SJ surya: 7 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ். ஜே. சூர்யா..கதை எப்படிப்பட்டது தெரியுமா?
S. J. Surya new film direction: பிரபல இயக்குநர் எஸ். ஜே. சூர்யா 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
sjsurya
எஸ். ஜே. சூர்யா, ‘வாலி, குஷி’ மாதிரியான படங்களை இயக்கி தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை தமிழ் சினிமாவிற்கு நிரூபித்து காட்டியவர்.
sjsurya
இவர் இயக்குநர் என்பதை தாண்டி நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் வெளியான நியூ, நண்பன், இறைவி போன்ற படங்கள் இவருக்கு பாசிடிவ் விமர்சனங்களை பெற்று தந்தது.
sjsurya
இவர் ஹீரோவை காமெடி வேடங்களிலும் நடித்து வந்த வந்த எஸ்.ஜே.சூர்யா, அடுத்தடுத்து வில்லன், கவுரவ தோற்றம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
sjsurya
'ஸ்பைடர்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெறித்தனமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து, அடுத்தடுத்து வில்லன் வேடங்களில் நடித்து வந்தார்.
sjsurya
அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தினார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் தனுஷ்கோடி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருந்தார்.
sjsurya
சிம்புவைப் போல் இவரது கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மாநாடு படத்தில் இவரின் நடிப்பு திறமை மிகவும் பரட்டை பெற்ற நிலையில், இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
sjsurya
இந்த நிலையில், பிரபல இயக்குநர் எஸ். ஜே. சூர்யா 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
sjsurya
மேலும், இந்த படத்திற்காக கதாநாயகி, துணை நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
sjsurya
இந்த புதிய படம் காரை மையமாக வைத்து உருவாக உள்ளதாகவும், இதற்காக ஜெர்மெனியில் இருந்து புதிய கார் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இது தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.