Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர்! ச்சீ அசிங்கமா இல்லையா?

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை பெண்ணின் கணவர் பார்த்துள்ளார். அதன் பிறகு வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

wife killed her husband by injecting poison into an illegal relationship
Author
First Published Oct 16, 2022, 4:26 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் பகுதியைச் சேர்ந்தவர் கேசவரா தேஷ்முக். இவருடைய மனைவி பெயர் சுகாசினி. இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினர் தங்களுடைய மகனுடன் வசித்து வந்தனர். மருத்துவராக பணிபுரிந்து வரும் சுகாசினி மீது அவரது கணவருக்கு சந்தேகம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த கணவர் கேசவரா தேஷ்முக், மனைவியை காண அவரது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மனைவியின் ஆண் நண்பரான அருண் காண்டேகர் என்பவர் அவருடன் சிரித்து சிரித்து பேசி வந்துள்ளனர். அதை பார்த்த கணவர் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், இருவரிடமும் தகராறு செய்துள்ளார்.

wife killed her husband by injecting poison into an illegal relationship

இதையும் படிங்க..குழந்தை திருமண விவகாரம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கைது! பரபரப்பு சம்பவம்!

இதனால் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன் கணவருடன் தனியே பேச வேண்டும் என்று அருகிலிருந்த கழிவறை அருகே கணவனை மனைவி கூட்டி சென்றுள்ளார். பிறகு மனைவி, கணவருடன் பேசிக்கொண்டிருக்கையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கு மேல் கணவரை சமாளிக்க முடியாது என்று எண்ணிய சுகாசினி, தனது ஆண் நண்பர் அருணுடன் சேர்ந்து கணவருக்கு விஷ ஊசி செலுத்தியுள்ளார். இதில் கோமா நிலைக்கு போன கணவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் சுமார் 33 நாட்களாக கோமா நிலையில் இருந்த கணவர் சிகிச்சையா பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்

wife killed her husband by injecting poison into an illegal relationship

தந்தை இறந்த சோகத்தை தாங்க முடியாத மகன், தனது தாயிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் தனது தந்தையின் இறப்புக்கு காரணம் தாய் என்றும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தாய் சுஹாசினி மற்றும் அவரது ஆண் நண்பர் அருண் ஆகியோர் தலைமறைவாகியுள்ளார். தற்போது அவர்கள் இருவரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க..இந்த வருட தீபாவளிக்கு 600 கோடி டார்கெட்.. டாஸ்மாக் மது விற்பனையை தட்டி தூக்குவார்களா மதுப்பிரியர்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios