எங்க வீட்டுக்கு வந்து பாத்தீங்களா... கணவரை பற்றி பயில்வான் கேட்ட கேள்வியால் கடுப்பான கீர்த்தி பாண்டியன்
கண்ணகி படத்தின் பிரஸ் ஷோ முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அப்படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியன், பயில்வான் ரங்கநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
keerthi pandian, Bayilvan
நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் சினிமாவில் தும்பா என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து அன்பிற்கினியாள் என்கிற படத்தில் நடித்தார் கீர்த்தி. இது மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அப்படத்திற்கு பின்னர் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கடந்த ஓராண்டாக எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், தற்போது கண்ணகி படத்தின் ரிலீஸுக்காக அவர் காத்திருக்கிறார்.
ashok selvan, keerthi pandian
கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி திரைப்படம் வருகிர டிசம்பர் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கீர்த்தி பாண்டியன் உடன் அம்மு அபிராமி, ஷாலின் சோயா, வித்யா பிரதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தோடு கீர்த்தி பாண்டியனின் கணவர் அசோக் செல்வன் நடித்த சபா நாயகன் திரைப்படமும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒரே நாளில் கணவன் - மனைவி படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆவதால் இரண்டு படங்கள் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
kannagi
இந்நிலையில், கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி திரைப்படத்தின் பிரஸ் ஷோ நேற்று திரையிடப்பட்டது. அதன் பின்னர் படக்குழுவினர் அனைவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், வழக்கம்போல் குண்டக்க மண்டக்க கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு நடிகை கீர்த்தி பாண்டியனும் தரமான பதிலடி கொடுத்து பயில்வானை வாயடைக்க செய்துள்ளார்.
kannagi movie poster
அதன்படி, வீட்டுக்குள்ள தான் கணவன் மனைவி சண்டைனா, இந்த வாரம் தியேட்டரில் ரெண்டு பேரோட படமும் மோதுதே என கேள்வி கேட்டார் பயில்வான். இதைக்கேட்டு கடுப்பான கீர்த்தி பாண்டியன், நாங்க சண்டை போட்டோம்னு எங்க வீட்டுக்கு வந்து பார்த்தீங்களா என கேட்டதும் சரி போட்டினு வச்சிக்கோங்க என பயில்வான் மழுப்ப, எங்களுக்கு இடையே போட்டியும் இல்ல சண்டையும் இல்ல என கீர்த்தி பாண்டியன் கூறினார். இதற்கு பயில்வானும், சண்டை வந்தால் தான் கணவன், மனைவி இடையே இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும் என சொன்னதும், அதை நான் வீட்லயே பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி கீர்த்தி பாண்டியன் அவரை வாயடைக்க செய்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படியுங்கள்... 15 வாகனங்களில் நிவாரண பொருட்கள்... வெள்ளத்தால் பாதித்த மக்களுக்காக சத்தமின்றி ரஜினிகாந்த் செய்த பேருதவி