து நீக்கிய ஆவணங்களை FAX மூலம் தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி வைத்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை இபிஎஸ் நீக்கிய நிலையில், இபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேரை ஓபிஎஸ் நீக்கினார்.
12:03 PM IST:
நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நடிகர் விஜய் 2019-ம் ஆண்டு ஜனவரிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை முழுமையாக செலுத்தி இருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கக்கூடாது எனவும், 2019 ஜனவரிக்கு பின்னும் அபராதம் செலுத்தாமல் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.மேலும் படிக்க
11:52 AM IST:
கடந்த சில மாதங்களாக, உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன்... இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார். இவரது இழப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இவரை பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் தொடர்ந்து வெளியாக துவங்கியுள்ளது. மேலும் படிக்க...
11:51 AM IST:
பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது என கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. எனவே உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதா் கேட்டுக்கொண்டுள்ளார்.
11:47 AM IST:
திருமணத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பேன்சி ஸ்டோர் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
11:33 AM IST:
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை நிபந்தனைகளுடன் ஊர்காவல் துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மீனவர்களின் 2 படகுகளையும் அரசுடமையாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
11:32 AM IST:
கொரோனா சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினிடம் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலினிடம் போனில் நலம் விசாரித்தார்.
10:42 AM IST:
கே.பி.முனுசாமி குவாரிக்கு ஏற்கனவே சீல் வைத்துள்ளதாகவும், சமீபத்தில் நடைபெற்ற டெண்டர் ஒன்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்து குவாரி ஒன்றை கே.பி.முனுசாமி பெற்றுள்ளார் என நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
10:07 AM IST:
நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கிய பிரதாப் போத்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 69. மேலும் படிக்க
9:41 AM IST:
தன்னை சின்னவர் என்று கூப்பிட்டால் பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுவதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், அவர்கள் வயிற்றெரிச்சல் படட்டும் என தெரிவித்துள்ளார்.
9:32 AM IST:
அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்து இருப்பதை அதிகாரபூர்வமாக இலங்கை சபாநாயகர் அறிவித்தார்
9:23 AM IST:
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 113.96 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 82,642 கன அடி ஆகவும் நீர் வெளியேற்றம் 20,000 கன அடி ஆகவும் உள்ளது
9:23 AM IST:
விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் என்கிற மிரட்டலான வில்லனாக வந்து மாஸாக நடித்திருந்த சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார் கமல். இதன் மதிப்பு ரூ.42 லட்சம் ஆகும். இது புது வாட்ச் இல்லை என்றும், கமல் பல வருடங்களாக பயன்படுத்தி வந்தது எனவும் கூறப்பட்ட நிலையில், அவர் அந்த வாட்சை 32 ஆண்டுகளுக்கு முன் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பயன்படுத்தி இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் படிக்க
9:24 AM IST:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
9:19 AM IST:
தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி ? என சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேள்வியால் சர்ச்சை வெடித்துள்ளது. முதுகலை எம்.ஏ வரலாறு 2-வது செமஸ்டர் தேர்வில் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
9:01 AM IST:
பள்ளிக்கூட மாணவர்கள் காப்பு, கம்மல், செயின், கயிறு கட்ட தடைவிதித்து சமூகப் பாதுகாப்புத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. பிறந்த நாளன்றும் கூட சீருடையில்தான் வரவேண்டும், டூவீலர், பள்ளிக் கூடங்களில் மொபைல் போனுக்கு அனுமதி இல்லை, டாட்டூ வுடன் பள்ளிக்கூடம் வர அனுமதி இல்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9:00 AM IST:
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
8:57 AM IST:
பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் தண்ணீர் பாட்டிலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது, எனக்கே பாவமாகத்தான் இருந்தது. நாளை இதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என டிடிவி.தினகரன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
8:20 AM IST:
இரவின் நிழல் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் பிரிகிடா. இவர் ஆஹா கல்யாணம் என்கிற வெப்தொடரில் பவி டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவிற்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன். மேலும் படிக்க
8:09 AM IST:
பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2019-20ம் ஆண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் வைத்திருந்தால் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
7:37 AM IST:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்க, தேவஸ்தான அதிகாரிகள் வரிசையில் உள்ள கழிவறையில் உயிரிழந்ததாக கூறுகின்றனர்.
7:35 AM IST:
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயபிரதீப் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,
7:20 AM IST:
சென்னை, காவேரி மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்றதாக மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
7:19 AM IST:
சொகுசு கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.