ஜாமினில் வெளிவந்த பாஜக நிர்வாகி சவுதாமணி.. மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சவுதாமணி ஜாமினில் வெளிவந்தார். அவரை பாஜக தொண்டர்களும் அவரது ஆதர்வாளர்களும் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் பாஜக நிர்வாகியான சவுதாமணி. இவர் பிரபல செய்தி வாசிப்பாளராக வலம் வந்தவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் கோல்டன் என்பவர் ஆலந்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் சமூக வலைத்தளங்களில் இரு மதங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் ஆடியோ வெளியிட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, மத கலவரத்தை தூண்டுவது, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மருத்துவமனையில் இருந்துக்கொண்டே பணி செய்யும் முதல்வர்.. நீலகிரி மழை நிலவரத்தை விசாரித்து குழு அமைப்பு
அதுமட்டுமல்லாமல் கடந்த 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகாரில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்மையில் தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சவுதாமணி பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக பேசியதாக கூறப்படும் நிலையில், இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கே சென்று போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இவருக்கு ஜாமின் வழங்கியதை அடுத்து இன்று பாஜக நிர்வாகி சவுதாமணி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை பாஜக தொண்டர்களும் அவரது ஆதரவாளர்களும் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மேலும் படிக்க:சும்மா கெத்தா.. அதிமுக பொதுச்செயலாளராக சேலம் செல்லும் எடப்பாடி.. வழி நெடுகிலும் மாஸ் வரவேற்பு