மகளின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூர தாய்.. வித விதமாக டார்ச்சர் செய்து சைக்கோத்தனம்.
வளர்ப்புத்தாய் 6 வயது மகளின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொடுமை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்துள்ளது
.
வளர்ப்புத்தாய் 6 வயது மகளின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொடுமை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்துள்ளது.
எத்தனையே பேர் குழந்தை வரம் வேண்டி தவம் கிடக்கின்றனர், ஆனால் குழந்தையில் அருமை தெரியாத சிலர், பெற்ற குழந்தைகளிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வது, அவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது எதைக் கேட்டாலும் எரிந்து விழுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது புறம் என்றால், மறுபுறம் குழந்தை இல்லாதவர்கள் சிலநேரங்களில் குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பதுடன், அக்குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கின்றனர், அதில் இன்னும் சிலரோ அக்குழந்தைகளை சித்திரவதை செய்வது, அடித்து கொடுமைப்படுத்தி அக்குழந்தைகளை கொலை செய்யும் அளவிற்கும் துணிந்து விடுகின்றனர். இந்த வரிசையில் தத்தெடுத்த மகளை அவளின் தாய் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொடுமை செய்துள்ளார் சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-
இதையும் படியுங்கள்: பள்ளி மாணவி 10 மணி நேரம் மாறி மாறி கூட்டு பலாத்காரம்.. வேலை முடிந்ததும் சாலையில் தூக்கி வீசப்பட்ட கொடூரம்.!
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ தாகூர் கஞ்சி பகுதியை சேர்ந்த பூனம் என்ற பெண்மணிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது, ஆனால் அவருக்கு குழந்தை இல்லை, இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு தெரிந்த அஜய் குமார் என்பவரின் மகளை தத்தெடுத்துள்ளார். குடும்பத்தாரின் கட்டாயத்தின் பேரில் குழந்தை தாத்தெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் குழந்தை வீட்டிற்கு வந்ததும் முதலிருந்தே அந்தக் குழந்தையின் மீது பூனமும் அவரது கணவரும் வெறுப்பைக் காட்ட ஆரம்பித்தனர், ஒருகட்டத்தில் வளர்ப்பு மகளை தகாத வார்த்தைகளால் திட்டுவது, கடுமையாக தாக்கு வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார் பூனம்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஆன்று சமையலறையில் இருந்த சூடான எண்ணையை அச்சிறுமியின் அந்தரங்க உறுப்பில் ஊற்றி பூனம் கொடுமை செய்துள்ளார். அதில் படுகாயம் அடைந்த அச்சிறுமி வலியால் கதறி அழுததுடன் அக்கம்பக்கத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து உடனே அவர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ மனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அச்சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொடூரமாக நடந்து கொண்ட வளர்ப்புத்தாயை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஒதுக்குப்புறமாக உல்லாசம்.. கள்ளக்காதலி சொன்ன அந்த ஒருவார்த்தை.. வேலை முடிந்ததுமே கள்ளக்காதலன் செய்த பயங்கரம்!
இதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலித்து ஏமாற்றிய பெண் காதலியை குத்தி கொலை செய்த துடன் தானும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்த்தில் துர்க் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த சில வருடங்களாக அவர்கள் உயிருக்குயிராய் காதலித்து வந்தனர். திடீரென காதலிக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது. இது காதலனுக்கு தெரியவந்தது, அதில் காதலன் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் தனது காதலியை பலமுறை சந்தித்து தான் உயிருக்கு உயிராக நேசிப்பதை எடுத்துக்கூறினார், ஆனால் காதலி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேநேரத்தில் காதலனை சந்திப்பதை அந்த பெண் தவிர்த்து வந்தார், இதனால் ஆத்திரமடைந்த காதலன் அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று காதலியை கத்தியால் குத்தினான் இதில் அப்பெண் ரத்தவெள்ளத்தில் சரிந்தார், காதலியை கொன்று விட்டோமோ என துயரத்தில் அந்த இளைஞர் தானும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்தது, வீட்டில் மகளும் ஒரு இளைஞனும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காதலர்கள் இருவரின் குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.