Nita Ambani: முகலாயப் பேரரசர் ஷாஜகானின் ஆபரணத்தை அணிந்து வந்த நீதா அம்பானி! விலையை கேட்டா தலையே சுத்தும்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான நீதா அம்பானி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், முகலாயப் பேரரசரின் கல்கி ஆபரணத்தை தன்னுடைய கையில் வங்கி போல் அணிந்திருந்த நிலையில், இந்த ஆபரணத்தின் விலை பற்றிய தகவல் பலரை பிரமிக்கவைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு இவர் கருப்பு நிற பனாரசி ஜங்காலா புடவையை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த புடவை தங்க ஜரி மற்றும் இந்திய பட்டு ஆகியவற்றால் நெசவாளர்களால் நெய்யப்பட்டது. மேலும் மீனகரி வேலைப்பாடுகளுடன் நுட்பமாக நெய்யப்பட்ட அழகிய மலர்கள் மூலம் டிசைன் செய்யப்பட்டிருந்தது.
இந்த நேர்த்தியான அழகிய புடவையில், அதற்க்கு ஏற்றாப்போல் மிகவும் எளிமையான ஜாக்கெட் அணிந்திருந்த நீதா அம்பானி, தன்னுடைய ஜாக்கெட்டுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் முகலாயப் பேரரசர் ஷாஜகானின் தலை பாகையில் சூட்டப்படும் கல்கி என்கிற நகையை... தன்னுடைய கை வங்கியாக அணிந்து பலரையும் அசரவைத்தார்.
"13.7 செ.மீ உயரமும் 19.8 செ.மீ அகலமும் கொண்ட, நீதா அம்பானி அணிந்திருந்த இந்த கை வங்கி... வைரம், மாணிக்கங்கள் மற்றும் ஸ்பைனல் ஆகியவற்றைக் கொண்டு, உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பச்சிகாகம் நுட்பத்தைப் பயன்படுத்தி வைரங்களை கொண்டு மேற்கத்திய பாணியில் இந்த நகை டிசைன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீதா அம்பானி அணிந்திருந்த இந்த நகை ஒரு பொக்கிஷமாக பார்க்கப்படும் நிலையில்... தற்போது இதன் விலை சுமார் 200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. வித்தியாசமான நகைகள் மற்றும் பழங்காலத்து நகைகள் அணிவதில் ஆர்வம் கொண்ட, நீதா அம்பானி... ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் பார்ட்டியில், மிகப்பெரிய மரகத கல் பதித்த வைர ஹாரம் அணிந்திருந்தார்.
இதன் விலை சுமார் 500 கோடி என என கூறப்பட்டது. அதே போல் 'மிரர் ஆஃப் பாரடைஸ்' எனப்படும் மோதிரம் ஒன்றையும் அணிந்திருந்தார். இந்த வைர மோதிரம் புகழ்பெற்ற கோல்கொண்டா வைரச் சுரங்கங்களிலிருந்து கிடைத்த வைரங்களைக் கொண்டு உருவாக்கியது மற்றும் ஒரு காலத்தில் முகலாயப் பேரரசின் விரிவான நகை சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.