Chaya Singh: நடிகை சாயா சிங் வீட்டில் உஷாராக கை வரிசை காட்டிய உஷா! 24 மணிநேரத்தில் உண்மையை கக்க வைத்த போலீஸ்!
நடிகை சாயா சிங் வீட்டில், அவரின் வீட்டில் பணியாற்றிய பெண்ணே நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த நடிகை சாயா சிங், கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர். அடுத்தடுத்து கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'திருடா திருடி' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது மட்டுமின்றி, ' மன்மத ராசா' பாடல் பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலமடைய செய்தது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hstgjvyrhpkm2pc62r9hs80b/o3_300x377xt.jpg)
இதைத் தொடர்ந்து கவிதை, அருள், அம்மா அப்பா செல்லம், ஜெயசூர்யா, திருப்பாச்சி, வல்லமை தாராயோ, போன்ற பல படங்களில் நடித்தார். அனந்தபுரத்து வீடு என்கிற திரைப்படத்தில் நடித்த போது... அந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கிருஷ்ணாவுடன் சாயா சிங்குக்கு காதல் மலர்ந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து தமிழ் மற்றும் மற்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் சாயா சிங். தற்போது இவர் கன்னட மொழி படம் ஒன்றில் நடித்து வரும் வருவதால் அப்படத்தின் படபிடிப்புக்காக பெங்களூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டில் தங்கி உள்ளார்.
அப்போது சாயா என் வீட்டில் இருந்த நகை மற்றும் வெள்ளி பொருட்கள் தொலைந்து போனதை உணர்ந்த சாயா சிங், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் தொடர்ந்து அவருடைய வீட்டில் வேலை செய்பவர்களை விசாரித்த நிலையில், உஷா என்கிற பெண் யாருக்கும் தெரியாமல் சாயாசிங் வீட்டில் இருந்து ஐந்து பவுன் தங்கம் மற்றும் 150 கிராம் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது. ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்த உஷா, பின்னர் ஒப்புக்கொண்டார். சாயாசிங் கொடுத்த புகாரின் அடிப்படையில், உஷாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.