ரேட்டிங்கில் பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டிவி தொடர்கள்? மளமளவென டிஆர்பியில் டாப்புக்கு வந்த விஜய் டிவி சீரியல்!
இந்த வருடத்தின் 7-ஆவது வாரத்தில், டாப் 10 TRP பட்டியலில் இடம்பிடித்த சீரியல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
serial TRP
ஒவ்வொரு வாரமும், எந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பதை, அதன் TRP ரேட்டிங் வைத்து தான் நாம் தெரிந்து கொள்கிறோம். அந்த வகையில், இந்த வருடத்தின் 7-ஆவது வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Ethirneechal
இந்த வாரம், சன் டிவியில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் தான், டி ஆர் பி -யில் முதலிடத்தை பிடித்து கெத்து காட்டி உள்ளது. இந்த சீரியலில் கதிர், ஞானம், சக்தி, என மூவருமே குணசேகரனுக்கு எதிராக திரும்பி உள்ள நிலையில், தர்ஷினியை தேடும் படலமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ள நிலையில், 10.4 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது 'சிங்க பெண்ணே' சீரியல். ஆனந்திக்கு உதவ வரும் அன்புவை தொடர்ந்து அவர் தவறாக நினைக்கும் நிலையில், அன்புவின் மனதை புரிந்து கொண்டு அவருடன் ஆனந்தி சேர்வாரா? இல்லையா? என்பதே ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த தொடர் 9.67 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
சன் டிவி தொடர்களை பின்னுக்கு தள்ளி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர். முத்து தன்னுடைய மச்சினன் கையை உடைத்ததற்கான காரணத்தை தொடர்ந்து சொல்லாமல் மறைக்கும் நிலையில், மீனா முதல் அனைவருமே முத்துவை தவறாக நினைக்கின்றனர். இந்த உண்மை வெளிவருமா? மீனா முத்துவை புரிந்து கொள்வாரா? என்கிற கோணத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் 9.55 புள்ளிகளை பெற்றுள்ளது.
எப்போதும் டாப் 2 இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் 'கயல்' சீரியல், இந்த வாரம் ரேட்டிங்கில் சற்று பின் தங்கி இந்த முறை நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு வழியாக கயல் உடல்நிலை தேறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ள நிலையில், தன்னால் தான் கயலுக்கு இப்படி எல்லாம் நடக்கிறது என நினைத்துக்கொண்டு கயல் காதலை வெளிப்படுத்திய பின்னர், அவரை விட்டு பிரிய நினைக்கிறார் எழில். இனி வரும் நாட்களில் கயல் போராடி தன்னுடைய காதலை தக்க வைத்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த தொடர் 9 .38 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது அண்ணன் தங்கைகளின் பாச பிணைப்புடன் ஒளிபரப்பாகி வரும் 'வானத்தப் போல' தொடர். பொன்னிக்கு எதிராக மாறி, சின்ராசு அவரை ஜெயிலுக்கு அனுப்பிய நிலையில், தன்னை வாழவிடாமல் செய்த அனைவரையும் பழிவாங்க துடிக்கிறார் பொன்னி. எனவே அடுத்தடுத்த வரும் காட்சிகள் இதுவரை யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தொடர் இந்த வாரம் 9.29 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து விஜய் டிவியில், மகா சங்கமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், 8.92 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கணேஷால் கடத்தப்பட்ட, அமிர்தாவையும், நிலா பாபாவையும் பத்திரமாக பாக்கியா, எழில் ஆகியோர் மீட்டுள்ள விட்டனர். மேலும் பாண்டியன் ஸ்டோர் தொடரிலும் கதிர் - ராஜு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை தொடங்குவார்களா? என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Iniya Serial
ஆறாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள சீரியல் 'இனியா' . பிரச்சனைகள் ஓய்ந்து மீண்டும் விக்ரம் மற்றும் இனியா தங்களின் வாழ்க்கையில் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இனியாவை திட்டமிட்டு சிலர் கொலை செய்ய முயற்சிப்பது தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த தொடர் 8.43 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
பாப் கட்டிங் ஹேர் ஸ்டைல்.! கோட் சூட்டில்.. ஸ்டைலிஷ் நாயகியாக கலக்கிய ஜோதிகாவின் போட்டோஸ்!
இதைத்தொடர்ந்து எப்போதும் டாப் 5 TRP ரேட்டிங்கில் இடம் பிடித்து வந்த சுந்தரி தொடர் இம்முறை 8-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான கதைக்கமே தொடர்ந்து ரிப்பீட் செய்வது போல் ஒளிபரப்பாகி வருவது தான் இந்த சீரியலின் ட்ரா பேக்காக பார்க்கப்படுகிறது. இந்த தொடர், 7.81 புள்ளிகளை பெற்றுள்ளது.
ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவியில் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வரும் மகாநதி மற்றும் ஆகா கல்யாணம் தொடர்கள். இந்த இரண்டு தொடர்களுமே 6 .49 புள்ளிகளை பெற்றுள்ளது.
10-ஆவது இடத்தை பிடித்துள்ளது, விஜய் டிவியில் சமீபத்தில் துவங்கப்பட்ட சின்ன மருமகள் தொடர். பள்ளியில் படிக்கும் பெண்ணை நாயகன் சேது காதலிக்க, 18 வயது ஆவதற்கு முன்பே திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடப்பதால், திருமணம் செய்யும் நேரத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாண பெண்ணான தமிழ் செல்வி இந்த திருமணத்தை நிறுத்துகிறார். தடைகளை தாண்டி சேது - தமிழ் செல்வியை கரம் பிடிப்பாரா என்பதே இந்த சீரியலின் கதைக்களம். இந்த தொடர், 6.24 புள்ளிகளை பெற்றுள்ளது.