Bhanupriya School Drop Out: பாக்யராஜால் ஏற்பட்ட அவமானம்.! பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்திய பானுப்பிரியா.!
நடிகை பானுப்பிரியா பள்ளி படிப்பை பாதியில் நிறுத்த காரணம், பிரபல இயக்குனர் பாக்யராஜ் தான் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 80-பது மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரபல நடிகை பானுப்ரியா. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த இவர், 1983 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான 'மெல்ல பேசுங்கள்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு முன்பு பானுப்பிரியா அறிமுகமாக இருந்தது, இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் ஒன்றில் தான். இப்படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்ட போது, பாக்யராஜ் பானுப்பிரியா படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
bhanupriya
பின்னர் லுக் டெஸ்ட் எடுத்தபோது, பானுப்பிரியா மிகவும் இளமையாக இருந்துள்ளார். அவருக்கு அப்போது 15 வயது தானாம். எனவே இந்த படத்திற்கு அவருடைய தோற்றம் சரிபட்டு வராது என கருதி, அப்படத்தில் இருந்து பானுப்பிரியாவை நீக்கி உள்ளார். பானுப்பிரியா ஆடிஷனில் செலெக்ட் ஆனதை, பள்ளியில் தன்னுடன் படித்த அனைத்து மாணவர்களிடமும் கூறி, நடிக்க உள்ள விஷயத்தையும் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது தெரிந்தால் மாணவர்கள் தன்னை கிண்டல் செய்வார்கள் என அவமானத்திற்கு பயந்து பள்ளி படிப்பையே பாதியில் நிறுத்திவிட்டாராம்.
இதை தொடர்ந்து முழுக்க... முழுக்க... பரதநாட்டியத்தில் கவனம் செலுத்திய பானுப்ரியா தீவிரமாக பட வாய்ப்புகளையும் தேடி வந்தார். இதை தொடர்ந்து தன்னுடைய 17 வயதில் தான் 'மெல்ல பேசுங்கள்' படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தன்னுடைய எதார்த்தமான அழகாலும், காந்த கண்களாலும் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த பானுபிரயா, இதைத்தொடர்ந்து 'தென்றல் தொடாத மலர்', 'ஆராரோ ஆரிரரோ', 'சிறையில் பூத்த சின்ன மலர்', 'புது மனிதன்', 'கோபுர வாசலிலே', 'சத்ரியன்', 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்' உள்ளிட்ட ஏராளமான படங்களில்... முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே... தன்னுடைய காதலர் ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறிய பானுப்பிரியா... தன்னுடைய மகள் அபிநயா பிறந்த கையோடு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து மகளுடன் சென்னைக்கு திரும்பினார்.
ஒரு காலத்தில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த பானுப்பிரியா... சமீப காலமாக தீவிர உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். குறிப்பாக நியாபக மறதியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் பேசும் வசனங்கள் மறந்து விடுவதால் பட வாய்ப்புகளை கூட ஏற்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பானுப்பிரியா பள்ளியை பாதியில் நிறுத்திய விவகாரம் பற்றி வெளியாகியுள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி... ரசிகர்கள் மத்தியில் அதிகம் படிக்கப்பட்டு வருகிறது.