Asianet News TamilAsianet News Tamil

உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய சீமானுக்கு எதிராக பாயக்கிளம்பி பதுங்கிய விஜயலட்சுமி..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சும்மா விட மாட்டேன். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறேன் என கடந்த இரு தினங்களுக்கு முன் சவால் விட்டார். ஆனால், இரண்டு நாட்களாகியும் அமைதி காத்து வருகிறார் விஜய லட்சுமி.  

Vijayalakshmi sneaks up against the seeman
Author
Tamil Nadu, First Published Mar 6, 2020, 1:43 PM IST

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சும்மா விட மாட்டேன். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறேன் என கடந்த இரு தினங்களுக்கு முன் சவால் விட்டார். ஆனால், இரண்டு நாட்களாகியும் அமைதி காத்து வருகிறார் விஜய லட்சுமி.  Vijayalakshmi sneaks up against the seeman

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீரழித்து விட்டு  ஏமாற்றியதாக காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு அவ்வப்போது சீமானுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை விஜயலட்சுமி. இந்நிலையில் அவர் கடந்த 4ம் தேதி வெளியிட்ட வீடியோவில், ’நாம் தமிழர் கட்சி தம்பிகளா? என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க? ராஜீவ்காந்தியை இழிவு செய்துவிட்டு பிறகு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே போட்டு விடுவார்கள் என்ற பயமா? கொஞ்ச நேரத்திற்கு முன்பு ரஜினி சாருக்கு ஏதாவது நடந்தால் நாங்கள் துணை நிற்போம் என சொல்கிறீர்கள். என்ன செய்யப்போகிறீர்கள்? அவ்வளவு அசிங்கமாக தலைவரை திட்டிக் கொண்டிருந்தீர்கள்.  உங்க அண்ணன் சீமான் ரஜினியிடம் காசு வாங்கி விட்டாரா?Vijayalakshmi sneaks up against the seeman

காங்கிரஸ்காரர்களிடம் காசு வாங்கிவிட்டு மன்னிப்பு கேட்கிறீர்களா? நாம் தமிழர்கள் கட்சியில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் சொல்கிறேன். சீமானுக்கும் சொல்கிறேன். மூன்று வாரமாக வேலையை விட்டுவிட்டு நான் இங்கே பேசிக் கொண்டிருக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் ஒன்றுகூடிய உடனே அவரிடம் மன்னிப்பு கேட்கத் தோன்றுகிறது இல்லையா? அப்படி என்றால் நான் சும்மாவா? இது கொழுப்புதானே. இது பயங்கர கொழுப்பாக தெரிகிறது.Vijayalakshmi sneaks up against the seeman

ஆகையால் நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கப்போகிறேன். நீங்கள் மன்னிப்பு கேட்க போகிறீர்களா? உணர்கிறீர்களா? நைட் -இடியப்பம் சாப்பிட்டு விட்டு இருந்து வருகிறார். போராட்டம் அல்ல. என் உயிர் போகிற வரைக்கும் நான் உட்கார்ந்து போராடுவேன். சீமானை தூக்கி உள்ளே வைக்கிற வரை போராடுவேன். சாட்டை துரைமுருகனை கீழ்பாக்கத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டியதில்லை. சீமானை கீழ்ப்பாக்கத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். எதுக்குடா நினைவிடத்துக்கு போறீங்க? சீமானை அவ்வளவு எளிதாக விடமாட்டேன்’’எனத் தெரிவித்து இருந்தார்.

 

ஆனால், அவர் சொன்னது போல் எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை. அட அதுகூடப்பரவாயில்லை. சீமானை தாக்கி நாள்தோறும் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இப்போது அந்த வீடியோக்களும் வரவில்லை. விஜயலட்சுமி மிரட்டப்பட்டாரா? அவருக்கு என்னவாயிற்று? அல்லது அவரே பின் வாங்கி விட்டாரா? என அவரை ஃபாலோ செய்து வருபவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios