ஒரே நாடு ஒரே சந்தை என்பது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
politics Jun 8, 2020, 12:15 PM IST
3 சிறப்பு ரயில்களையாவது இயக்க தயாராக மாநில அரசு இருந்தது. ஆனால், இதில் பயணம் செய்வோரிடம் தமிழக முகவரியில் ஆதார் அட்டை இல்லை என்றும், அவர்கள் தமிழர்கள்தானா என்றும் தெரியவில்லை என தமிழ்நாடு அரசும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் நிராகரித்துவிட்டன. இந்த அணுகுமுறை மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள முகவரியில் ஆதார் அட்டை பெற்றுள்ள மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு சிறப்பு ரயில்கள் மூலம் திரும்பி விட்டனர். எந்த மாநில அரசும் இதுபோன்று நிராகரிக்கவில்லை.
politics Jun 4, 2020, 9:18 PM IST
இந்தியாவிலேயே தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முதன்மை மாநிலமாக இருக்கிற மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இருந்து வருகிறது. எண்ணிக்கை கூடுவதைப் பற்றி கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என அடிக்கடி கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இத்தகைய செயல்களின் மூலமாக வேகமாக பரவி வரும் கொரோனாவை தமிழக அரசால் எதிர்கொள்ள முடியுமா என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது
politics May 29, 2020, 9:08 PM IST
இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இதிலிருந்து இந்தியாவை மீட்டு, மீண்டும் தொழில் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மேலும் அதிக நிதியை ஒதுக்கவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
politics May 25, 2020, 12:29 PM IST
திமுக அமைப்பு செயலாரும், மாநிலங்களை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கட்சி அரங்குகளில் நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் சர்ச்சையை எழுப்பி, அதையொட்டி அடிப்படை ஆதாரமற்ற பொய் வழக்கை ஜோடித்து கைது செய்திருப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
politics May 23, 2020, 8:33 PM IST
"இலவச மின்சாரத்திற்கான கட்டணத்தை விவசாயிகளிடமிருந்து மின்சார வாரியம் கட்டாயம் வசூலிக்க வேண்டும். வசூலித்த பிறகு தமிழக அரசு விரும்பினால், அந்த கட்டணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பயன்மாற்ற திட்டத்தின் மூலம் செலுத்திக்கொள்ளலாம். எந்த வகையிலும் மின்சாரத்தை இலவசமாக எவருக்கும் வழங்கக் கூடாது என்பதே மத்திய மின்சார சட்டத் திருத்தத்தின் நோக்கமாகும். இதை தமிழக விவசாயிகள் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
politics May 22, 2020, 9:17 PM IST
பாஜகவின் சித்தாந்தம் பெண்மைக்கு எதிரானது. ஜனகரின் மகள் கற்புக்கரசி சீதையையே தீக்குளிக்க சொன்னவர்கள் அவர்கள் என ஜோதிமணி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
politics May 19, 2020, 12:28 PM IST
மத்திய பாஜக அரசின் நிதித்துறை தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிற சுற்றறிக்கையினால் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக விவசாயிகள், நெசவாளர்கள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரத்திற்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.
politics May 18, 2020, 2:28 PM IST
தமிழகத்தில் விவசாயிகள் பயன்படுத்துகிற 21.4 லட்சம் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல 2.1 கோடி ஏழை எளிய மக்கள் பயன்படுத்துகிற முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல 11 லட்சம் குடிசைகளுக்கும், 77,100 கைத்தறி நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை எல்லாம் ரத்து செய்வதற்காகத்தான் மத்திய அரசின் மின்சாரத் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இத்திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் பயன்படுத்துகிற மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டு, அதற்கான தொகையை மாதம்தோறும் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும்.
politics May 13, 2020, 8:36 PM IST
ஒருபக்கம் மக்கள் கொரோனா நோய்க்கு எதிராகப் போராடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தைப் பறிகொடுத்து பசி, பட்டினியோடு வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகிறார்கள்.
politics May 8, 2020, 2:54 PM IST
எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தமிழக அரசு இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறந்தன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் தனது எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் ட்விட்டர் பதிவு மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
politics May 7, 2020, 8:37 PM IST
வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் கொண்டுவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடியை முதல்வருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
politics May 5, 2020, 12:24 AM IST
புகைப்படக் கலைஞர் என்ற முறையிலும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலும் தனக்குக் கிடைத்த ஆதாரத்துடன் ஸ்ரீராம் பதிவிட்டிருந்தார்.
politics Apr 30, 2020, 4:55 PM IST
சேலத்தில் முதல்வர் ஆற்றியிருக்கிற உரை எதேச்சாதிகாரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்றிருக்கிறது. அந்த உரையில், "அனைத்துக் கட்சிக் கூட்டத்தை எதற்காக கூட்ட வேண்டும்? இவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு இவர்கள் என்ன மருத்துவர்களா? தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்காக அதிமுக ஆட்சி மீது நாள்தோறும் குற்றம் குறை கூறி வருகிறார்கள்" என்று ஆத்திரம் பொங்க கொட்டித்தீர்த்திருக்கிறார்.
politics Apr 17, 2020, 5:58 PM IST
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் வழங்கும் எத்தகைய நிவாரண உதவிகளையும் தடுக்க வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பிறப்பிக்கப்பட்ட மக்கள் நலனுக்கு விரோதமான தமிழக அரசின் ஆணையையும் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன்மூலம் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நிவாரண உதவிகளை 3 பேர் மற்றும் ஒர் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் வழங்குவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
politics Apr 16, 2020, 9:03 PM IST