தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
- Home
- Tamil Nadu News
- Tamil News live : புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசு எதிர்க்கவில்லை - அதிர்ச்சி தகவல்
Tamil News live : புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசு எதிர்க்கவில்லை - அதிர்ச்சி தகவல்
தமிழக அரசு மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கவில்லை. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யவில்லை என்று கூறியிருக்கிறார் மத்தியக் கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்கார்.
அடுத்த 3 நாட்களுக்கு மக்களே உஷார்.. தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது.!!
டிகிரி அவசியம்.. 70 ஆயிரம் வரை சம்பளம்.. 100 % வேலை நிச்சயம் - மிஸ் பண்ணிடாதீங்க !!
மாணவ / மாணவியருக்கு இலவசமாக தாட்கோ மூலம் Medical Coding Training பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சசிகலா,டிடிவி தினகரன் மட்டுமல்ல.. எடப்பாடி குரூப்பில் ஸ்லீப்பர் செல்.!! ஓபிஎஸ் சொன்ன சீக்ரெட்!
ஈபிஎஸ் தரப்பால் நடத்தப்பட்ட பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை : தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. மத்திய அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி!
மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிர்த்துவருகிறது. குறிப்பாக, இந்த கொள்கையில் இடம்பெற்றிருக்கும் மும்மொழிக்கொள்கை போன்ற அம்சங்களை திமுக கடுமையாக எதிர்க்கிறது.
கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!
மதுரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையே காரணம் என திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
“மக்களிடம் உண்மையாக இருங்க.. 8 வழிச்சாலை சரியான திட்டம் தான் !” முதல்வருக்கு அறிவுரை கூறிய அண்ணாமலை!
காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
வரும் செப்டம்பர் 8ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
4 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து சீரழித்த அரசு பள்ளி ஆசிரியர்.. தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்
திருவண்ணாமலை சேத்துப்பட்டு யூகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஆஃபர்..! 50 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் !!
பிரியாணி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பிரியாணி என்று நினைத்தாலே நம் மனதில் பிரியாணியின் மனமும், சுவையும் வந்துபோகும். அப்படி நாவில் எச்சில் ஊற வைக்கும் பிரியாணியை விரும்பாத அசைவ பிரியர்கள் கிடையாது.
ஜார்கண்ட் எம்.எல்.ஏக்கள் மாயம் - முதல்வராகும் மனைவி ? பாஜக வலையில் சிக்குவாரா ஹேமந்த் சோரன் ?
முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பொன்னியின் செல்வன் முதல் பாகமே இவ்வளவு பெரிய படமா..! வெளியானது ரன்னிங் டைம்
பொன்னியின் செல்வன் படம் குறித்து ஒவ்வொரு அப்டேட்டாக தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் மொத்த 2 மணிநேரம் 50 நிமிடங்கள் ரன்னிங் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் முதல் பாகமே இவ்வளவு பெரிய படமா என வாயடைத்துப் போய் உள்ளனர். மேலும் படிக்க
சென்னையில் மஜாவாக நடந்து வந்த விபச்சாரம்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு
இளம்பெண்களை வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் செய்துத வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 8 பெண்கள் மீட்கப்பட்டனர்.
இந்த மனசு யாருக்கு வரும்... கோலிவுட்டில் புது டிரெண்டை உருவாக்கிய நடிகர் கார்த்தி - பாராட்டும் ரசிகர்கள்
பிசியான நடிகராக வலம் வரும் கார்த்தி, கோலிவுட்டில் தற்போது புது டிரெண்டை உருவாக்கி உள்ளார். வழக்கமாக நடிகர்கள் பிறநடிகர்களின் படங்களுக்கு பாடல் பாடுவது என்பது சகஜமான ஒன்று தான். ஆனால் நடிகர் கார்த்தி, சர்வானந்த் மற்றும் அமலா நடிப்பில் உருவாகி உள்ள கணம் படத்திற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளது மட்டுமின்றி, அப்படத்தை புரமோட் செய்யும் விதமாக அப்பாடலின் மியூசிக் வீடியோவிலும் நடித்துள்ளார். மேலும் படிக்க
தற்கொலைக்கு முயன்ற சிறுமி! அலேக்கா தூக்கி சென்று முட்புதரில் வைத்து புரட்டி எடுத்த கொடூரனுக்கு சரியான ஆப்பு.!
சென்னையில் தற்கொலைக்கு முயன்ற சிறுமியை கடத்தி பாலியல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதன்முறையாக பா.இரஞ்சித் படத்திற்கு ஏ சான்றிதழ்... நட்சத்திரம் நகர்கிறது படத்துல அப்படி என்ன இருக்கு?
நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. படத்தில் எல்லைமீறிய ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாம். பா.இரஞ்சித் இதுவரை இயக்கிய படங்களில் இந்த படம் மட்டும் தான் ஏ சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
நடிகை பிரியா பவானி சங்கருக்கு செம்ம தில்லு! ஸ்விட்சர்லாந்தில் காதலனுடன் ஸ்கை டைவிங் செய்து அசத்திய வீடியோ வைரல்
ஹெலிகாப்டரில் பறந்தபடி நடுவானில் இருந்து குதித்தபோது எடுத்த வீடியோவை பிரியா பதிவிட்டுள்ளார். முதன்முறையாக ஸ்கை டைவிங் செய்தது குறித்து தனது அனுபவத்தையும் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். செம்ம தில்லாக ஸ்கை டைவிங் செய்த நடிகை பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
சீமந்தம் செய்ய சொல்லி கேட்ட 7 மாத கர்ப்பிணி மனைவி.. ஜல்லிக் கரண்டியால் அடித்தே கொன்ற கணவன்
சீமந்தம் செய்ய சொல்லி கேட்ட கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவன் இக்கொடூரத்தில் ஈடுபட்டுள்ளார்.மேலும் படிக்க
ரயிலில் பெண் போலீஸ் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கழுத்து,மார்பில் சரமாரியாக குத்திய பூ வியாபாரி. .
பெண்கள் பெட்டியில் பூ வியாபாரம் செய்ய இடையூறு செய்து வந்த நிலையில் பெண் போலிசை கத்தியால் குத்தியதாக பூ வியாபாரி வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 23 தேதி மின்சார ரயிலில் பெண் போலீஸ் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் போலீஸ் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. மேலும் படிக்க
கள்ளக் குறிச்சி மாணவியின் தாய் முதல்வருடன் சந்திப்பு.. தலைமைச் செயலகத்திற்கே வந்து ஸ்டாலினிடம் முறையீடு.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி வரும் அவர் இது தொடர்பாக முதல்வரை சந்திக்கப் போவதாக தெரிவித்து வந்த நிலையில் இன்று தனது குடும்பத்தினரும் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார். மேலும் படிக்க
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யூ.யூ லலித் பதவி ஏற்றார்.. ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
இந்தியாவில் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித் இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.மேலும் படிக்க