ஹேமமாலினியின் பிரசவத்திற்காக 100 அறைகளை புக் செய்த தர்மேந்திரா.. பல ஆண்டுகளுக்கு பின் வெளியான ரகசியம்..
ஹேம மாலினியின் முதல் பிரசவத்தின் போது தர்மேந்திரா ஒட்டுமொத்த மருத்துவமனையையும் புக் செய்தாராம்.
பாலிவுட்டின் பழம்பெரும் ஜோடிகளில் ஹேமா மாலினியும் தர்மேந்திரா தம்பதியும் ஒன்று. இந்த தம்பதி 1980 திருமணம் செய்து கொண்டனர், மேலும் தங்கள் முதல் மகள் ஈஷாவை நவம்பர் 1981 இல் வரவேற்றனர்.
அந்த நேரத்தில், ஹேம மாலினி கர்ப்பமாக இருந்த விஷயம் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வெளியே பலருக்கு தெரியாது.
ஹிந்தி சினிமாவின் ட்ரீம் கேர்ள் என்று அழைக்கப்படும் ஹேம மாலினி. தர்மேந்திரா ஏற்கனவே பிரகாஷ் கவுரை திருமணம் செய்து கொண்டதால், இந்த ஜோடியின் திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியது..
ஹேம மாலினி தனது முதல் குழந்தையை வரவேற்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருந்தபோது, தர்மேந்திரா அவரின் தனியுரிமையைப் பேணுவதற்காக ஒரு செயலை செய்தாராம்.
ஆம்.. அந்த மருத்துவமனை முழுவதையும் தர்மேந்திரா முன்பதிவு செய்தார். அதில் இருந்த 100 அறைகளையும் அவர் முன்பதிவு செய்தாராம். ஹேமா மாலினியின் தோழி நீது கோஹ்லி சமீபத்தில் கலந்து கொண்ட இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேஇச்ய “ஈஷா பிறக்கப் போகும் போது, ஹேமா கர்ப்பமாக இருப்பது யாருக்கும் தெரியாது, அதனால் தர்மேந்திரா ஜி ஈஷாவுக்காக மருத்துவமனை முழுவதையும் பதிவு செய்திருந்தார்.
அது சுமார் 100 அறைகள் கொண்ட மருத்துவமனையாக. ஈஷா பிறக்க 100 அறைகளையும் அவர் முன்பதிவு செய்தார்.ஆனால் அவர் இதை செய்தது யாருக்கும் தெரியாது.” என்று கூறினார்.