பாழடைந்த கட்டிடத்தில் தூக்கி சென்று மாணவிக்கு வலுக்கட்டாயமாக மது கலந்த கூல்டரிங்க்ஸை குடிக்க வைத்து இருவரும் சேர்ந்து மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் 8 மணிக்கு கடத்தப்பட்ட மாணவியை 10 மணி நேரம் பலாத்காரம் செய்த அந்த கும்பல் மாலை 6 மணியளவில் சாலையோரத்தில் வீசி சென்றுள்ளனர். 

பள்ளி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரத்தில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராஜஸ்தான் மாநிலம் டவுசா மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல மாணவியை அவரது தந்தை பள்ளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு மாணவி அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவியை வாயை போத்தி கடத்தி சென்றுள்ளனர். 

இதையும் படிங்க;- என்ன லவ் பண்ணிட்டு.. வேறு ஒருத்தவன் கூட நிச்சயதார்த்தம் பண்ணுவியா.. காதலி துடிதுடிக்க கழுத்தறுத்து கொலை.!

இதனையடுத்து, நெடுஞ்சாலையில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் தூக்கி சென்று மாணவிக்கு வலுக்கட்டாயமாக மது கலந்த கூல்டரிங்க்ஸை குடிக்க வைத்து இருவரும் சேர்ந்து மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் 8 மணிக்கு கடத்தப்பட்ட மாணவியை 10 மணி நேரம் பலாத்காரம் செய்த அந்த கும்பல் மாலை 6 மணியளவில் சாலையோரத்தில் வீசி சென்றுள்ளனர். 

இந்நிலையில், அந்த பக்கமாக லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஆடைகள் கலைந்த நிலையில் மாணவி மயங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, லாரியை நிறுத்திவிட்டு மாணவியிடம் சென்றுள்ளார். மாணவியிடம் அந்த லாரி டிரைவர் விசாரித்தபோது, அந்த மாணவி தனது தந்தையின் செல்போன் எண்ணை அவரிடம் கொடுத்துள்ளார். உடனே, அந்த லாரி டிரைவர் மாணவியின் தந்தைக்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட் முடிந்த மறுநாளே இளம்பெண் செய்த காரியம்.. 15 லட்சத்தை இழந்த புதுமாப்பிள்ளை கதறல்.!

பதறிப்போன தந்தை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். இதனையடுத்து, தந்தையிடம் நடந்தவற்றை கூறி மகள் கதறி அழுதுள்ளார். பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- ஒரு பேராசிரியைக்கு இவ்வளவு ஒரு காமவெறியா? கள்ளக்காதலை துண்டித்த காதலன்.. 40 இடங்களில் கத்தியால் குத்தி கொலை