ஒரு வழியா இவரை தான் 'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்த ஆதி குணசேகரனாக இறக்க போகிறதாம் சன் டிவி! லேட்டஸ்ட் அப்டேட்
'எதிர்நீச்சல்' சீரியலில் யார் அடுத்ததாக, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார்? என்பதை கிட்டத்தட்ட சீரியல் குழு உறுதி செய்துவிட்டதாகவும், கடைசி கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஒருதகவல் கசிந்துள்ளது.
Kolangal Director Thiruselvam
'கோலங்கள்' சீரியலை இயக்கி, மிகவும் பிரபலமான இயக்குனர் திருச்செல்லாம், தற்போது இயக்கி, ஜீவானந்தம் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சீரியல் 'எதிர்நீச்சல்'. கடந்த ஆண்டு துவக்கப்பட்ட இந்த சீரியல், வெற்றிகரமாக சுமார் 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
Ethirneechal serial Marimuthu
இந்த சீரியலின் ஆணி வேராக பார்க்கப்பட்டும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மாரிமுத்து. ஆதி குணசேகரனாக, ஒரு ஆணாதிக்கம் நிறைந்த மனிதராக... மிகவும் தத்ரூபமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துவந்தாலும் , இவருடைய நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இடையிடையே இவர் அடிக்கும் காமெடி வேற லெவலில் இருக்கும்.
செம்ம மாஸ்..!! பிரபாஸின் அடுத்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் உட்பட.. 2 சூப்பர் ஸ்டார் நடிகர்கள்.!
Marimuthu Shocking Death
மாரிமுத்துவை விட, இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு சிறப்பாக யாராலும் நடிக்க முடியாது என ரசிகர்கள் பலர்
கூறி வந்தனர். இப்படி புகழின் உச்சியில் இருந்த... மாரிமுத்து கடந்த வாரம், 'எதிர்நீச்சல்' டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. யாருக்கும் அந்த விஷயத்தை சொல்லாமல், காரை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு அவரே சென்ற நிலையில், மருத்துவமனையை சென்றடைவதற்குள், அவரின் நிலை மோசமடைந்து, மருத்துவமனை கார் பார்க்கிக்கிலேயே மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார்.
Big Loss in Sun tv
பின்னர் மருத்துவர்கள் இவரை சோதனை செய்து பார்த்தபோது, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இவரின் இழப்பு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவரை பற்றிய தகவல்களும் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டது.
Next Athi Gunasekaran
இந்நிலையில் இவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து யார்? இவர் ஏற்று நடித்த குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்கிற கேள்வி எழுந்த நிலையில்... முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் வேல ராமமூர்த்தியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. பின்னர் இந்த தகவலை அவரே சமீபத்தில் கொடுத்த பேட்டியிலும் உறுதி செய்தார். எனினும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருவதால், இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வது சற்று கடினம் என்பதையும் தெரிவித்தார்.
Pasupathy
எனவே சீரியல் குழு, ராதாரவி மற்றும் பசுபதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கிட்ட தட்ட பசுபதி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும். இதற்கான பேச்சு வார்த்தை தான் தற்போது தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகும் வரை, எதுவும் உறுதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.