அட்ரா சக்க... விஜய் டிவி கிழக்கு வாசல் சீரியலில் 18 வருடத்திற்கு பின் என்ட்ரி கொடுக்கும் சந்திரமுகி பட நடிகை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'கிழக்கு வாசல்' சீரியலில் புது நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'கிழக்கு வாசல்'. இதில் வெங்கட் ரகுநாதன் ஹீரோவாக நடிக்க, ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடித்து வருகிறார். மிகவும் முக்கியமான ரோலில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்.
ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியலை... எம்.என்.மனோஜ் குமார் என்பவர் இயக்கி வருகிறார். 100 எபிசோடுகளை கடந்து பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் தற்போது சந்திரமுகி பட நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி 300 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த, பிரகர்ஷிதா சுமார் 18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்த தகவல் வெளியான நிலையில், எந்த சீரியல் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது அவர் விஜய் டிவி தொடரான கிழக்கு வாசல் தொடரில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
மிகவும் அழுத்தமான ரோலில் நடிப்பதாக கூறப்படும் நிலையில்... இனி தொடர்ந்து அடுத்தடுத்த சீரியலில் நடிக்க முடிவு செத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் சந்திரமுகி படம் மட்டும் இன்றி, வேலன், ராஜ ராஜேஸ்வரி, செல்வி, என பல தொடர்களில் நடித்துள்ளார். பிரகர்ஷிதாக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.