காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (அக்டோபர் 17ஆம் தேதி) காலை தொடங்குகிறது.
- Home
- Tamil Nadu News
- Tamil News live : தொடரும் கனமழை... அந்தியூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!
Tamil News live : தொடரும் கனமழை... அந்தியூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

கனமழை காரணமாக ஈரோடு அந்தியூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்தியூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்தியூரில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் அந்தியூரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் : கர்நாடகாவில் இருக்கும் ராகுல் காந்தி எப்படி வாக்களிப்பார்? சர்ச்சையில் காங்கிரஸ்!
ஹாங்காங்கை ரவுண்ட் கட்டியாச்சு.. சீன அதிபர் ஜி ஜின்பிங் கொடுத்த வார்னிங்! அச்சத்தில் உலக நாடுகள்
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி வேனுக்குள் 11 அடி ராட்சத மலைப்பாம்பு.. அலறிய பொதுமக்கள்! பயந்த வனத்துறை
பள்ளி பேருந்தில் பெரிய மலை பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி சத்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அன்றே கோட்டைவிட்ட காவல்துறை - பரபர பின்னணி!
சத்யா கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளனர் சிபிசிஐடி.
இந்தி பயிற்று மொழியா.? அமித்ஷா பதவி விலக வேண்டும்.. எச்சரித்த திருமாவளவன்
பாராளுமன்றக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து மாண்புமிகு அமைச்சர் அமித் ஷா விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு
எடப்பாடி அணியை சேர்ந்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தி திணிப்பை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது - முன்னாள் முதலமைச்சர் திட்ட வட்டம்
உலக பட்டினிக் குறியீட்டில் 121 நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது. நமது நாட்டில் பட்டினியால் வாடும் மக்கள் 22 கோடி பேரும், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் 33% உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்தி திணிப்பை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. இந்தி திணிப்பை நாங்கள் போராடி தடுப்போம். புதுச்சேரியில் பொதுமக்கள் மரியாதை நிமிர்த்தமாக ஆளுநரை சந்திக்கலாம். ஆனால் மக்களிடம் குறைகேட்க சந்திப்பது தவறு.மேலும் படிக்க
கல்லூரியில் நுழைந்த புலிகள்.. 5,000 மாணவர்களுக்கு விடுமுறை.. 10 நாட்களுக்கு பின் பிடிப்பட்ட பின்னணி..
போபாலில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன பரந்து விரிந்தது. கிட்டத்தட்ட 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்நிறுவனத்தில் சுமார் 100 ஏக்கர பரப்பில் வனப்பகுதி மற்றும் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. மேலும் படிக்க
கோவை தெற்கில் கமல்ஹாசனை தோற்கடித்து மாஸ் காட்டியவர் வானதி சீனிவாசன்.. பாஜக Vs மநீம மோதல் !
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எழுதிய தடையொன்றுமில்லை எனும் புத்தக வெளியீட்டு விழா இன்று கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
எடப்பாடி அருகே சீட்டில் அமர்வீர்களா.? எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நாளை காலை தொடங்க உள்ளது. இந்நிலையில் அது தொடர்பாக இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் ஹிந்தியில் மருத்துவ படிப்பு தொடக்கம்..
நாட்டில் முதல்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தியில் மருத்துவ படிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று
தொடங்கி வைத்தார். ஹிந்தி மொழியில் மருத்துவ கல்வி மேற்கொள்ளும் வகையில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர்! ச்சீ அசிங்கமா இல்லையா?
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை பெண்ணின் கணவர் பார்த்துள்ளார். அதன் பிறகு வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
இந்த வருட தீபாவளிக்கு 600 கோடி டார்கெட்.. டாஸ்மாக் மது விற்பனையை தட்டி தூக்குவார்களா மதுப்பிரியர்கள்!
தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 20 ஆம் தேதிவரை கனமழை.. இன்று 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 20 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
ஹிந்தி திணிப்பு வேண்டாம்.. இந்தியாவை சிதைத்துவிடும்.. பிரதமருக்கு முதலமைச்சர் பரபர கடிதம்
இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மேலும் படிக்க
சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி..! நகை வியாபாரியிடம் பல லட்சங்களை ஏமாற்றி கும்பல்
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நகை வியாபாரி ஒருவர் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் சதிகார கும்பலிடம் 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், இழந்த பணத்தை மீட்டுத் தரவும் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தீவிர ரசிகனாக இருந்தும் CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத் - காரணம் தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க..!
இசையமைப்பாளர் அனிருத்தும் CSK அணியின் வெறித்தனமான ரசிகர் ஆவார். CSK அணியின் தீவிர ரசிகராக இருந்தும் அவர் அந்த அணிக்காக எந்த ஒரு பாடலும், தீம் மியூசிக்கும் போட்டுக்கொடுத்தது இல்லை. அதற்கான காரணம் குறித்து அனிருத் ஒரு பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார். மேலும் படிக்க
தேவர் சிலை தங்க கவசம் யாருக்கு..? ஓபிஎஸ்யையும், இபிஎஸ்யையும் கழட்டிவிட்டு புதிய முடிவெடுத்த அறங்காவலர்
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்திற்கான வங்கியின் லாக்கர் சாவி தன்னிடம் உள்ளது என்றும், எனவே ஓ.பன்னீர்செல்வம் வேண்டாம், எடப்பாடி பழனிசாமி வேண்டாம் தானே வங்கிக்கு சென்று தங்கக்கவசத்தை பெற்று தேவர் ஜெயந்தி விழாவில் அணிவிக்க உள்ளதாக அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் நாளை வெளியீடு.. கலந்தாய்வு குறித்து அறிவிப்பு..
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதனை தொடர்ந்து தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கி அக்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் படிக்க