Ajithkumar: உன் பணம் நீயே வச்சிக்கோ.. மன்னிக்காத விஜயகாந்த்! சட்டையை கழட்டி கேப்டனை கண் கலங்க வைத்த அஜித்!
நடிகர் அஜித் நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளாத நிலையில், அவரின் பணத்தை விஜயகாந்த் வாங்க முன் வராத நிலையில், வேறு வழியில்லாமல் அஜித் தன்னுடைய முதுகில் இருந்த காயத்தை காட்டியதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
RIP Captain Vijayakanth
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்... டிசம்பர் 28-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள்... பல ஊர்களில் இருந்து வந்து, தற்போது வரை தொடர்ந்து, அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
விஜயகாந்த் மறைவை தொடர்ந்து, வரை பற்றிய பல தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வரும் நிலையில், தற்போது அஜித் - விஜயகாந்த் இடையே நடந்த எமோஷ்னல் உரையாடல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
Vijayakanth
அதாவது நடிகர் சங்கம் கடன் பிரச்சனையில் தவித்து வந்த போது, நடிகர் சங்க தலைவராக பொறுப்பில் இருந்த விஜயகாந்த், கடனை அடைத்து நடிகர் சங்கத்தை மீட்க வேண்டும் என எண்ணி, 2002-ஆம் ஆண்டு மிக பிரமாண்டமான நட்சத்திர கலை விழா ஒன்றை ஏற்பாடு செய்தார்.
இதில் அப்போதைய முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பர்ஃபாம் பண்ண வேண்டும் என்றும்... கட்டாயம் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கூறப்பட்டது. கேப்டனின் பேச்சை மதித்து, ரஜினிகாந்த், கமல், விஜய், சூர்யா, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த கலை விழாவில் கலந்து கொண்டனர்.
ajith
ஆனால் அஜித் மட்டும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது கேப்டனுக்கு அஜித் மீது கோவம் எழ காரணமாக அமைந்தது. கலை விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும் நேரடியாக விஜயகாந்தை சந்தித்து, ஒரு பெரிய தொகையை அஜித் கொடுத்துள்ளார்.
கலை விழாவில் கலந்து கொள்ளுமாறு கூப்பிடத்துக்கு மரியாதை தரவில்லை... நீ பணம் கொடுத்தா அதை நான் வாங்கிக்கணுமா? உன் பணம் எனக்கு வேண்டாம் எடுத்து செல் என விஜயகாந்த் கூறியுள்ளார். அஜித் தன்னைக்கு உடல் நிலை சரி இல்லாதது தான் காரணம் என எவ்வாவு எடுத்து கொல்லியும் கேப்டன் அவர் கூறியதை காது கொடுத்து கூட கேட்கவில்லையாம்.
பின்னர் வேறு வழி இன்றி, அணிந்திருந்த சட்டையை கழட்டி தன்னுடைய முதுகில் ஆபரேஷன் செய்யப்பட்டு ஆறாமல் இருக்கும் காயத்தை காட்டியுள்ளார். இந்த காயத்துடன் வெளியிடங்களுக்கு செல்ல கூடாது, என்பதால் தான், வரவில்லை என கூறியுள்ளார். அஜித் முதுகில் இருந்த காயத்தை கண்டு கேப்டன் கண் கலங்கி... அஜித் கொடுத்த பணத்தையும் பெருந்தன்மையோடு வாங்கி கொண்டாராம். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.