இந்துவை மனோகரி போட்டு தள்ளியது எப்படி? உடையும் ரகசியம் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வேலு எழிலுக்காக நீ யாரை வேணாலும் கொல்லுவனு எனக்கு தெரியும் என்று வேலு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, பிளாஷ்கட் ஓப்பனாக எழில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த மனோகரி மீண்டும் எழில் வீட்டிற்கு வருகிறாள். மனோகரியை பார்த்ததும் எழில் சந்தோஷப்படுகிறான். இவ்வளவு நாளா எங்க போய்ட்ட என்று கேட்டு விசாரிக்கிறான்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hxy98w3n9jbv0af6fzyjf2d5/m2_300x169xt.jpg)
பிறகு இந்து அவளுக்காக காபி போட போக பின்னாடியே சென்ற எழில் இந்துவுடன் கிச்சனில் வைத்து ரொமான்ஸ் செய்ய அதை பார்த்த மனோகரி கடுப்பாகிறாள். பிறகு எழில் மனோகரிடம் நான் ரொம்ப லக்கி எனக்கு பிடிச்ச மனைவியும் என் கூட இருக்கா, எப்பவும் என்னை புரிஞ்சிட்டு நடக்குற என் ப்ரண்ட் நீயும் என்கூட இருக்க, எப்பவும் என் கூடவே இரு என்று பேசி கொண்டிருக்க இந்து எழிலை கூப்பிட அவன் உள்ளே சென்று விடுகிறான்.
அதன் பிறகு மைண்ட் வாய்ஸில் இனிமே உன்னை விட்டு போகவே மாட்டேன் என்று சொல்லும் மனோகரி அடியாளுக்கு போனை போட்டு இந்துவை கொல்ல ஸ்கெட்ச் போடுகிறாள். மறுநாள் இந்துவுக்கு போன் கால் வருகிறது. அதில் ஆஸ்ரமத்தில் இருந்து பேசுவதாகவும் உங்க அப்பா அம்மா யாரு தெரிந்து விட்டது, நீங்க ஆசிரமத்துக்கு வாங்க என்று போனை வைக்கின்றனர்.
அம்மா அப்பா பற்றி தெரிந்து விட்டதாக கிடைத்த தகவலால் இந்து சந்தோசமாக கிளம்ப வீட்டில் யாரும் இல்லாமல் மனோகரி மட்டும் இருக்க அவளிடம் சொல்லி விட்டு கிளம்பியதும் இந்து செல்லும் காரை லாரி ஒன்று துரத்தி கொண்டே வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.