காணொளி : வாகனத்திலேயே பெண் காவலர் மது அருந்தும் காட்சி...!
திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண்காவலர் ஒருவர், தன் சக காவலாளியுடன் சேர்ந்து,வாகனத்தில் அமர்ந்தபடி,மது அருந்தும் காட்சி வெளியாகி உள்ளது
இதில்,தன்னுடன் மது அருந்தும் சக காவலாளியே இந்த வீடியோவை எடுத்துள்ளதாக தெரிகிறது.அவருடைய முகம் மட்டும் மறைத்து விட்டு, பெண் காவலரை மது அருந்த வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் பெண் காவலரை மட்டும் வீடியோ எடுத்து வெளியிடப்பட்டு உள்ளதால், இந்த வீடியோ தற்போது அதிக நபர்களால் பகிரப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது