கெளதம் கைவிட்ட "பொன் ஒன்று கண்டேன்".. கையில் எடுக்கும் இயக்குனர் பிரியா - முக்கோண காதலில் இணைந்த பூங்குழலி!
Pon Ondru Kanden : பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படம் தான் பொன் ஒன்று கண்டேன்.
Pon Ondru Kanden
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாக துவங்கிய திரைப்படம் தான் "பொன் ஒன்று கண்டேன்". இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள், விஷ்ணு விஷால் மற்றும் தமன்னாவை கொண்டு இயக்கத் தொடங்கினார். ஆனால் சில காரணங்களால் தொடர்ச்சியாக இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் கைவிடப்பட்டது.
ஷண்முகத்திடம் இருந்து தப்பிக்க முத்துப்பாண்டி போடும் புதிய டிராமா.. அண்ணா சீரியலில் அடுத்த டுவிஸ்ட்
Director Priya
இந்நிலையில் அந்த படத்தின் தலைப்பை இயக்குனர் பிரியா அவர்கள் கையில் எடுத்திருப்பதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான "கண்ட நாள் முதல்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரியா என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த திரைப்படத்திற்கான பணிகள் துவங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Aishwarya Lexshmi
ஒரு முக்கோண காதல் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் அசோக் செல்வன், நடிகர் வசந்த் ரவி மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளதாகவும், பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
உதயநிதியின் 'கண்ணே கலைமானே' படத்திற்கு சர்வதேச படவிழாவில் கிடைத்த கௌரவ விருது!