2018 for Oscar 2024 : உண்மைக்கு சம்பவத்திற்கு கிடைத்த வரவேற்பு! ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளும் 2018!
2018 ஆம் ஆண்டு கேரள வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிக்கு குறித்து, வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட '2018' திரைப்படம், அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 Movie
மலையாள திரை உலகில், முன்னணி நடிகர்கள் பல நடிப்பில்... இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் '2018'. இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றதோடு, 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
Kerala Flood in 2018
இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் பாதிப்பால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மழை வெள்ளத்தின் போது, பகைமை, வசதி, ஏற்றத்தாழ்வு, என்பதை மறந்து மக்கள் ஒருவருக்கொருவர் உதவிய காட்சிகள்... ஒருவரை ஒருவர் காப்பாற்ற துடித்தது போன்றவை அதிகம் கவனிக்கப்பட்டது.
'லியோ' ஆடியோ லான்ச் ரத்து! நல்ல முடிவு... இது தான் உண்மை பின்னணி! பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்!
Affected Kerala People:
அதேபோல் சுமார் ஒரு மாதத்திற்கு மேல், கேரளாவில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பலர் உணவு, உடுத்த உடை, தங்க இடம், மின்சாரம் இல்லாமல் உடமைகளை இழந்து தவித்த காட்சிகளை தத்ரூபமாக இத படத்தின் மூலம் காட்டப்பட்டது. இந்த உண்மை கதைக்கு தற்போது பல சேர்க்கும் விதமாக, இப்படம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருது போட்டிக்கு, இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
True Story:
இந்த படத்தில் டோவினோ தாமஸ் ,தன்வி ராம், லால், நரேன், ஆசிப் அலி, கலையரசன், அபர்ணா பாலமுரளி, அஜய் வர்கீஸ், உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மிக சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் இப்படம் பல விருதுகளை பெரும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.