- Home
- Gallery
- மகனின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பட்டு புடவை அணிந்து நெசவாளர்களுக்கு மரியாதை செய்த நிதா அம்பானி!
மகனின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பட்டு புடவை அணிந்து நெசவாளர்களுக்கு மரியாதை செய்த நிதா அம்பானி!
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில், பாரம்பரிய முறையில் நெய்யப்பட்ட பட்டு புடவை அணிந்து நெசவாளர்களை நிதா அம்பானி பெருமைப்படுத்தியுள்ளார்.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் நிறுவனர், திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநருமான நிதா முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானி திருமணம் ஜூலை 12-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இவர்களின் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பே திருமண கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கி விட்டது. அதன்படி மார்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை, ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் கலந்து கொள்ள ஏராளமான பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நேற்றுடன் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதே போல் ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் தோனி, டெண்டுல்கர், ரன்வீர் சிங், ரன்வீர் கபூர், ஜான்வி கபூர், சல்மான் கான் போன்ற ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சை என தலைசிறந்த மனிதர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இவர்களின் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.
Nita ambani
கடந்த மூன்று நாட்களாகவே, அம்பானி மகனின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குறித்த விஷயம் தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கும் நிலையில், தற்போது தன்னுடைய மகன் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் நிதா அம்பானி அணிந்திருந்த புடவை பற்றிய தகவல் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
Nita ambani
நிதா அம்பானி அணிந்திருந்த புடவை... பாரம்பரிய முறையில், தென்னிந்திய நெசவாளர்கள் கைகளால் உருவாக்கப்பட்டது. இதில் தங்கம் மற்றும் வெள்ளி கலந்து இழைகள் நெய்யப்பட்டுள்ள. பல கோடிக்கு அதிபதியாக இருந்தும், நெசவாளர்களை பெருமை படுத்தும் விதத்தில், நிதா அம்பானி இந்த சேலையை அணிந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த பாரம்பரிய சேலையை மேலும் அழகாக்கும் வைகியில், இந்த புடவையில் எம்பிராய்டரி மற்றும் நீதியான ஜர்தோசி வேலைகளை மனீஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்துள்ளார். ஹாப் ஒயிட் நிறத்தில், இருக்கும் இந்த சேலையை அணிந்து, மகனின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் தன்னுடைய அழகால், கவர்ந்தார் நிதா அம்பானி.