ஐடியா குடோன் ஜனனி... நந்தினிக்காக மாமியாரை மூலையில் உட்காரவைக்க முடிவு செய்த ஈஸ்வரி! எதிர்நீச்சல் அப்டேட்!
'எதிர்நீச்சல்' சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி, செப்டம்பர் 27ஆம் தேதி எபிசோடின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவர் இல்லாமல் எப்படி இந்த சீரியலை இயக்குனர் கரையேற்றுவார் என்கிற ஒருவித பயம் ரசிகர்களுக்கு இருந்தது. அதே போல் ரசிகர்கள் பலரும், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை எந்த நடிகராலும் நிறைவு செய்ய முடியாது என்று கூறி வந்தனர். இதுவரை குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்கிற, தகவல் வெளியாகாத நிலையில், இன்னும் சில தினங்களில் புதிய ஆதி குணசேகரன் யார் என்பது தெரியவந்துவிடும் என கூறப்படுகிறது.
ஆதி குணசேகரன் இல்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் நேற்றைய தினம், நந்தினி ஆதரவற்றோர் இல்லத்திற்கு சமையல் செய்து கொடுப்பது, விசாலாட்சி மூலம் கதிர் மற்றும் ஞானத்திற்கு தெரியவர, மிகப்பெரிய பிரச்சனை வெடிக்கிறது. இதுவரை மருமகளுக்கு ஆதரவாக இருந்த மாமியார் விசாலாட்சி தன்னுடைய மகன் குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதால் வில்லியாக மாறி, மீண்டும் பிள்ளைகளுக்கு ஆதரவாக பேச துவங்கி விட்டார்.
இதைத்தொடர்ந்து வெண்பாவும், தாராவும் விளையாடி கொண்டிருப்பதை பார்த்த கதிர்... வெண்பாவை வைத்து, புது பிரச்னையை இழுத்து விட்டார். இப்படி ரணகளமாக 'எதிர்நீச்சல்' தொடர் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோடும்... பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பது புரோமோ மூலம் தெரிய வந்துள்ளது.
நந்தினியிடம் தாரா நீங்க இங்கிருந்து போயிடுங்க அம்மா, என கூறுகிறார். பின்னர் ரேணுகாவின் மகளும் நீங்க இல்லாம இந்த வீடு எப்படி இருக்கும்னு அவங்களுக்கு தெரியணும் என தன்னுடைய சித்திக்கு ஆதரவாக பேசுகிறார். இதைத் தொடர்ந்து தாரா "ஜனனி சித்தி நீங்கதானே ஐடியா குடோன்... பட்டுனு முடிவெடுத்து எல்லாரையும் தூக்குங்க என கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து பேசும் விசாலாட்சி பேசும் காட்சிகள் காட்டப்படுகிறது. அவர் இனி இந்த வீட்டு பொம்பள ஒருத்தியும் வீட்டை விட்டு கால் எடுத்து வெளியில வைக்க மாட்டாங்க என கூறுகிறார் . இதை தொடர்ந்து பேசும் ஈஸ்வரி, இனிமே அது நான் முடிவு பண்ணிக்கிறேன் என மாமியாருக்கு எதிராக பேசி, அவரையே மூலையில் அமர வைக்க முடிவு செய்துவிட்டார் என தெரிகிறது. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D