Asianet News TamilAsianet News Tamil

4 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து சீரழித்த அரசு பள்ளி ஆசிரியர்.. தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

திருவண்ணாமலை சேத்துப்பட்டு யூகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Govt school teacher arrested for sexually assaulting 4 year old girl with chocolate
Author
First Published Aug 27, 2022, 6:29 PM IST

பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கான சட்டங்களை இயற்றியும் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிற அவலங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.பெண்களுக்கான பாதுகாப்பே கேள்விக்குறியாகும் வகையில் பல்வேறு அதிர்ச்சிகர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அருகே சேத்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மகள் வீட்டின் அருகே உள்ள ஸ்ரீசாந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகிறார். இந்த பள்ளியை சேத்பட் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மனைவி பிரபாவதி என்பவர் நடத்தி வருகிறார். காமராஜ் என்பவர் சேத்பட் அருகே உலகபட்டு கிராமத்தில் உள்ள அரசுபள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். 

Govt school teacher arrested for sexually assaulting 4 year old girl with chocolate

மேலும் செய்திகளுக்கு..வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !

தனது மனைவி பிரபாவதி நடத்தும் சாந்தா வித்யாலயா பள்ளிக்கு அடிக்கடி காமராஜ் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் 4 வயது பெண் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கபட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை மேற்கொண்டனர். இதில் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது சிகிச்சையில் தெரியவந்தது. குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 பிறகு குழந்தையிடம் விசாரித்த போது, பிரபாவதியின் கணவர் காமராஜ் என்பவர் 4 வயது குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து குழந்தைக்கு பாலியல் கொடுமையை செய்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி காமராஜை கைது செய்து, தற்போது விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 'திருவண்ணாமலை மாவட்டம் கெங்கை சூடாமணி கிராமத்தில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த 4 வயது குழந்தை பள்ளி தாளாளரின் கணவர் காமராஜ் என்பவரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உலகம் அறியாத மழலைக்கு மயக்க மருந்து கொடுத்து சீரழித்தவர்களை மனித ஜென்மமாகவே கருத முடியாது. 

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் ஆஃபர்..! 50 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் !!

Govt school teacher arrested for sexually assaulting 4 year old girl with chocolate

அதிலும் இந்த மிருகத்தனமான செயலை செய்த காமராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இவரைப் போன்றவர்கள் ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கு. குழந்தையை சீரழித்த ஆசிரியர் காமராஜ் கைது செய்யப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இது போதுமானதல்ல.  அவர் உடனடியாக வெளியில் வர முடியாதபடி குண்டர் சட்டத்தில்  சிறையில் அடைக்கப்பட வேண்டும்; போக்சோ வழக்கில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். 

பள்ளியின் தாளாளர் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்க முடியாது.  கணவனின் மிருகத்தனமான செயலுக்கு உடந்தையாக இருந்த  காமராஜின் மனைவியான பள்ளித் தாளாளரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்; அவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தாங்க முடியாமல் பள்ளி வளாகம் முன் பொதுமக்கள் கூடியிருப்பதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. உயரதிகாரிகளை அங்கு அனுப்பி பதற்றத்தை தணிக்கவும், இயல்பு நிலையை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”

Follow Us:
Download App:
  • android
  • ios