'திருமகள்' சீரியல் ஹீரோ சுரேந்தரை இரண்டாம் திருமணம் செய்த வில்லி நடிகை! புது ஜோடிகளின் வெட்டிங் போட்டோஸ்!
திருமகள் சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சுரேந்தருக்கும், நடிகை நிவேதிதாவுக்கும் இன்று திருமணம் நடந்துள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்களை இருவருமே தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
சீரியலில் ஒன்றாக இணைந்து நடிக்கும் நடிகர் , நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இந்த லிஸ்டில் தற்போது புதிய ஜோடி ஒன்று இணைந்துள்ளது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hq8wnng59t7y7qvyvw340r1y/428681892-18417800812005965-8444867825406312025-n_300x375xt.jpg)
சீரியல் நடிகை நிவேதிதா பங்கஜ், ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு, மகராசி சீரியலில் ஹீரோவாக நடித்த எஸ்.எஸ்.அரியணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம், ஆரியன் வீட்டு குடும்ப வழக்கப்படி மிகவும் பிரமாண்டமாக நடந்தது. ஏராளமான பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு... இந்த ஜோடிகளை வாழ்த்தினர்.
ஆசை ஆசையாய் இருவரும், காதலில் ஒன்றிணைத்த நிலையில்... ஒரு சில வருடங்களிலேயே இவர்களின் காதல் கடந்து, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அரியணை விட்டு பிரிந்த பின்னர், மீண்டும் சீரியல்களில் நடிக்க துவங்கிய இவருக்கு... ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பல சீரியல்களில் சின்ன சின்ன ரோல்ஸ் மற்றும் வில்லி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான 'திருமகள்' சீரியலில் கிட்ட தட்ட வில்லி ரோலில் நடித்திருந்தார் நிவேதிதா. இந்த சீரியலில் நடிக்கும் போது சீரியலில் ஹீரோவாக நடித்த சுரேந்தருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் இவர்களின் உறவு நட்பாக இருந்தாலும், பின்னர் காதலாக மாறியது. இந்த காதல் குறித்து சமீபத்தில் தங்களின் ரொமான்டிக் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருவருமே தெரிவித்தனர்.
அதில் எனக்கு விவாகரத்தாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. நான் என் காதலைக் கண்டுபிடித்து விட்டேன். எனக்கு ஸ்பெஷலான ஒருவருடன் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கைக்காக அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். இந்த நேரத்தில் உங்களுடைய புரிதலையும், மரியாதையையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். தயவுசெய்து அநாகரீகமான கேள்விகள் கேட்பதைத் தவிர்க்கவும்!" எனக் கூறி இருந்தார்.
இவர் இப்படி கூறியதாலோ என்னவோ... நெட்டிசன்கள் பலர் இவர்களின் காதல் விஷயத்தை பின்னர் முழு மனதுடன் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
மேலும் இந்த ஜோடி காதலை வெளிப்படுத்தி, இரண்டு வாரமே ஆகும் நிலையில்... இருவருக்கும் இன்று பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு இந்த ஜோடிகளை வாழ்த்தி உள்ளனர்.
சுரேந்தர் மற்றும் நிவேதிதா திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.