Cook With Comali: குக் வித் கோமாளி சீசன் 5 ஒளிபரப்பாகுறது இனி சந்தேகம் தான் போலயே! அதிரடியாக விலகிய இயக்குனர்!
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்போது துவங்கும் என சிலர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து பிரபலங்கள் வெளியேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில், காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது 'குக் வித் கோமாளி'. பிக்பாஸ் நிகழ்ச்சி, எந்த அளவுக்கு அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறதோ, அதே அளவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் துவங்குமா? என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், நடுவர்களாக சமையல் கலைஞர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் இருந்தனர். குக்குகளாக ஒவ்வொரு சீசனிலும், சீரியல் பிரபலங்கள், இயக்குனர்கள், காமெடி நடிகர்கள், போன்ற பலர் கலந்து கொண்டனர்.
கோமாளிகளாக நிகைச்சுவை திறன் நிறைந்த சில பிரபலங்கள் பங்கேற்றனர். முதல் சீசனில் வனிதா டைட்டில் பட்டத்தை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது சீசனில் கனி அகத்தியன் வெற்றி பெற்றார். மூன்றாவது சீசனில் நடிகை ஸ்ருதிகாவும், கடைசியாக நடந்து முடிந்த சீசனில் நடிகர் மைம் கோபியும் வெற்றிபெற்றனர்.
இதை தொடர்ந்து விரைவில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி துவங்க உள்ளதாக அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், நடுவார்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ரவூஃபாவும் விலகுவதாக தெரிவித்தார்.
Sunaina Ice Meditation: ஐஸ் பாத் ஓகே... இது என்ன ஐஸ் தியானம்? வைரலாகும் நடிகை சுனைனாவின் போட்டோஸ்!!
இதை தொடர்ந்து, தற்போது இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் இந்த நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், குட்பை சொல்வது ரொம்பவே கடினம், ஆனால் அதே நேரத்தில் மகிழ்ச்சியான நினைவுகளுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன். இது எங்களுக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல, நான்கு சீசன்களும் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக பயணித்த நினைவுகள் எனது நெஞ்சில் எப்போதும் இருக்கும்.
உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆசிர்வாதத்திற்கும் மிகவும் நன்றி. என்றைக்கும் உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இப்படி அடுத்தடுத்த பிரபலங்கள் வெளியேறி வருவதால் அடுத்த சீசன் துவங்குவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.