வெற்றிமாறன் சொன்ன கிரிக்கெட் கதை.. மிஸ் ஆனதால் வருத்தப்படும் நடிகர் - மறுபடியும் உருவாக வாய்ப்பு இருக்கா?
வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி, அதில் வெற்றிகண்ட நல்ல பல இயக்குனர்கள் பட்டியலில் உள்ள ஒரு சிறந்த இயக்குனர் தான் வெற்றிமாறன். பொல்லாதவன் துவங்கி விடுதலை வரை அனைத்து படங்களும் அவர் பெயர் சொல்லும்.
Music Director GV Prakash kumar
இந்நிலையில் அவருடைய நடிப்பில் உருவாக இருந்த ஒரு திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ள ஒரு முன்னனி நடிகர். பிரபல இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ. ஆர் ரகுமானின் உறவினரான பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் கடந்த 2006ம் ஆண்டு வெளியான வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அன்று தொடங்கி இன்று வரை பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வந்த ஜிவி பிரகாஷ் குமார் தற்பொழுது இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார் என்றால் அது மிகையல்ல. மேலும் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் நடிகராகவும், கதையின் நாயகனாகவும் களம் இறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Pollathavan movie
இந்நிலையில் அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருந்த ஒரு திரைப்படத்தை பற்றி மனம் திறந்து உள்ளார். ஏற்கனவே பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட திரைப்படங்களில், இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பயணித்தவர் ஜிவி பிரகாஷ் குமார்.
Music Director GVP and Vetrimaaran
இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கத்தில் கிரிக்கெட் கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானதாகவும். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக அடுத்த கட்டத்துக்கு அந்த படம் நகராமல் போனது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் தற்போது மிகவும் பிஸியாக இருப்பதனால், அவருக்கு நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயமா அந்த படைப்பை எடுப்பார் என்றும், அதில் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிக்பாஸில் ரேகா நாயர் மட்டுமில்ல... பயில்வானும் இருக்காராம்பா? அலப்பறை கிளப்ப தயாரான விஜய் டிவி