Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் புதிய கோவிட் மாறுபாடு FLiRT: இது மிகவும் ஆபத்தானதா? எப்படி தற்காத்துக் கொள்வது?

தற்போது இந்தியாவில், ஒமிக்ரானின் புதிய துணை வகை அடையாளம் காணப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானதா? இந்த பதிவில் பார்க்கலாம்.

New Covid Variant FLiRT in India: Is it More Dangerous? Tips to Stay Safe Rya
Author
First Published May 15, 2024, 6:02 PM IST

ஒவ்வொரு ஆண்டும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு உலகளவில் கொரொனா பரவல் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவில் புதிய மாறுபாடு பரவும் போது, இறப்பு, பரவும் தன்மை உள்ளிட்ட பல கவலைகள் எழுகிறது.

அந்த வகையில் தற்போது இந்தியாவில், ஒமிக்ரானின் புதிய துணை வகை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் இந்த மாறுபாடு பரவி வருகிறது. FLiRT என பெயரிடப்பட்ட இந்த புதிய கொரோனா மாறுபாடு பாதிப்பு மகாராஷ்டிராவில் 91 பேருக்கு உறுதியாகி உள்ளது.

கோவிட் புதிய மாறுபாடு FLiRT மிகவும் ஆபத்தானதா?

தற்போதுள்ள மாறுபாடுகளை விட FLiRT குழுவின் மாறுபாடுகள் மிகவும் ஆபத்தானவை என்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இந்தியாவில் காணப்படும் KP.2, அதன் ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி விளைவுகளிலிருந்து தப்பிப்பதை எளிதாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய மாறுபாடு குறித்து அச்சப்பட எந்த காரணமும் இல்லை என்றாலும், தேவையான அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் மேற்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் காபி, டீ குடிக்காதீங்க.. ICMR ஆய்வாளர்கள் எச்சரிக்கை..

புதிய கோவிட் மாறுபாடு FLiRTன் அறிகுறிகள்

தொண்டை வலி
மூக்கு ஒழுகுதல்
நெரிசல்
சோர்வு
காய்ச்சல் (குளிர்ச்சியுடன் அல்லது இல்லாமல்)
தலைவலி
தசை வலி
சில நேரங்களில் சுவை அல்லது வாசனை இழப்பு

கோவிட் FLiRT தடுப்பு குறிப்புகள்

நீங்கள் நெரிசலான இடங்களில் வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், கோவிட்-19 தொடர்பு மற்றும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. எனவே, வருந்துவதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது.

வைரஸ் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைச் சேர்க்கவும். வைட்டமின் சி, ஏ, துத்தநாகம் போன்றவற்றை அதிகமாகச் சேர்க்கவும். சரியான தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்கவும். வெளியில் இருந்து வரும்போதெல்லாம் கைகளைக் கழுவுங்கள். வெளியூர் செல்வதற்கும் வீட்டுக்குள்ளேயே தங்கும் போதும் உங்களின் ஆடைகளை தனித்தனியாக வைத்திருங்கள்.

பாலுடன் இந்த 5 உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க.. மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்..

குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் அதிகம். அவர்களுக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்யவும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் நீண்ட காலத்திற்கு நீடித்தால் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அறிகுறிகளின் கலவையானது விரைவாக நீங்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios