Asianet News TamilAsianet News Tamil

எண்டிங்கே இல்லாமல் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பெருங்காயம்..!!

இந்தியாவில் பருப்பு மற்றும் கிழங்கு வகைகள் சமைக்கப்படும் போது, பெருங்காயம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. நெஞ்சில் வாயு பாதிப்பு அதிகாமல் தடுப்பதற்கான செயலாக்கத்தில் பெருங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது.

asafoetida has various medicinal properties with huge health benefits
Author
First Published Jan 13, 2023, 10:32 AM IST

இந்திய சமையலறையில் பெருங்காயத்துக்கு பெரும் பங்கு உண்டு. குறிப்பாக சைவ உணவு சமையல்களுக்கு பெருங்காயம் சுவையூட்டியாகவும் நறுமண ஊட்டியாகவும் செயல்படுகின்றன. உணவு சுவை மற்றும் மணம் சேர்ப்பது மட்டுமில்லாமல், இதில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இதில் வைரஸ் எதிர்ப்புத் தன்மை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் நமக்கு எந்தந்த வகையில் பெருங்காயம் நன்மை சேர்க்கிறது என்பதை விரிவாக தெரிந்துகொள்வோம். 

வைரஸ் எதுவும் அண்டாது

விரைவில் கோடைக்காலம் துவங்கவுள்ளது. அப்போது ஒரு டம்ளர் மோரில் ஒரு துளி பெருங்காயத்தை போட்டு தினமும் குடித்து வருவது உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை சேர்க்கிறது. இதன்மூலம் உங்களுக்கு லாக்டோபேசில்லஸ் என்கிற நுண்ணுயிர் உடலில் உருவாகும். இது மனிதனுக்கு பல்வேறு வகையில் நன்மையை சேர்க்கக்கூடிய நுண்ணுயிராக அறியப்படுகிறது. இதன்மூலம் வைரஸ் பாதிப்புகள் எதுவும் உங்களை உண்டாது. பன்றிக்காய்ச்சலுக்கான மருந்து கூட பெருங்காயத்தில் இருந்து தயாரிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வாயுவை விரட்டும்

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சாப்பிடப்படும் காய்கறிகள், பருப்புகள் உள்ளிட்டவற்றில் வாயு உள்ளது. குறிப்பாக வாழைக்காய், சுண்டல், பட்டாணி, மொச்சை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்டவற்றில் வாயு அதிகம். அதனால் குறிப்பிட்ட காய்கறிகளை நீங்கள் சமைக்கும் போது ஒன்றரை ஸ்பூன் பெருங்காயத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் காய்கறிகளை சாப்பிடுவதனால் ஏற்படும் வாயு தொல்லை எதுவும் உங்களை அண்டாது. 

asafoetida has various medicinal properties with huge health benefits

வாயு வலியை போக்கும்

வாயு ஏற்படாமல் தடுப்பதை போல, பெருங்காயம் வாயு வலிக்கு சிறந்த நிவாரணத்தை வழங்கும். நெஞ்சின் மையப் பகுதியில் சிலருக்கு அடிக்கடி வாயு வலி ஏற்படும். அப்போது ஒரு துளி பெருங்காயம், உப்பு இரண்டு துளி, திப்பில் 4 துளி எடுத்து மாலை நேரத்தில் சாப்பிட்டு வரவேண்டும். ஒரு வாரம் முழுக்க சாப்பிட்டால் வாயு வலி உடனடியாக நீங்கிவிடும். இந்த நான்கும் செரிமானப் பிரச்னைகளையும் குணப்படுத்தும். 

இதையும் படிங்க: உடலுறவு முடிந்ததும் இதை செய்து பாருங்கள்- வாழ்க்கை அற்புதமாகும்

குடல் அழற்சியை நீக்கும்

சாப்பிட்ட உடனே மலம் வருவது, மலம் நீர் போல வெளியேறுவது உள்ளிட்ட பிரச்னைகளும் பெருங்காயம் சாப்பிடுவதால் குணமடையும். இது குடல் அழற்சி பிரச்னைகளால் ஏற்படுகிறது. அதனால் இந்த பாதிப்பு வரும் போது உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். அவர் உணவு முறையில் சில மாற்றங்களை செய்யச் சொல்வார். அதை பின்பற்றும் போது, உங்களுடைய உணவில் பெருங்காயம் பயன்பாட்டை அதிகரித்திடுங்கள். அது உங்களுக்கு உடலில் நல்ல முன்னேற்றத்தை தரும்.

மாந்தம் பிடிக்காது

பலரும் பிறந்த குழந்தைக்கு மாந்தம் பிடித்தால் தவித்துப் போய்விடுவார்கள். அதற்கு காரணம் பிரச்னையை எப்படி சரிசெய்வது என்று அவர்களுக்கு தெரியாது. ஆனால் பழங்காலங்களில் குழந்தைகளுக்கு மாந்தம் ஏற்படும் போது பெருங்காயத்தை உரசி தாயின் மார்பில் தடவி குழந்தையை பால் உண்ணும் படி செய்வார்கள். இதன்மூலம் குழந்தைகளுக்கு மாந்தம் பிடிப்பது மாறிவிடும். அதேபோல கக்குவான் நோய் பாதிப்பு ஏற்படும் போது கூட, பெருங்காயத்தை வைத்து முன்னோர்கள் வைத்தியம் பார்த்துள்ளனர். 

இதையும் படிங்க: Swami Vivekananda Jayanti 2023: துன்பம் இல்லா வாழ்க்கைக்கு விவேகானந்தர் சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios