Asianet News TamilAsianet News Tamil

மாதவிடாய் காலத்தில் ஏன் தலைக்கு குளிக்கக்கூடாது? முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் கிடையாது..!!

முற்காலத்தில் நம் பெரியோர்கள் செய்த நடைமுறைகள் அனைத்தும் மூடநம்பிக்கை அல்ல. பல நடைமுறைகளுக்கு அறிவியல் காரணம் உண்டு. மாதவிடாய் காலத்தில் தலைக்கு குளிப்பதும் இதில் அடங்கும்

Do not take a bath on the third day of menstruation
Author
First Published Jan 13, 2023, 11:24 AM IST

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் இயல்பானது. படைப்பில் இது இயற்கையான செயல். முன்பெல்லாம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் கோவில்களுக்கு செல்லக்கூடாது, முடி வெட்டக்கூடாது என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அவர்கள் தலைக்கு குளிக்கக்கூடாது என்கிற விதியும் இருந்தது. 

மாதவிடாய் உள்ள பெண் மூன்று நாட்களுக்கு தலைக்கு குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த நவீன யுகத்தில் பெண்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பலர் மாதவிடாய் தொடங்கியதும், இயல்பான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கடந்த காலத்தில் பெண்கள் தலைக்குக் குளிக்கக் கூடாது என்பதற்கும் ஒரு காரணம் உண்டு. மாதவிடாயின் போது ஏன் தலைக்கு குளிக்கக்கூடாது என்பது பற்றிய தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

மாதவிடாயின் போது இரத்தப்போக்கு சீராக இருக்க வேண்டும். உடலில் உள்ள அழுக்குகள் வெளியேற வேண்டும். உடல் சூடாக இருந்தால் தான் ரத்தப்போக்கு சீராக இருக்கும். எனவே மாதவிடாயின் போது உடல் வெப்பநிலை சூடாக இருந்தால் நல்லது. இந்த நேரத்தில் தலைக்கு குளித்தால் உடல் குளிர்ச்சியடையும். சில பெண்களுக்கு மூன்று நாட்களும், சில பெண்களுக்கு ஐந்து நாட்களும் ரத்தம் வரும். மாதவிடாய் மூன்று நாட்கள் மிகவும் முக்கியமானது. குளித்துவிட்டு உடல் குளிர்ச்சியாக இருந்தால் ரத்தப்போக்கு சரியாக நடக்காது. நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளது. 

Do not take a bath on the third day of menstruation

மாதவிடாயின் போது இரத்தப்போக்கு சரியாக செய்யப்படாவிட்டால், மீதமுள்ள இரத்தம் உறைந்துவிடும். இது தொற்று மற்றும் வயிற்று வலிக்கு வழிவகுக்கும். பல முறை மருந்து மூலம் கட்டி அகற்றப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் ஒரு DNC தேவைப்படுகிறது. சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், இந்த கட்டிகள் புற்றுநோயாகவும் மாறும். 

இதையும் படிங்க: எண்டிங்கே இல்லாமல் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பெருங்காயம்..!!

இதனால் மாதவிடாய் காலத்தில் தலைக்கு குளிக்காமல் இருப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். குறைந்தது மூன்று நாட்களுக்கு தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால், மூன்றாம் நாள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். பொதுவாக, மூன்றாவது நாளில், ஓட்டம் குறைவாக இருப்பதால், உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தலைக்கு குளிக்க விரும்புபவர்கள் வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் குளித்தால், அவள் மலட்டுத்தன்மையடைவாள் என்று பெரியவர்கள் நம்பினர். இதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை. இதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் குளிப்பதற்கு ஆறுகள், ஓடைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. மாதவிடாயின் போது மிகவும் குளிர்ந்த நீரில் குளிப்பது இரத்த ஓட்டத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆற்றின் நீர் மிகவும் குளிராக இருப்பதால், மாதவிடாய் காலத்தில் தலைக்கு குளிக்கக் கூடாது என்று முன்னோர்கள் கூறினர். 

இதையும் படிங்க: சரும ஆரோக்கியத்தை காக்கும் ரோஸ் வாட்டர்...அறிந்ததும்... அறியாததும்..!!

Follow Us:
Download App:
  • android
  • ios