08:49 PM (IST) Jul 08

சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!

நடிகையும், பிரபல மாடலுமான, மலைக்கா அரோரா 48 வயதிலும் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து, மலைக்க வைத்துள்ளார். மேலும் பார்க்க...

07:09 PM (IST) Jul 08

கபாலீஸ்வரர் கோவிலில் இயக்குனருடன் மாலை மாற்றிக்கொண்டாரா மீரா மிதுன்? புகைப்படத்தோடு வெளியான தகவல்!

சர்ச்சை நாயகி மீரா மிதுனும், இயக்குனர் ஒருவருடன் சென்று... சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் மாலை மாற்றி கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க...

07:03 PM (IST) Jul 08

இரவில் குடித்துவிட்டு மட்டையான கணவன்... தினம் கள்ளக் காதலுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்த மனைவி.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு ஓய்வூதியம் பெற முயற்சித்த மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தினமும் குடித்துவிட்டு மனைவியை கணவன் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில் மனைவி வேறொருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் கணவனையே தீர்த்துக்கட்டியுள்ள கொடூரம் நடந்துள்ளது.மேலும் படிக்க

07:01 PM (IST) Jul 08

காளி தெய்வத்தையே கேலி பண்ணிட்டாங்க.. லீனாவை தூக்கி உள்ள போடுங்க.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய பஜக.

இந்துக்களின் காளி தெய்வத்தை இழிவுபடுத்தி புகைப்படம் வெளியிட்ட இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ஆவணப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.மேலும் படிக்க

07:00 PM (IST) Jul 08

ஓபிஎஸ் மனுவை அபராதத்துடன் ரத்து செய்ய வேண்டும்.. எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு.. பதற்றத்தில் பன்னீர்.

ஒருங்கிணைப்பாளர் பதவி தற்போது காலியாகி விட்டதால் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே பொதுக்குழுக் கூட்டபடுவதாகவும், இதை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அபராதத்துடன் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும் படிக்க

06:58 PM (IST) Jul 08

அதிமுக ரகசியங்களை திமுகவினரிடம் கூறிவருகிறார் கே.பி முனுசாமி.. பகீர் கிளப்பிய கோவை செல்வராஜ்.

அதிமுகவின் ரகசியங்களை திமுகவிடம் கூறி திமுகவின் கைக்கூலி போல செயல்படுகிறார் என கே.பி முனுசாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 7 முன்னாள் அமைச்சர்களும் கட்சியில் இருந்து பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க

06:55 PM (IST) Jul 08

இளையராஜா எம்.பி ஆகலாம் ஆனால் தாமரை மலராது தம்பி.. பாஜகவினரை வெறுப்பேற்றும் கே.ராஜன்.

இளையராஜா எம்பியாகலாம் ஆனால் தமிழகத்தில் தாமரை மலராது என அரசியல் விமர்சகரும், சினிமா தயாரிப்பாளருமான கே.ராஜன் கூறியுள்ளார். எம்.பி ஆகும் இளையராஜா தமிழகத்திற்காகவும், அல்லது சினிமாத்துறைக்காகவும் என்ன செய்யப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் படிக்க

06:53 PM (IST) Jul 08

அர்ஜூன் சம்பத் மன்னிப்பு கேட்று.. தமிழ்நாட்டுல நடமாட மாட்ட... போன் போட்டு எச்சரித்த விசிக ஒன்றிய செயலாளர்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை அயோக்கியன் என பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்ட வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் நடமாட முடியாத சூழல் ஏற்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மிரட்டியுள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

06:42 PM (IST) Jul 08

மலைக்க வைக்கும் பிரமாண்டம்... புல்லரிக்க வைக்கும் 'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியானது!!

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' பாகம் 1 படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி பார்ப்பவர்களை பிரமிக்க செய்துள்ளது. மேலும் படிக்க...

06:04 PM (IST) Jul 08

சுடிதாரில் மயக்கும் பிரக்யா நாக்ரா.. பட்டாம்பூச்சியாய் பறக்கும் நடிகையின் போட்டோஸ்..

சின்னத்திரையுடன் வலைத்தளத்தியும் ஆக்கிரமித்த இவர் எருமை சாணி டீமுடன் லாக் டவுன் காதல் என்னும் வலைத்தொடரில் நடித்து அதிக ரசிகர்களை பெற்று கொண்டார்.

மேலும் படிக்க...சுடிதாரில் மயக்கும் பிரக்யா நாக்ரா.. பட்டாம்பூச்சியாய் பறக்கும் நடிகையின் போட்டோஸ்..

06:02 PM (IST) Jul 08

ஹீரோ போட்டோ சூட் நடத்திய பிக் பாஸ் வெற்றியாளர் ராஜு!

தற்போது டிவி ஷோக்களில் பிசியாக இருக்கும் ராஜு, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அதற்காக பல போட்டோ சூட்டுகளையும் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்கள் தான் இவை.

மேலும் படிக்க...ஹீரோ போட்டோ சூட் நடத்திய பிக் பாஸ் வெற்றியாளர் ராஜு!

06:02 PM (IST) Jul 08

ஹீரோ போட்டோ சூட் நடத்திய பிக் பாஸ் வெற்றியாளர் ராஜு!

தற்போது டிவி ஷோக்களில் பிசியாக இருக்கும் ராஜு, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அதற்காக பல போட்டோ சூட்டுகளையும் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்கள் தான் இவை.

மேலும் படிக்க...ஹீரோ போட்டோ சூட் நடத்திய பிக் பாஸ் வெற்றியாளர் ராஜு!

05:36 PM (IST) Jul 08

அதிமுக பொதுக்குழு நடைபெறுமா..? ஜூலை 11 ஆம் தேதி காலை 9 மணி உத்தரவு

அதிமுக பொதுக்குழுவிற்கு தடைக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில் அன்று காலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

05:28 PM (IST) Jul 08

தலைவர்கள் மறைந்தால் தான் பதவிகள் காலியாகும் - ஓபிஎஸ் தரப்பு வாதம்

அதிமுக பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க கோரி சென்னை உயரநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் தர்ப்பில், அதிமுக கட்சியை பொறுத்தவரை தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலி என்று நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை 1987 மற்றும் 2016 ஆம் ஆண்டில் தான் ஏற்பட்டது. எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக உள்ளதாக வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:13 PM (IST) Jul 08

மாற்றுதிறனாளிகளிடம் அலட்சியத்துடன் நடக்கும் வங்கிகள்.. கோரிக்கை உடனே நிறைவேற்றுக.. மநீம வலியுறுத்தல்..

வாழ்வாதாரத்துக்காகப் போராடும் மாற்றுத் திறனாளிகளை, உரிமைக்காகவும் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளக்கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று மநீம வலியுறுத்தியுள்ளது.

05:05 PM (IST) Jul 08

தனித்திறமையால் ரசிகர்களை ஈர்த்த சீயான்..மகுடம் சூடிய படங்களின் லிஸ்ட் !

கென்னடி ஜான் விக்டர் என்னும் இயற்பெயரை கொண்ட விக்ரம் 1990-ம் ஆண்டு என் காதல் கண்மணி என்னும் படம் மூலம் அறிமுகமானார். இவரும் காதல் நாயகனாகவே என்ட்ரி கொடுத்தார். பின்னாட்களில் இவர் வெற்றி குறித்து பார்க்கலாம்..

மேலும் படிக்கச்...தனித்திறமையால் ரசிகர்களை ஈர்த்த சீயான்..மகுடம் சூடிய படங்களின் லிஸ்ட் !

05:05 PM (IST) Jul 08

தனித்திறமையால் ரசிகர்களை ஈர்த்த சீயான்..மகுடம் சூடிய படங்களின் லிஸ்ட் !

கென்னடி ஜான் விக்டர் என்னும் இயற்பெயரை கொண்ட விக்ரம் 1990-ம் ஆண்டு என் காதல் கண்மணி என்னும் படம் மூலம் அறிமுகமானார். இவரும் காதல் நாயகனாகவே என்ட்ரி கொடுத்தார். பின்னாட்களில் இவர் வெற்றி குறித்து பார்க்கலாம்..

மேலும் படிக்கச்...தனித்திறமையால் ரசிகர்களை ஈர்த்த சீயான்..மகுடம் சூடிய படங்களின் லிஸ்ட் !

04:54 PM (IST) Jul 08

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு... விக்ரம் தரப்பில் இருந்து மாரடைப்பு செய்தியை மறுக்கப்படுகிறதா?

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்க்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக... அவரது மேலாளர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட வில்லை என்றும், சாதாரண நெஞ்சுவலி மட்டுமே ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் படிக்க...

04:22 PM (IST) Jul 08

இந்த வருடத்தில் வெற்றி வாகை சூடிய முன்னணி நாயகர்களின் படங்கள் குறித்த தொகுப்பு!

இந்த வருடத்தில் வெளியாகி வெற்றியும், தோல்வியும் சந்தித்த முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்.

மேலும் படிக்க... இந்த வருடத்தில் வெற்றி வாகை சூடிய முன்னணி நாயகர்களின் படங்கள் குறித்த தொகுப்பு!

04:19 PM (IST) Jul 08

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவு... பிரதமர் மோடி இரங்கல்!!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். இதையடுத்து கழுத்தில் பலத்த காயமடைந்த ஷின்சோவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ஷின்சோ அபேவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், ஜப்பான் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ள