சென்னைல தான் நான் இயக்குனர்; இங்க இல்ல... என்னுடைய கதறலை கேட்டு உதயநிதி ஓடி வந்தார்- மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் இயக்குனர் மாரி செல்வராஜ், அதில் உள்ள சவால்கள் பற்றி பேசி இருக்கிறார்.
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த வெள்ள பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் தனித்தீவாக மாறி உள்ளன. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் இயக்குனர் மாரி செல்வராஜ், அதில் உள்ள சவால்கள் பற்றி பேசி இருக்கிறார்.
அவர் கூறியதாவது : “இது என் ஊர், என் மக்கள் இவங்க. நான் இயக்குனாராக வராவிட்டால் இங்கு தான் சுத்திக்கிட்டு இருந்திருப்பேன். இங்க இருக்கும் வரை நான் இந்த ஊர்க்காரன் தான். திரும்ப சென்னைக்கு போனா தான் நான் இயக்குனர். வெளியூர்ல இருந்து யார் யாரோ போன் போட்டு குடும்பத்த காப்பாத்துங்கனு என்னிடம் கதறுகிறான். மாரி அண்ணானு சொல்லி அவர் உதவி கேட்கிறான். அதுக்கு நான் ஏதாவது செய்யனும்ல. அதற்காக தான் இந்த களத்தில் இருக்கிறேன்” என கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதேபோல் அமைச்சர் உதயநிதி உடன் சென்றது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்து பேசிய மாரி செல்வராஜ், “அவர் என்னை அழைக்கல, நான் தான் அவரை கூப்பிட்டேன். என் கதறலை கேட்ட உடன் தான் அவர் சேலத்தில் இருந்து இங்கு வந்தார். அவரிடம் நிலமை ரொம்ப மோசமா இருக்குனு சொன்னேன். உடனே திருநெல்வேலிக்கு வந்து அங்கு ஆய்வு பணிகளை முடிச்சிட்டு எங்க ஊருக்கு வந்தார்.
இங்க அவர் வந்ததும் நிலைமையை விளக்கி சொன்னேன். இந்த நிலம் எப்படிப்பட்டது. இதில் மீட்பு நடவடிக்கை எவ்வளவு சவாலாக இருக்கும் என்பதையும் எடுத்து கூறினேன். அவர் வந்த பின்னர் தான் எங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்க ஆரம்பித்தது. அதுவரை யாரிடம் சொல்வது என தெரியாமல் இருந்தோம். அவர் வந்ததும் ஒரு பவர் கிடைத்தது. உடனுக்குடன் வேலை நடந்தது. நிறைய மக்களை காப்பாற்றினோம். அதனால எங்களுக்கு சந்தோஷம்” என மாரி செல்வராஜ் கூறினார்.
இதையும் படியுங்கள்... நல்லது செஞ்சது குத்தமா? மீட்பு பணியில் ஈடுபட்டதை விமர்சித்தவர்களுக்கு மாரி செல்வராஜ் கொடுத்த நெத்தியடி ரிப்ளை