அபிராமியை தீர்த்து கட்ட நடக்கும் சதி.. கார்த்தி மீது எழும் சந்தேகம் - கார்த்திகை தீபம் சீரியலில் செம டுவிஸ்ட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் டெட் பாடியை அடையாளம் காண போக அது அபிராமி இல்லை என்று தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் டெட் பாடியை அடையாளம் காண போக அது அபிராமி இல்லை என்று தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
zee tamil Karthigai deepam serial
அதாவது அபிராமியுடன் இன்றைய எபிசோட் தொடங்குகிறது. அபிராமி தூரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்து அங்கு படுத்திருக்கிறாள், ஐயர் கோவிலை மூட போகும் சமயத்தில் அபிராமியை பார்த்து யாரு நீங்க? கோவிலை மூடனும் என்று சொல்ல, அபிராமி வீட்டில் ஒரு பிரச்சனை அதனால் இன்னைக்கு மட்டும் இங்க தங்கிக்கிறேன் என்று அனுமதி கேட்க, ஐயரும் சம்மதம் சொல்கிறார்.
இதையும் படியுங்கள்... Ninaithen Vandhai : வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. எழில் செய்யும் உதவி - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்
Karthigai deepam serial Update
மறுபக்கம் ஐஸ்வர்யா ரியாவை சந்தித்து நீ எங்க கூட கூட்டு சேர்ந்துடு, அபிராமி எங்கே இருப்பாங்கனு எனக்கு தெரியும். அவங்க மனசு கஷ்டமா இருந்தா ஒரு கோவிலுக்கு போவாங்க, இப்பவும் அங்கே இருக்க தான் வாய்ப்பு இருக்கு, அங்கேயே வச்சு அவங்கள தீர்த்து கட்டிடலாம், மீனாட்சியை வீட்டை விட்டு வெளியே துரத்தி, இந்த வீட்டை நம்ம கண்ட்ரோல்ல கொண்டு வரலாம் என்று சொல்ல ரியா பயந்து நடுங்குகிறாள்.
Karthigai deepam serial Today Episode
ஐஸ்வர்யா அவளது மண்டையை கழுவி கூட்டு சேர்கிறாள், மறுபக்கம் ஆனந்த் நீ தான் அம்மாவை எங்கயோ மறைச்சு வச்சிருக்க, எனக்கு நல்லாவே தெரியும் என கார்த்தியிடம் சண்டையிடுகிறான். அபிராமி கோவிலில் திருப்பணி செய்து மன நிம்மதியை தேடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Sivaangi Krish : குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கிக்கு கல்யாணமா? அவரே போட்ட சமூக வலைதள பதிவு வைரல்